தோட்டக் கலை

வீட்டு காய்கறி தோட்டத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்

காய்கறிகள் நம் அன்றாட வாழ்விற்கு மிகவும் முக்கியமானதாகும். அதுவும் குறிப்பாக சைவ உணவு உண்பவர்களுக்கு மிகவும் அவசியம். இவை உணவின் ஊட்டச்சத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் உணவின் சுவையை கூட்டுகிறது. ஊட்டச்சத்து வல்லுனர்களின் பரிந்துரைப்படி ஒரு வயதுவந்த நபர் சீரான திட்ட உணவிற்கு ஒருநாளைக்கு 85 கிராம் பழங்களையும் 300 கிராம் காய்கறிகளையும் உண்ணவேண்டும்.




ஆனால் தற்போதைய காய்கறி உற்பத்தியை கணக்கிட்டு பார்க்கும்பொழுது ஒரு நபர் ஒரு நாளைக்கு 120 கிராம் காய்கறிகளையே பெற முடிகிறது. மேற்கண்ட கருத்துக்களை மனதில் கொண்டு நாம் நமது அன்றாட வாழ்விற்கு தேவையான வீட்டுக் காய்கறி தோட்டத்தில் நம்மிடமுள்ள சுத்தமான தண்ணீர், சமையலறை அல்லது குளியலறை கழிவுநீரை பயன்படுத்தி உற்பத்தி செய்யலாம். இதன்மூலம் உபயோகமில்லாத தண்ணீர் தேங்கி நிற்பதையும், அதனால் ஏற்படும் சுகாதார கேட்டையும் சுற்றுசூழல் மாசுபாட்டையும் தடுக்கலாம். இதனால் பயனுள்ள வகையில் காய்கறி உற்பத்தியை மேற்கொள்ள முடிகிறது.

மிக குறைவான இடத்தில சாகுபடி செய்யப்படுவதால் மிக எளிதான முறையில் நோய் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும் பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. நோய் மற்றும் பூச்சி தாக்கிய பகுதிகளை அகற்றினால் போதுமானதாகும். இதனால் காய்கறிகளில் நச்சு ரசாயனங்கள் படிவத்தை தவிர்க்க முடிகிறது.

குளியலறை கழிவுநீர் வெளியேறும் இடத்தில் கல்வாழை மற்றும் சேப்பங்கிழங்கு செடிகளை வைத்தால் சோப்பு தண்ணீரை இந்த செடிகள் சுத்தமாகிவிடும் இவ்வாறு கழிவு நீர்களை நாம் இயற்கை முறையில் மறுசுழற்சி செய்வதினால் கழிவுநீர் என்பதே தேங்காது, இதனால் கொசுக்கள் உற்பத்தி குறையும் மற்றும் வீட்டில் எப்பொழுதும் குளிர்ச்சி இருந்து கொண்டே இருக்கும்.

 

திருஷ்டி விழுந்துவிடக்கூடாது என்பதற்காக குழந்தைகளில் கன்னத்தில் வட்டமாக கருப்பு நிறத்தில் ஒரு பொட்டு வைப்பார்கள். ஆனால் அது திருஷ்டி விழக்கூடாது என்பதற்காக மட்டுமல்ல,புதிதாக பிறந்த குழந்தைகளின் ரத்தத்னை உறிஞ்ச வரும் கொசு போன்ற ரத்த உறிஞ்சிகள் கன்னதில் கடிக்கும்போது வரும் கசப்பு கொசுக்களை குழந்தைகள் பக்கம் வராதபடி செய்யும் என்பதற்காக வைப்பார்கள்.




உண்மையில் வசம்பு ஒரு கிருமி நாசினி என்பதுடன் சிறந்த பூச்சிவிரட்டி. உங்க வீட்டில் கொசு அதிகம் இருக்கும் இடத்தில் வசம்பு மற்றும் வேப்பப்புண்ணாக்கினை சேர்த்து எரித்தால் கொசுக்கள் உள்பட சிறிய சிறிய பூச்சிகள் அந்த பக்கம் தலைவைத்துக்கூட படுக்காது . இது அனுபவ அறிவில் நாம் கண்டது. சாக்கடை அதிகம் உள்ள இடங்களில் மாலை நேரத்தில் வசம்பினையும், வேப்பபுண்ணாக்கினையும் வைத்து புகைப்போட்டால் நிச்சயம் சிறிய சிறிய பூச்சிகள் அண்டாது.

இதனால் கிராமங்களில் இருப்பவர்கள் வீட்டுத்தோட்டங்களையும் நகரங்களில் வாழ்பவர்கள் மாடித்தோட்டங்களில் காய்கறிகளை உற்பத்தி செய்யலாம்.

நீங்கள் இதை நீங்களும் முயற்சித்துப்பார்க்கலாம் முயற்சித்து பார்த்துவிட்டு எங்களுக்கும் தெரியப்படுத்தலாம்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!