Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 19

                                             19

” இங்கே ஐந்து நிமிடம்தான் டிரெயின் நிற்கும் பேபி .சீக்கிரம் இறங்கு …”

படியில் நின்று  பெட்டியை எடுத்து கீழே நின்றவன் கையில் கொடுத்துக் கொண்டிருந்தவள் வேகமாக வந்த அவர்கள் வீட்டு கார் டிரைவரை பார்த்து திகைத்தாள் .

இவர் எப்படி இங்கே …????




” முன்பே தகவல் கொடுத்து அவரை வரவழைத்துவிட்டுத்தான் என் பின்னால் வந்தீர்களா …? ” கோபத்துடன் கேட்டாள் .

“யெஸ் பேபி … நான் கிளம்பும் போதே அவரும் என்னுடன் கிளம்பி காரில் நம்மை தொடர்ந்து வந்து கொண்டிருந்தார் …”

” அப்படி என்ன நான் வருவேனென்ற நம்பிக்கை …? “

” அது நம் காதல் மேல் வைத்த நம்பிக்கை .இப்போது நீ கொஞ்சம் நகர்ந்து கொண்டால் இறங்க வேண்டியவர்கள் இறங்குவார்களே …” என்றவன் அவளது இடையில் தன் கைகளை கோர்த்து அவளை குழந்தையாய் தூக்கி ப்ளாட்பாரத்தில் இறக்கினான் .

இறங்குவதற்காக பின்னால் நின்றிருந்த வயதான பாட்டி ஒருவர் …” ஸ்வீட் லவ்வர் பாய் ….யு வார் வெரி லக்கி பேபி ….” என இருவரின் கன்னத்தையும் வருடிவிட்டு சென்றார் .

பெருமிதமாய் சட்டைக்காலரை உயர்த்திக் கொண்டவனை பொய் கோபத்துடன் பார்த்தவள் அவன் இழுவைக்கு கை கோர்த்தபடி காரில் ஏறினாள் .

” தொடாதே …தள்ளி நில்லு ….போன்ற சொற்களையெல்லாம் இனி மறந்துவிட வேண்டும் பேபி …” டிரைவரை சாக்கிட்டு காதை கடிப்பதாக பாவனை செய்து  நிஜமாகவே பேசி முடித்து காது மடல்களை கடித்தான் .

” ம்ப்ச் …தள்ளி நில்லுங்கள் .இன்னும் நாம் பேசவேண்டும் ….”

” இன்னுமா …? ஓ…ஜீசஸ் ….சேவ் மீ …” சிலுவை குறியிட்டுக்கொண்டான் .

” நீங்கள் பஸ்ஸில் வாங்க சேவியர் அண்ணா …” டிரைவரிடம் பணம் கொடுத்து அனுப்பி விட்டு காரில் ஏறி அமர்ந்து காரை எடுத்தான் .

” சொல்லு …,”

” எந்த சூழ்நிலையிலும் நம் உடன்பிறப்புகள் எடுத்த முடிவை நாம் எடுக்க கூடாது .எனக்கு சத்தியம் செய்து தாருங்கள் ….,”

” அப்படி ஒரு முடிவை நான் எடுப்பேனா சத்யா …? எதற்கு சத்தியமெல்லாம் …? “

” ரேச்சலுக்கும் , கண்ணனுக்கும் நீங்கள் அந்த வழியைத்தான் சொன்னீர்கள் …”

” அது …அவர்கள் சூழ்நிலை .கரோலின் அத.தை எதையும் புரிந்து கொள்ள மறுப்பவர் .இது போல ஒரு அதிர்ச்சி வைத்தியம் அவருக்கு அவசியமென்றுதான் அப்படி சொன்னேன் .நம் வீட்டு நிலைமை வேறு .அம்மாவை மனதில் வைத்துதான் நாம் முடிவெடுக்க வேண்டும் ….”

” உங்கள் அப்பா மட்டும் புரிந்து கொள்ளக்கூடியவரா …? ” மெல்லிய குரலில் கேட்டாள் .

” நாம் முயற்சித்தால் புரிந்து கொள்ள வைக்க முடியும் சத்யா .நமக்கு துணையாக ப்ரின்ஸ் வேறு இருக்கிறான் …”

சத்யமித்ரா மௌனமானாள் .அவள் முகத்தை பார்த்தவன் ….

” இன்னமும் உனக்கு தயக்கமென்றால் உன் சாந்தனுவை நினைத்துக்கொள் .நேற்று இரவிலிருந்து அழுது கொண்டிருப்பதாக தகவல் ….,” அலட்சியமாக ஸ்டியரிங்கை வளைத்தபடி சொன்னான் .




” என்ன ….? ஏன் ….? எப்படி …? நான் தூங்க வைத்துவிட்டுத்தானே ….”

” இந்தக் கேள்விக்குறிகளையெல்லாம் உன் பிள்ளையிடம் போய் போட்டுக்கொள் .இப்போது சத்தமில்லாமல் வந்தால் சீக்கிரம. போகலாம் ….”

” ஆமாம் …சீக்கிரம் …ப்ளீஸ் …சீக்கிரம் போங்க ….”

அவன் திரும்பி முறைத்தான் .தன் உதடுகளில் விரலை வைத்துக்கொண்டே ….

” சீக்கிரம் போங்க …” கெஞ்சினாள் .

V.A.estate டினுள் கார் நுழைந்த போது நன்கு விடிந்துவிட்டது .போர்ட்டிகோவில் காரை நிறுத்தி அவளை இறக்கி விட்டவன் …

” உள்ளே போ …காரை பார்க் பண்ணிவிட்டு வருகிறேன் …” என போனான் .

இந்த நேரம் ஆடம்ஸ் ஹாலில் உட்கார்ந்து காபி குடித்துக்கொண்டிருப்பார் ….சத்யமித்ராவின் நடை தயங்கியது .சாந்தனுவை நினைத்து கனத்த பாதங்களை கஷ்டப்பட்டு எடுத்து வைத்தாள் .

ஆடம்ஸ் ஹாலில்தான் இருந்தார் .ஆனால் அமைதியாக பேப்பர் படித்துக் கொண்டல்ல ….பேப்பர் விரிந்து கிடக்க …காபி ஆறிக்கொண்டிருக்க அங்குமிங்கும் டென்சனுடன் நடந்தபடியிருந்தார் .

மெல்லிய காலடி ஓசையில் திரும்பியவர் ….இவளை பார்த்ததும் ஒரு நிமிடம் திகைத்து பார்த்தபடியிருந்தர் .
பேசும் வழி தெரியாமல் விழித்து நின்றவளை வெறித்தவர் …ஏதோ நினைத்துக் கொண்டார் போல் புறங்கையை ஆட்டினார் ….

போ …போ …எனும் அறிகுறியாய் .ஆளை விட்டால் போதுமென வீட்டினுள் ஓடிவிட்டாள் சத்யமித்ரா .

மாடியில் ஜெபசீலியின் மடியில் படுத்து அழுது கொண்டிருந்த சாந்தனுவை கண்டதும் தயக்கமனைத்தும் பறந்துவிட ….வேகமாக அவனருகில் போய் அவனை இழுத்து தன் மடியில் போட்டுக்கொண்டாள சத்யமித்ரா .

அம்மாவின் மடி ஸ்பரிசம் உணர்ந்து சாந்தனு நிமிர்ந்து பார்த்து …” அம்மா ….,” என்ற அலறலுடன் அவள் கழுத்தை கட்டிக்கொண்டான் .

” என்னை விட்டு எங்கே போனீங்க …? ” அழுகையுடன் கத்தியபடி அம்மாவின் கன்னத்தில் முத்தமிட ஆரம்பித்தான் .

” எங்கேயும் போகலை கண்ணா .இதோ வந்துட்டேனே ….” மகனின் முத்தத்திற்கு பதில் முத்தங்களை வழங்கியபடி பதிலளித்தாள் .

சிறிதுநேரத்திற்கு பின்பே தங்களை சுற்றி உணர்ந்தனர் அன்னையும் மகனும் .அவர்கள் அருகே அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஜெபசீலியையும் , தள்ளி நின்ற ஆடம்ஸையும் , அப்பாவிற்கு பின்னிருந்த கிறிஸ்டியனையும் …

தனித்திருக்கும் தங்கள்  அறைக்குள் அனுமதியின்றி எட்டிப்பார்க்கும் அடுத்தவர்களை பார்க்கும் பார்வை பார்த்தனர் தாயும் , மகனும் …மற்றவர்களை .

” அம்மா …நாம் இங்கே இருக்க வேண்டாம் .வாங்க நம்ம வீட்டுக்கே போயிடலாம் …” சத்யமித்ராவின் கைகளை பிடித்து இழுத்தான் சாந்தனு .

அவனை சாமாதானப்படுத்த முடியாது உதவிக்கு கிறிஸ்டியனை பார்க்க அவன் சாந்தனு அருகில் சோபாவில் அமர்ந்து கொண்டு அவனை சமாதானப்படுத்த முயன்றான் .

” ப்ரின்ஸ் …அம்மா இனி எங்கேயும் போக மாட்டாங்க .இனிமேல் நீங்கள் இரண்டு பேரும் இங்கேதான் இருக்க போகிறீர்கள் ….” குரலில் அழுத்தத்தோடு அப்பாவை பார்த்தபடி சொன்னான் .

” அவன் ராத்திரியெல்லாம் தூங்கலை .அவனுக்கு சாப்பாடு கொடுத்து தூங்க வை ….” ஜெபசீலி சொன்னாள் .

” தூங்க வைத்துவிட்டு வா .உன்னிடம் பேச வேண்டும் ….” ஆடம்ஸ் சொல்லிவிட்டு கீழே இறங்கி போய்விட்டார் .




உடனே நாம் இங்கிருந்து போக வேண்டுமென அடம்பிடித்த சாந்தனுவை மிகக் கஷ்டப்பட்டு சமாளித்து …சாப்பாடு கொடுத்து அருகில் படுத்து தட்டிக்கொடுத்து தூங்கவைத்தாள் .

மிகுந்த அழுத்தத்துடனும் தன் கைகளை பற்றியபடி தூங்கிய குழந்தையை நெகிழ்வுடன் பார்த்தவள் , மெல்ல தன் கைகளை அவனிடமிருந்து உருவிக்கொண்டு கீழே வந்தாள் .

பேசத் தயாராக அமர்ந்திருந்த ஆடம்ஸின் முன்னால் நின்றாள் .

” என்னால் சாந்தனுவை விட்டு இருக்க முடியாது .தயவுசெய்து அவனை எனக்கு தந்துவிடுங்கள் .”கைகளை கூப்பி நின்றவளை   எரிப்பது போல் பார்த்தார் அவர் .

What’s your Reaction?
+1
1
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!