gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (09.04.24)

சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.இன்று அதிகாலை 12.36 வரை அமாவாசை. பின்பு இரவு 10.27 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று காலை 08.33 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

பணப்பற்றாக்குறையால் சிறு வியாபாரிகள் சிரமப்படுவீர்கள். நீங்கள் யாரை பெரிதாக நம்பி இருந்தீர்களோ அவர்களால் பயன் பெற மாட்டீர்கள். புதிய ஆர்டர்களைப் பெற வெளியூர் செல்வீர்கள். ஆனால் அலைச்சலால் சிரமப்படுவீர்கள். .வியாபாரத்தில் சின்னச்சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். வேலையாட்கள் பிரச்சனையால் தொழிலில் பாதிப்படைவீர்கள்.இன்று முருகப்பெருமானை வழிபட முயற்சிகள் பலிதமாகும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

 பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

ரிஷப ராசி அன்பர்களே!

அதிகரிக்கும் கடனைக் கட்டுக்குள் கொண்டுவரக் கஷ்டப்படுவீர்கள். வேலையிடங்களில் ஏதாவது பிரச்சனையால் தொந்தரவு அடைவீர்கள். உங்களிடம் உதவி பெற்றவர் எதிரியாக மாறி இம்சைப்படுத்துவார்கள். பணப் பிரச்சனையால் தூக்கம் வராமல் தவிப்பீர்கள். மாமனார் வீட்டுத் தொல்லையால் மனக்கவலை அடைவீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற சிரமப்படுவீர்கள்.
சிவபெருமானை வழிபட விருப்பங்கள் நிறைவேறும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

மிதுன ராசி அன்பர்களே!

எடுத்த காரியங்களை மளமளவென்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபத்தைப் பார்ப்பீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழில் அமோகமாக பலன் பெறுவீர்கள். வராக் கடன்கள் வசூலாகி பொருளாதார நிலையை மேம்படுத்துவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் கணிசமான பலனை பெறுவீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் ஆதாயம் பார்ப்பீர்கள்.மீனாட்சி  அம்மனை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

கடக ராசி அன்பர்களே!

கமிஷன் தொழில்களில் பெருகும் லாபத்தால் பிரமிப்படைவீர்கள். விவசாயப் பொருட்கள் விற்பனை மூலம் பெரும் பணம் பார்ப்பீகள். உதவி கேட்டு வருபவர்களுக்கு தட்டாமல் செய்வீர்கள். வேலையிடங்களில் உங்களின் திறமையை வெளிப்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கு உரிய பங்கை அடைவீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட, சிரமங்கள்  குறையும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

பிள்ளைகளின் விருப்பம் அறிந்து திருமண ஏற்பாடுகளைச் செய்வீர்கள். மனதுக்குப் பிடித்த பெண்ணை மணம் செய்ய பிடிவாதம் காட்டுவீர்கள். தொழிலுக்குத் தேவையான உதவிகள் பெற வெளிநாடு செல்வீர்கள். குடும்பத்தினர் உங்கள் மனதுக்கு இதமாக நடந்து கொள்வதால் மன நிம்மதி அடைவீர்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பணம் சேர்ப்பீர்கள். சந்திராஷ்டமம். கவனமாக இருங்கள்.
இன்று முருகப்பெருமானை வழிபட அதிக நன்மைகளைப் பெறலாம்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி ராசி அன்பர்களே!

வாகனங்களில் செல்லும்போதும் வளைவுகளில் திரும்பும்போதும் கவனத்தை சிதற விடாதீர்கள். உறவினர் வீட்டில் துக்க சம்பவங்களில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பேங்க் லோன் சாங்சன் ஆக தாமதமாவதால் பணம் புரட்ட சிரமப்படுவீர்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை எந்த இடத்திலும் விடாதீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாததால் குழப்பம் அடைவீர்கள்.மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் பிரச்னைகள் நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.

துலா ராசி அன்பர்களே!

குடும்ப குழப்பங்களை சிரமப்பட்டு களைவீர்கள். பெண்கள் எடுத்த காரியத்தைச் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரம் லாபம் குறையாமல் நடப்பதால் சேமிப்பை அதிகரிப்பீர்கள். வீடு வாகனத்திற்காக செலவு செய்வீர்கள். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை முடிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள்.லட்சுமி நரசிம்மரை வழிபட எதிலும் வெற்றியே கிடைக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.

விருச்சிக ராசி அன்பர்களே!

வேலைப்பளுவால் நேரத்திற்கு சாப்பிட முடியாமல் சங்கடப்படுவீர்கள். வியாபாரத்தை நிதானமாக நடத்துவீர்கள். அரசு வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவீர்கள். மாணவர்கள் சோம்பலை விடுத்து படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் நன்மை அடைவீர்கள். வருமானத்தை வைத்து கையிருப்பை அதிகப்படுத்துவீர்கள்.மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.

தனுசு ராசி அன்பர்களே!

எதிர்ப்புகளை விலக்கி செயல்களில் வேகம் காட்டுவீர்கள். உங்கள் ஆலோசனையை கேட்டு குடும்பத்தினர் நடப்பதால் குதூகலம் அடைவீர்கள். அதிகமாக உழைத்து வியாபாரத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். வெளியிடங்களில் கோபமான வார்த்தைகளை கொட்டாதீர்கள். கடின உழைப்பால் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட நினைத்தவை நிறைவேறும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

வங்கியில் இருந்து தேவையான நிதி உதவியை பெறுவீர்கள். உறவினர்களிடம் இருந்த மனத்தாங்கலை அகற்றுவீர்கள். காதலியின் மனம் கோணாமல் நடந்து கொள்வீர்கள். திட்டமிட்டுச் செய்வதன் மூலம் காரியத்தைக் கச்சிதமாக முடிப்பீர்கள். நன்மை தீமை பற்றி கவலை இல்லாமல் மற்றவர்களுக்கு உதவி செய்து தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.தட்சிணாமூர்த்தியை தியானிப்பதன் மூலம் நற்பலன்கள் அதிகரிக்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கும்பராசி அன்பர்களே!

தொழிலுக்கு எதிராகக் கிளம்பிய போட்டிகளை தவிடுபொடியாக்குவீர்கள். பிள்ளைகளால் எதிர்பாராத செலவு ஏற்பட்டு கடன் வாங்குவீர்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்படுவீர்கள். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு ஊழியர்கள் வேலை செய்வீர்கள். விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். அம்பிகை வழிபாடு அனுகூலமான பலன்களைத் தரும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மீனராசி அன்பர்களே!

துணிச்சலாக முடிவெடுத்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை நீங்கி குடும்பத்தில் குதூகலத்தை கொண்டு வருவீர்கள். திறமையான பேச்சின் மூலம் எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். பண வரவு அதிகரிக்க பல வழிகளில் முயற்சி எடுப்பீர்கள். தொழிலுக்கு தேவையான உதவியை நண்பர்களிடம் பெறுவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் குறையும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.




 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!