தமிழில் வரவேற்பு பெற்ற நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் விஜய். இவர் தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் விஜய்யின் திரைப்படத்தை பொருத்தவரை அதன் கதை அமைப்பு சிறப்பாக இருக்கிறதோ இல்லையோ விஜய்யின் திரைப்படத்தை பார்ப்பதற்காக ஒரு ரசிக்கப்பட்டாளம் இருப்பதால் அவரது திரைப்படங்கள் அவர் நடித்தாலே பெரும் வெற்றியை பெரும் திரைப்படங்களாக இருக்கின்றன.
பூவே உனக்காக திரைப்படத்தில் துவங்கி தொடர்ந்து ஒரு காதல் கதாநாயகனாகதான் வலம் வந்து கொண்டிருந்தார் விஜய். அப்போது காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, போன்ற காதல் திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார் விஜய்.
ஆனால் அவருடைய திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளும் அவ்வப்போது இருக்கும் என்று இருந்தது. இப்படி இருந்த விஜய்யை முழுக்க முழுக்க ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக மாற்றியது திருமலை மற்றும் கில்லி திரைப்படங்கள்.
படத்தில் இருந்து நீக்கப்பட்ட நடிகை:
திருமலையில் பலருக்கும் தெரியாத சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று நடந்திருந்தது. திருமலை திரைப்படத்தில் ஜோதிகாதான் கதாநாயகியாக நடித்திருந்தார். அது பலருக்கும் தெரிந்த ஒரு விஷயம்.
ஆனால் முதலில் ஜோதிகா அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் மனைவியான நர்மதா தான் அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.
மகேஷ் பாபுவை பொருத்தவரை அவருக்கு முகத்தில் பெரிதாக ரியாக்ஷனே வராது என்று எப்போதும் அவரை பலரும் விமர்சனம் செய்திருக்கின்றனர். ஆனால் அவரது மனைவிக்கும் கூட அதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது.
திருமலை படத்தின் பாதி படபிடிப்பு முடிந்த பிறகும் கூட நர்மதா அவ்வளவு சிறப்பாக நடிக்கவில்லை. இதனை பார்த்த இயக்குனர் தொடர்ந்து அவரை வைத்து படம் இயக்க மனமில்லாமல் பிறகு பாதியிலேயே அவரை படத்திலிருந்து நீக்கிவிட்டார் அதன் பிறகு ஜோதிகாவை வைத்து மீண்டும் அந்த காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு இருக்கிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1