தோட்டக் கலை

வீட்டிற்கு வேலி இப்படி போடுங்க..

தனியாக இருக்கும் வீட்டிற்கு பாதுகாப்பு என்றால் அது வேலி அமைப்பது தான். ஏனெனில் அதனால் வீட்டிற்கு ஒரு நல்ல பாதுகாப்பு கிடைப்பதோடு, வீட்டிற்கு ஒரு வித அழகும் தருகிறது. ஆகலே அவ்வாறு வீட்டிற்கு வேலி அமைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், செயற்கையாக செய்து கடைகளில் விற்பதை வாங்கி அமைப்பதை விட, அதற்காக இருக்கும் செடிகளை வாங்கி வளர்த்தால், வீட்டிற்கு பாதுகாப்பை தருவதோடு, ஆக்ஸிஜனும் கிடைத்து, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். இப்போது அத்தகைய வேலியை அமைக்க எந்த மரத்தையெல்லாம் வைத்தால் நல்லது என்பதைப் பார்ப்போமா!!!




மூங்கில் வீட்டில் பாதுகாப்பிற்கு வளர்க்கும் செடிகளில் மூங்கில் மிகவும் சிறந்த செடி. இந்த செடியை வீட்டிற்கு உள்ளே குறைந்த சூரிய வெளிச்சத்தில், மண் இல்லாமலும் வளரக்கூடியது. ஆனால் மூங்கில் உள்ள ஒரு வகையான செடிக்கு தண்டு பகுதி மிகவும் தடிமனாக, வேலி அமைக்க ஏற்றதாக உள்ளது. இந்த செடியை எளிதில் உடைக்கவோ, வெட்டவோ முடியாது. மேலும் இந்த மூங்கில் ஆசியாவில் பல முக்கிய இடங்கில் வேலியாக அமைக்கப்பட்டுள்ளது.




ஜப்பானீஸ் ஹோலி ஹோலி மரங்களில் பல வகைகள் உள்ளன. அவற்றில் ஜப்பானீஸ் ஹோலி வீட்டிற்கு வேலி அமைக்கப் பயன்படுகிறது. ஏனெனில் இதன் தண்டுகள் மிகவும் நெருக்கமாக இருப்பதால், அது வீட்டிற்கு பாதுகாப்பு தருவதற்கு ஏற்ற ஒரு சிறந்த மரம். இந்த ஹோலி வகைகளில் இந்த வகை மிகவும் உயரமாக வளர்வதால், இது வீட்டில் வேலி அமைப்பதற்கு ஏற்றது.

 

இங்கிலிஷ் ஐவி (படர்க்கொடி) இங்கிலிஷ் ஐவி மிகவும் விஷத்தன்மை வாய்ந்தது. அது பொதுவாக சுவர்களில் வளரக்கூடியது. இதனை வீட்டைச் சுற்றிக் கட்டப்படும் சுவர்களின் மேல் வளர வைத்தால், சிறந்த பாதுகாப்பானதாக இருக்கும். அதிலும் இங்கிலிஷ் ஐவியில் வீட்டில் வளர்ப்பதற்கு என்று ஒரு வகை உள்ளது. இதில் விஷத்தன்மை இல்லாமல் இருக்கும். ஏனெனில் வீட்டில் குழந்தைகள் இருப்பார்கள், ஆகவே விஷத்தன்மை இருப்பதை வைத்தால், உயிருக்குத் தான் பாதிப்பு ஏற்படும். மேலும் இந்த வீட்டில் வளர்க்கக்கூடிய இங்கிலிஷ் ஐவி, வேகமாக வளரக்கூடியது.

அமெரிக்கன் ஹோலி இந்த வகையான ஹோலி மரம் மிகவும் உயரமாக வளரக்கூடியது அல்ல. இருப்பினும் ஓரளவு உயரத்திற்கு வளரும் ஒரு குறுந்தாவரம் தான். இந்த செடி தன் நெருக்கமான இலைகளால் பாதுகாப்பைத் தருகிறது. ஆகவே இத்தகைய செடியை வீட்டில் வேலியாக வைத்தால், இதன் இலைகளை அடிக்கடி வெட்ட வேண்டும். இல்லையென்றால் புதர் போன்று வளர்ந்து, பின் விலங்குகள் அனைத்தும் தங்கும் இருப்பிடமாகிவிடும்.




க்ளிமேடிஸ் இயற்கை வேலி அமைக்கும் போது பச்சையாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். ஆனால் அவற்றில் ஒரு சில நிறங்களில் அமைத்தால் கூட நன்றாக கண்ணைப் பறிக்கும் வகையில் அழகாக இருக்கும். கொடிகளில் பூக்கும் பூக்களாலும் வேலிகளை அமைக்கலாம். இவற்றால் சரியான பாதுகாப்பு இல்லாவிட்டாலும், வேலியை மிகவும் அழகுள்ளதாக மாற்றும். அதிலும் இதனை மூங்கிலின் மீது படர விட்டால், மிகவும் அருமையாக இருக்கும். அதற்கு க்ளிமேடிஸ் என்னும் மலர் கொடி தான் சிறந்தது. இந்த கொடி ஊதா நிறத்தில் பூக்களை பூக்கும்.

ஆகவே மேற்கூறிய செடிகளை வைத்து வேலியை அமைத்து, வீட்டை அழகாக்குங்கள். மேலும் உங்களுக்கு வேறு எந்த செடிகளை வைத்து வேலி அமைக்கலாம் என்று தெரிந்தாலும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!