Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 29

29

 

 

 

தன்னை நேர்பார்வையாய் பார்த்தபடி வந்த சஸாக்கியை வெற்றி பார்வை பார்த்தாள் சரண்யா.. தன்கைகளை உயர்த்திவிரல்களை பார்த்தாள்.. நீளம் நீளமாக வளர்ந்திருந்த நகங்கள் இந்த நகத்தை அப்படியே அவள் தொண்டைக்குழியில் வைத்து அழுத்தி.. குரூரமாய் மின்னின.. அவள் விழிகள்..
அருகில் வந்தவளின் கழுத்தை நோக்கி தன் கைகளை உயர்த்தியபடி கொண்டு செல்ல, அவள் கைகளுக்கு அருகே தன் கழுத்து வந்ததும் சட்டென அவளது இரு கைகளையும் பிடித்து இழுத்து அவளை திருப்பி அவள் முதுகில் இரு கைகளையும் மடக்கி அவளை சுவரில் தள்ளி அழுத்தி பிடித்தாள் சஸாக்கி..
“என்னடி செய்ய நினைத்தாய்..? ம்.. சொல்லுடி..” ஒரு கையில் இரு கையையும் அழுத்தி பிடித்துக் கொண்டு மறு கையால் அவள் தலையை சுவரோடு அழுத்தினாள்..




“ஏ.. ஏ.. ஏய்..” நடப்பதை நம்ப முடியாமல் சரண்யா விழி விரித்து கத்தினாள்..
“கத்தாதேடி.. காட்டேரி.. கொஞ்ச நாட்களாகவே எனக்கு மனதில் நல்ல தெளிவுதான்டி.. எப்படி உன்னை அணுகுவது.. என்ன பேசுவது.. என்று குழம்பிக் கொண்டு தான்டி.. இருந்தேன்.. இன்றைக்கு நீயாகவே வந்து என் வலையில் மாட்டினாய்.. சொல்லு.. எனக்கு என்ன செய்தாய்..?”
“எ.. என்னை விடு.. சொ.. சொல்றேன்..”
“விடுறதா.. உன்னையா.. அது நடக்காதுடி.. இப்படியே எந்த அளவு பேச முடியுதோ அந்தளவு பேசு போதும்.. ஆனால் எல்லாவற்றையும் சொல்லி விடு ம்..”
“அ.. அது.. வந்து நா.. நான்.. பாலகுமரனை காதலிக்கிறேன்.. கல்யாணம் செய்து கொள்ள நினைக்கிறேன்..”
“இது எப்போதிருந்து..”
“அ.. அவரை முதலில் பார்த்த நாளிலிருந்து.. கிட்டதட்ட எட்டு வருடங்களாக..”
“ஓ.. சரி அதற்கு அவர் என்ன சொன்னார்..?”
“அ.. அவர்கிட்ட சொல்லவில்லை.. சொன்னால் மறுத்துடுவாரென்று பயந்தேன்.. அண்ணனிடம் சொன்னேன்.. அண்ணன் எனக்கு உதவுவதாக சொன்னார்.. பாலாவிற்காகவே நான் நிறைய படித்தேன்.. நிறைய உழைத்தேன்.. அவர்கள் வீட்டு வேலை.. ஆபிஸ் வேலைகள் எல்லாமே இழுத்து போட்டு செய்தேன்.. எல்லோரிடமும் நல்ல பெயர் வாங்க நினைத்தேன்.. எந்நேரமும் பாலாவோடு இருந்தால் அவர் கவனம்
என் பக்கம் திரும்பும் என அண்ணன் சொன்னான்.. அதுபடியே செய்தேன்.. எல்லாம் நன்றாகத்தான் போய் கொண்டிருந்தது.. நாங்கள் ஜப்பான் போகும் வரை..
அங்கே பாலா உன்னை பார்க்கும் வரை.. வெளிநாட்டில் பாலாவோடு சேர்ந்து சுற்றினால் அவரது மனது என் பக்கம் திரும்புமென நினைத்து நான் வந்தேன்..”




சரண்யா மனதில் நினைத்திருந்த முறை சஸாக்கிக்கு புரிய அவள்.. மனம் அருவெறுப்பில் சுருங்கியது..
“சீச்சி என்ன பொண்ணு நீ..? இப்படி நினைக்க வெட்கமாக இல்லை..?”
“ஏன்.. எதற்கு வெட்கம்..? என் பாலா.. அவரிடம் எனக்கென்ன வெட்கம்..? நீ மட்டும் ஜப்பானில் பாலாவை சந்திக்காமல் இருந்திருந்தால் ஜப்பானிலிருந்து வரும்
போது நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வந்திருப்போம்.. ஆனால் என் ஜென்ம சனியாய் இடையில் வந்துவிட்டாய்.. பாலா உன் கழுத்தில் தாலியை கட்டி விட்டான்.. அப்படியே விட முடியுமா..? கட்டிய தாலியை கழட்ட வேண்டுமே..”
“அதற்கு என்ன செய்தாய்..? எனக்கு எந்த நினைவும் இல்லை..”
சரண்யா மௌனமாக இருக்க.. “சொல்லுடி..” அவள் பின்னந்தலையை பிடித்து உலுக்கினாள்..
அப்போது கதவு தட்டப்பட, சட்டென சரண்யாவை நெருங்கி அவள் காதில் பேசினாள் சஸாக்கி..
“ஏய் இதோ பாருடி.. இப்போது வீட்டில் அகிரோட்டோ இருக்கிறார்.. அவர் முன் எந்த ரசாபாசமும் வேண்டாம்.. நான் வெளியே போகிறேன்.. நீ சத்தமில்லாமல் இந்த ரூமிலேயே இருக்கிறாய்.. அகிரோட்டோ சாப்பிட்டு முடித்ததும் திரும்ப உன்னிடம் வருவேன்.. நீயே உன் வாயால் என்னை என்ன செய்தாயென சொல்கிறாய்.. இல்லை உனக்கு கேடு காலம் ஆரம்பமாகி விட்டதென நினைத்துக்கொள்..”
சஸாக்கி பிடியை தளர்த்த அவளிடமிருந்து விடுபட்டுக் கொண்ட சரண்யா ஆசுவாசமாய் நிற்க, சஸாக்கி அவள் மீது பார்வையை வைத்தபடி கதவை திறந்தாள்.. வெளியே அபிராமி நின்றிருந்தாள்..
சரண்யா சட்டென கதவின் பின் பதுங்கிக் கொண்டாள்..




“இந்தா இதையெல்லாம் போட்டுக்கொண்டு டைனிங் ரூமுக்கு வா..” ஒரு டிரேயை நீட்டினாள்..
சஸாக்கி அதை திறந்து பார்க்க விலை உயர்ந்த சேலையும், நகைகளும் இருந்தன..
“எங்களுக்குன்னு ஒரு கௌரவம் இருக்கே..” நக்கலாக சொல்லியபடி அபிராமி போனாள்..
“என்னை பற்றி சொல்வாயெனநினைத்தேன்..” கதவு பின்னிருந்து வந்தபடி சொன்னாள் சரண்யா..
“அந்த நேரம் இப்போது இல்லை சரண்யா முதலில் நான் உன்னை பற்றி தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் மற்றவர்களுக்கு உன்னை
இனம் காட்ட முடியும்..”
“இப்படி குத்தலும், நக்கலுமாக பேசுகிறார்களே.. இவர்களோடு எப்படி உன் வாழ்க்கையை வாழ முடியும் சஸாக்கி.. யோசித்து பார்..” சரண்யா இப்போது தன் குரலில் குழைவை சேர்த்து மென்மையாக்கியிருந்தாள்.. மீண்டுமொரு வசியத்தை சஸாக்கியிடம் பரிசோதிக்க முனைந்தாள்..
“அதனை நான் பார்த்துக் கொள்கிறேன்.. இப்போது நீ கொஞ்ச நேரம் இங்கே இரு.. நான் வந்துவிடுகிறேன்..”
“அதெப்படி என்னை அப்படி நம்புகிறாய்..?”
“இதோ இப்படித்தான்..” சொன்னபடி சட்டென சரண்யாவை பிடித்து திருப்பி அவள் பின் கழுத்தை தட்டினாள் சஸாக்கி..
சரண்யா விழி சொருக மயங்கி விழுந்தாள்..




“இந்த நரம்பு வித்தையெல்லாம் சொல்லித் தந்த அகல்யா அக்காவிற்கு நன்றி சொல்ல வேண்டும்..” தனக்குள் பேசியபடி தனது அலங்காரங்களை ஆரம்பித்தாள் சஸாக்கி..
அரைமணி நேரத்தில் தன் அலங்காரத்தை முடித்து விட்டு, சரண்யாவை இழுத்து மறைவாக போட்டு விட்டு சஸாக்கி அறைக் கதவை திறந்த போது, எதிரே பாலகுமரன் நின்றிருந்தான.. அவன் விழிகள் குன்றின் மேல் குவிந்து எரியும் ஜூவாலையென மின்னின..
“சகி..” ஒற்றை சொல்லுடன் அவளை நெருங்கி ஆரத் தழுவினான்..
திடுமென்ற அவனது இந்த அணைப்பில் குழம்பி அவனை தள்ள முயன்றபோது அவன் அதற்கு அனுமதிக்க வில்லை..
“என் சகி..” என்ற குழறலுடன் நெற்றி, கன்னம், காது, கழுத்து என தன் இதழ்களை பதிக்க ஆரம்பித்தான்..
“ஷ் பாலா என்ன இது விடுங்க.. யாராவது பார்க்க போறாங்க..”
“பார்க்கட்டுமே.. அந்த கவலையெல்லாம் எனக்கு இல்லை சகி..” இன்னமும் அவளை இறுக்கி தன்னுள் பொதித்தான்..
“லவ் யூ டார்லிங்.. லவ் யூ டியர் சகி.. லவ் யூ கண்ணம்மா.. லவ் யூ செல்லம்..” விதம் விதமாக தனது காதலை சொன்னதோடு அதையே நிரூபிக்கும் விதமாக தன் இதழ்களை அகப்படும் அவள் உடல் பாகங்களிலெல்லாம் பதித்தபடி இருந்தன..
முதல் உள் நுழைகையில் வேண்டாமென்பது போலொரு வெடவெடப்பு முதலில் உடல் முழுவதும் அடர்ந்தாலும், பட பட என வாங்கி பழகியபின்
மூழ்கி முங்கும் இனிமை தன்மை கொண்ட அருவிக் குளியலை ஒத்திருந்தது அவனது அணைப்பு.. கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஆக்ரோச அன்பு குளியலுக்கு
தன்னை ஒத்துக் கொடுத்து கிறங்கிக் கொண்டிருந்தாள் சஸாக்கி..
“பாலா.. போதும் பாலா.. விடுங்க..” மென் குரலில் மிழற்றி புலம்பினாள்..
“விடுறதா.. உன்னையா..? அது இந்த ஜென்மத்தில் இல்லை சகி..”




உணர்ச்சி வசப்பட்டு பாலகுமரன் பேசிய பேச்சில் சிறிது தன்ணுர்வு மீண்டவள், மெல்ல அவனை தள்ளினாள்..
“வீட்டை விட்டு போன்னு என்னையும், பிள்ளையையும் விரட்டி விட்டு.. இப்போது இந்த கொஞ்சலா..?” கோபமாக கேட்டு அவனின் தழுவ துடித்த கைகளை தள்ளினாள்..
“அது அப்போ.. இது இப்போ.. யூ ஆர் வெரி ஸ்வீட் டார்லிங்..” அவளது தள்ளல்களை கண்டுகொள்ளாமல் மீண்டும் அவளை அணைக்க முயன்றபடி பேசினான்..
“அப்போவோ.. இப்பவோ.. என்னை தொட வேண்டாம்..” அவன் கைகளில் அகப்படாமல் ஒதுங்க முயன்றான்..
“அப்படி இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா..? வேண்டாம் சகி.. அந்த பனிஸ்மென்ட் மட்டும் எனக்கு தராதே..”
இருவரும் பேசியபடியே ஒருவரையொருவர் அணைக்க, தள்ள என முயல குட்டியாய் ஒரு இளவன் முறை அங்கு உருவானது.. சுவர் ஓரமாக வைக்கப் பட்டிருந்த பித்தளை ஜாடி மேல் அவர்கள் கால் பட்டு அது “ணங்” என்ற சத்தத்துடன் கீழே உருண்டது..
சத்தம் கேட்டு வந்த அபிராமி இருவரையும் பார்த்து முறைத்தாள்..
“குமரா.. என்னடா பண்றீங்க..? அகிரோட்டோ சாப்பிட வந்துவிட்டார்.. நீங்க என்ன செய்ய போகிறீர்கள்..?”
“ஹி.. ஹி.. ஒன்றுமில்லை அம்மா.. நீங்க போங்க.. இதோ வந்துவிட்டோம்..”
அபிராமி அவர்களை முறைத்தபடி செல்ல விழித்தபடி, சுவரில் ஒட்டி நின்று செல்லும் அபிராமியை பார்த்தபடி இருந்த சஸாக்கியை திடுமென நெருங்கி துடித்திருந்த அவள் இதழ்களின் மேல் அழுத்தமாக தன் இதழ்களை பதித்தான் பாலகுமரன்..
திடுமென வாங்கிய முத்தத்தில் அதிர்ந்து பின் கிறங்கி துவண்டவளை தாங்கி நிறுத்தி தோள் சேர்த்துக் கொண்டான்..
“வா போகலாம்..” கரகரத்த குரலில் பேசியபடி அவளை அணைத்துக் கொண்டே அழைத்து சென்றான்.
அகிரோட்டோவிற்கு உணவு பறிமாறும் போது, உபசரிக்கும் போது என எல்லா செயல்களிலும் மனைவியோடு தானும் இணைந்தே செயலாற்றினான்..
ஏதாவதொரு காரணத்தோடு இவனுக்கு என்னை உரசியபடியே இருக்க வேண்டும்.. பெருமிதமாகவோ.. சலிப்புடனோ இதனை நினைத்துக் கொண்ட சஸாக்கியின் மனம் அவனது அணைப்பில் கரைய துடித்த தன் உடலை உணர்ந்துதான் இருந்தது.. இவர்களது நெருக்கத்தில் அன்னலட்சுமி தனது மகிழ்வை மறைக்காது கண்களில் காட்டியபடி இருந்தாள்..
ஆனாலும் அவர்களது இந்த ஒட்டலை உரசலை கார்த்திகாவோ, திவாகரோ, அபிராமியோ கண்டு கொள்ளாமல் இருந்ததுதான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது..
இவர்களின் அன்னியோன்யத்தில், விருந்தோம்பலில் அகிரோட்டோவிற்கு வெகு திருப்தி..
விருந்து முடிந்த பின் பாலகுமரன், திவாகரனின் கை பற்றி குலுக்கியவர் மிக திருப்தியான மனநிலையில் இருப்பதை உணர முடிந்தது.. உணர்ச்சிகரமான
குரலில் சஸாக்கியை பார்த்தபடி முதலில் ஜப்பானில் பேசியவர், பிறகு அதனையே ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்..




“எங்கள் நாட்டு பெண்ணை தங்கமாக தாங்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. மிக சந்தோசமாக உணர்கிறேன்.. உங்களுடனான நமது தொழில் ஒப்பந்தம் என்
காலத்திற்கும் பிறகும் கூட தலைமுறை தலைமுறையாக நீட்டிக்கும்..”
சஸாக்கி தன் நிலை உணர்ந்தாள்.. பாலகுமரன் குடும்பத்தினரின் நடவடிக்கைக்கான காரணம் அவளுக்கு புரிந்தது.. மனம் வெறுத்து சீயென்றாக தன் கையை கோர்த்தபடி இருந்த பாலகுமரனின் கையை உதறிவிட்டு தன் அறைக்கு விரைந்தாள்..
என்னை இவர்கள் தொழிலுக்கு உபயோகித்து கொள்கின்றனரே.. நெஞ்சக் கொதிப்புடன் கட்டிலில் அமர்ந்து கொண்டவள் சிறிது நேரம் கழித்தே அதனை உணர்ந்தாள்.. அந்த அறைக்குள் மயங்கி கிடந்த சரண்யாவை காணவில்லை..
அதே நேரம் சஸாக்கியின் போன் ஒலிக்க எடுத்து பேசிய போது..
“உன் குழந்தை வேண்டுமென்றால் உடனே வா..” என ஒரு இடத்தை குறிப்பிட்டு அதிகாரமாக ஒலித்தது சாரங்கனின் குரல்..

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!