Cinema Entertainment Serial Stories

பூக்க தவறிய பூக்கள் -10 படாபட் ஜெயலட்சுமி




ஒரு பத்திரிக்கை பேட்டியில் சிவக்குமார்  பேசும் பொழுது படாபட் போன்ற துடிப்பான பெண்ணை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. அவரது மரணத்திற்கு முந்தைய ‘சொர்க்கம் நரகம்’ படப்பிடிப்பின் பொழுது கூட நான் மணிக்கணக்காக அவருடன் பேசி இருந்தேன். நீ ; இந்தத் துறைக்கு வா, உன் திறமையை வெளிப்படுத்து,, நிறைய புகழையும் ,பணத்தையும் சம்பாதித்துக்கொள். ஆனால் திருமண வாழ்க்கை இந்தத் துறைக்குள் வேண்டாம் அதை வெளியில் ஏற்படுத்திக் கொள் என்று தன்னுடைய காதலை தெரியப்படுத்திய ஜெயலட்சுமியிடம் நான் எவ்வளவோ எடுத்துக் கூறினேன். ஆனால் என்னுடைய போராட்டம் எல்லாம் வீணாய் போனது. கடைசி வரை அவர் என்னுடைய பேச்சை கேட்கவில்லை என்று மிகவும் ஆதங்கத்துடன் தன்னுடைய கருத்தை பதிவிடுகிறார்.   எது எப்படியோ வாழ்ந்திருக்க வேண்டிய ஒரு திறமையான நடிகை, அதாவது பூக்க வேண்டிய ஒரு பூ,  பூக்கவும் இல்லை .. மனம் பரப்பவும் இல்லை..  அந்தப் பூ உதிர்ந்து விட்டது.     என்ன கட்டுரையை முடிக்க போறேன்னு பாக்குறீங்களா, ‘ஓ’ உங்களுக்கு அந்த காதலனுடைய பெயரை சொல்லலையோ!! கட்டாயம் அதை நான் சொல்லித்தான் ஆகணுமா? .







சரி, சரி முறைக்காதீங்க. ‘குங்குமம் கதை சொல்கிறது’ படத்தின் நாயகன் தான் அவரது காதலன். என்னது அது என்ன படம்  என்று கேட்கிறீர்களா?

‘ஒ’ இதில் ஊத்தி கிட்ட அந்த படத்துக்கு நான் விமர்சனம் வேற எழுதனுமா? அதெல்லாம் முடியாது. நான் அவர் பெயரையே சொல்றேன் அவர் தாங்க ‘சுகுமார்’ ‘




என்னது எந்த சுகுமார் என்கிறீர்களா? ‘சரியா போச்சு போங்க’  காத குடுங்க ‘எம் ஜி சி சுகுமார்’ ………இதுக்கு மேலயும் உங்களுக்கு தெரியலனா, ‘சாரி’ , ‘எனக்கு எதுவும் தெரியாது’ ‘எனக்கு எதுவும் தெரியாது’ எனக்கு எதுவுமே தெரியாது. பை…. பை…பை




What’s your Reaction?
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!