Cinema Entertainment

ராதிகாவின் கர்ப்பம் அறிந்த பாக்யா…பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா காபியை ரசித்து ருசித்து குடித்து தனியாக பேசிக் கொண்டிருக்க ராதிகாவிற்கு சாப்பாடு கொண்டு வரும் இதை பார்த்து சிரிக்கிறார்.

மயூவை பார்த்த பாக்கியா வா மயூ என்று கூப்பிட்டு உட்கார உட்கார வைத்து சாப்பிட ஸ்னாக்ஸ் கொடுக்கிறார். மயூ அம்மாவுக்கு சாப்பாடு கொண்டு வந்தேன் என்று சொல்கிறார். அம்மா பாவம் வாந்தி எடுத்துகிட்டே இருக்காங்க‌. ஆனா எனக்கு சந்தோஷம்தான். என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட எல்லார்கிட்டயும் சொன்னேன் அவங்களும் சந்தோஷப்பட்டாங்க என்று கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பற்றி சொல்ல வர ராதிகா ஓடி வந்து தடுத்து வருகிறார்.




நீங்க ஏன் புளிப்பாவே சாப்பிடுறீங்க உங்களுக்கு சமைச்சதையே எனக்கும் கொடுத்துட்டாங்க பிடிக்கவே இல்லை என்று சொல்கிறார். ஏன் புளிப்பாவே சாப்பிடுறீங்க என்று கேட்க பாட்டி புளி அதிகம் சேர்த்து சமைச்சிட்டு இருப்பாங்க என்று சமாளிக்கிறார்.

அதன் பிறகு எழில் கல்யாண பங்க்ஷன் ஒன்றுக்கு கிளம்ப ஈஸ்வரியையும் வரிங்களா என்று அவர் பேசாமல் அமைதியாக இருக்கிறார். நிலா ஓடி வந்து பாட்டி என் டிரஸ் எப்படி இருக்கு என்று கேட்க உனக்கு என்ன அழகா இருக்க என்று ஈஸ்வரி சொல்ல அதைக் கேட்டு எழில் அமிர்தா சந்தோஷப்படுகின்றனர்.

திரும்பவும் ஈஸ்வரியை கல்யாணத்துக்கு கூப்பிட நான் உன்கிட்ட பேசறதே கிடையாது இதுல நீ கூப்பிடுற இடத்துக்கு வரணுமா என்று கோபப்படுகிறார். நீ நிலாவை வளர்த்து நல்லா படிக்க வைத்து கட்டுக்கொடி அதுல எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது ஆனால் என்னதான் இருந்தாலும் இவ உன் பொண்ணு கிடையாது வளர்ந்த பிறகு இவனுக்கு விஷயம் தெரிந்தால் உன்னை அப்பா என்று கூட கூப்பிட மாட்டா என்று பேசி காயப்படுத்துகிறார்.




அதன் பிறகு ராதிகா அம்மாவிடம் எதுக்கு மயூ கிட்ட சாப்பாடு கொடுத்து அனுப்பிச்ச என்று கோபப்படுகிறார். அவ எல்லார்கிட்டயும் உண்மைய சொல்ல இருந்தா என்று சொல்ல கமலா இன்னும் சொல்லலையா என்று கேட்கிறார். உடனே கோபியை வீட்டுக்கு வரவைத்து இருங்க மைக் கிட்ட சொல்லிட்டு வரேன் உங்க வீட்டுக்கு போய் ராதிகா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்லிடலாம் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

நீங்க எதுக்கு அத்தை நானே சொல்றேன் எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க கேட்க அதுவரைக்கும் மறைந்து வாந்தி எடுத்து மாத்திரை சாப்பிட்டு கொண்டு இருப்பாளா கேள்வி கேட்க கோபி கூடிய சீக்கிரம் சொல்லுறேன் என்று கூறுகிறார்.

பிறகு ராதிகா மொட்டை மாடியில் நின்று அம்மாவிடம் பேசிக் கொண்டிருக்க துணியை காய போட வந்த பாக்கியா பட்டும் படாமல் இதை கேட்டு விடுகிறார். பிறகு கீழே இறங்க வந்த ராதிகா தலை சுத்தி கீழே விழ போக பாக்கியா பிடித்துக் கொள்கிறார். உங்களுக்கு என்ன பிரச்சனை ஏன் இப்படி நடந்துக்கிறீங்க என்று கேட்க ராதிகா ஒன்னும் இல்லை என்று சமாளிக்க பாக்கிய நீங்க நடந்துக்கறது எல்லாம் பார்த்தா கர்ப்பமாக இருப்பவர்கள் நடந்துக்கிற மாதிரியே இருக்கு என சொல்கிறார். உண்மைய சொல்லுங்க நீங்க கர்ப்பமா இருக்கீங்களா என்று கேட்க ராதிகா டேட் தள்ளிப் போச்சு வாந்தி எடுக்கும் போது தான் அதையே கவனிச்சேன் டாக்டர் கிட்ட போய் செக் பண்ண போது கன்ஃபார்ம் பண்ணிட்டாங்க என்று சொல்கிறார். நாங்க ரெண்டு பேருமே இதை எதிர்பார்க்கல என்று சொல்ல பாக்யா நல்ல விஷயம் தானே என்று பேச ராதிகா கீழே இறங்கி வந்து விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!