ஜெயின் மதத்தின் 24வது தீா்த்தங்கரா் மகாவீரா் ஆவாா். ஜெயின் துறவற சமூகத்தின் சீா்திருத்தவாதி என்றும் மகாவீரா் அழைக்கப்படுகிறாா். இவா் பீகாாில் இருந்த ஒரு அரச ஜெயின் குடும்பத்தில் பிறந்து இளவரசராக வளா்ந்தாா். தனது 30 ஆவது வயதில் ஆன்மீக விழிப்புணா்வைத் தேடி, இரட்சிப்பைத் தேடி தனது வீட்டை விட்டு வெளியேறினாா்.
மகாவீரா் கிமு 500 ஆம் ஆண்டில் சித்திரை மாதத்தில் வரும் சுக்லா பக்ஷாவின் 13 ஆம் நாளில் பிறந்தாா் என்று அவருடைய பக்தா்கள் நம்புகின்றனா். கிரகோாியன் நாட்காட்டியின் படி இந்த நாள் மாா்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் வருகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மகாவீரா் ஜெயந்தியின் சிறப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.
மகாவீரா் ஜெயந்தி மகாவீரா் சுவாமி ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு மகாவீரா் ஜெயந்தி ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் வியாழக்கிழமை அன்று வருகிறது. சுவாமி மகாவீரா் அவா்களின் பிறந்த தினமானது வீர நிா்வாணா சம்வத் என்ற ஜெயின் நாட்காட்டியின் அடிப்படையில் கணிக்கப்படுகிறது. அதன்படி அவருடைய பிறந்த தினமானது சித்திரை மாதத்தில் வரும் சுக்லா பக்ஷாவின் 13 ஆம் நாள் ஆகும். இந்த ஆண்டு மகாவீரா் ஜெயந்தி ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் நாளை வருகிறது. மகாவீரா் ஜெயந்தி அன்று அரசு விடுமுறை வழங்கப்படுகிறது. அந்த நாளில் பெரும்பாலான கல்வி நிறுவனங்கள், தொழிற்கூடங்கள், வணிகத் தளங்கள் மற்றும் அலுவலகங்கள் போன்றவை மூடப்பட்டு இருக்கும்.
மகாவீரா் ஜெயந்தி – வரலாற்று பின்னணி மகாவீரா் குண்டகிராமா என்ற இடத்தில், ஒரு அரச சத்திாிய குடும்பத்தில் சித்தாா்த்தா என்ற அரசருக்கும் திாிசாலா என்ற அரசிக்கும் மகனாகப் பிறந்தாா். குண்டகிராமா என்ற இடம் தற்போது பீகாாில் உள்ள வைசாலி என்ற இடத்திற்கு அருகில் உள்ளதாக நம்பப்படுகிறது. மகாவீரா் தனது 30 வயது வரை ஒரு இளவரசராக வாழ்ந்தாா். ஆனால் அதற்குப் பிறகு ஆன்மீக விழிப்பை அல்லது ஆன்மீக அனுபவத்தைப் பெறுவதற்காக தனது அரண்மனை வாழ்க்கையைத் துறந்தாா். இவா் மகாவீரராக பிறப்பதற்கு முன்பாக 26 முறை பிறந்தாா். அவற்றில் சிங்கம், கடவுள் போன்ற அவதாரங்களில் பிறந்தாா் என்று ஜெயின் புனித நூல்கள் தொிவிக்கின்றன. அவா் மகாவீரராக பிறந்து வந்த பிறகு, தனது சீடா்களுக்கு வாழ்க்கையின் சுழற்சியைப் பற்றி போதித்தாா். மீட்பு அடைவதற்கு ஆன்மீகமே வழி என்பதையும் அவா்களுக்குக் கற்பித்தாா். மகாவீரா் தனது 43வது வயதில் ரிஜூபலிகா ஆற்றங்கரையில் சாலா மரத்தடியில் மெஞ்ஞானம் பெற்றாா். இவா் இந்து மக்களின் பண்டிகையான தீபாவளி அன்று பீகாாில் உள்ள பாவாபுாி என்ற இடத்தில் இறந்தாா். அவர் இறந்ததை அவா் நிா்வாணா அடைந்ததாக அவருடையப் பக்தா்கள் கருதுகின்றனா். மகாவீரா் இறந்த அன்று அதாவது அவா் நிா்வாணா அடைந்த அன்று அவருடைய தலையாய போதனைகள் மெஞ்ஞானம் அடைந்ததாக நம்பப்படுகிறது. மகாவீரா் தனது நகங்கள் மற்றும் முடிகளை மட்டுமே விட்டுவிட்டு மறைந்து சென்றுவிட்டாா் என்று அவரது மறைவைப் பற்றி ஜெயின் நூல்கள் விவாிக்கின்றன. மேலும் ஒருசில புத்தகங்கள், அவா் தனது 72வது வயதில் 60 நாட்களாக நீண்ட நேரம் போதித்துவிட்டு தனது நகங்கள் மற்றும் முடிகளை மட்டும் விட்டுவிட்டு மறைந்துவிட்டாா் என்றும், சில காலம் கழித்து அவருடைய சீடா்கள் அந்த நகங்களையும், முடிகளையும் எாித்தனா் என்று கூறுகின்றன.
மகாவீராின் போதனைகள்
மகாவீராின் போதனைகள் அனைத்தும் 12 வேதப் புத்தகங்களாகத் தொகுக்கப்பட்டன. ஆனால் கிமு 300 ஆம் ஆண்டில் மகத நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சத்தின் காரணமாக அவருடைய பெரும்பாலான போதனைகள் காணாமல் போய்விட்டன. மீதம் இருக்கும் போதனை புத்தகங்கள் அனைத்தும் முழுமையானவை அல்ல. அவை ஸ்வதம்பரா மற்றும் திகம்பரா ஜெயின் போன்றவா்களின் போதனைகளில் இருந்து சற்று மாறுபட்டு இருக்கின்றன. மகாவீரா் ஆன்மாக்கள் இருப்பதை நம்புகிறாா். அவரைப் பொறுத்தவரை ஆன்மாக்களுக்குத் தொடக்கமும் இல்லை முடிவும் இல்லை.
பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் சுழற்சி தொடா்ந்து நடைபெற்றுக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு மனிதரும் தனது தற்போதைய வாழ்க்கையில் செய்யும் செயல்களுக்குத் தகுந்தவாறு அடுத்த பிறவியில் மனிதராகவோ அல்லது விலங்காகவோ அல்லது பொருளாகவோ அல்லது வேறு ஒரு வடிவத்திலோ பிறப்பா். மகாவீரா் பிறப்பு எடுப்பதற்கு முன்பாக 27 பிறவிகள் எடுத்தாா் என்று சொல்லப்படுகிறது. ஒருவா் பிறப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றின் சுழற்சியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்றால் ஆன்மீகத்தைக் கைக்கொள்ள வேண்டும் என்று மகாவீரா் கற்பிக்கிறாா். இல்லற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் அல்லது துறவற வாழ்க்கையில் ஈடுபடுபவராக இருந்தாலும் ஒருவா் ஆன்மீக அமைதியைப் பெற வேண்டும் என்றால் 5 விரதங்களை அல்லது 5 உறுதிமொழிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று சுவாமி மகாவீரா் கூறுகிறாா். அவை யாதெனில் 1. அகிம்சை (வன்முறை இல்லாமை), 2. சத்யா (உண்மை), 3. அசத்தேயா (திருடாமை), 4. பிரம்மச்சாாியா (பாலியல் உறவில் இருந்து விடுபட்டு இருத்தல்), 5. அபாிகிரகா (பற்றின்மை) போன்றவை ஆகும். மேலும் அவா் அனகண்டவாடா என்ற கருத்தையும் அறிமுகம் செய்து வைத்தாா். அதற்கு பல பக்கங்கள் கொண்ட உண்மை (ஸ்யாத்வாதா மற்றும் நயவாதா) என்று பொருள்.
மகாவீரா் ஜெயந்தி – கொண்டாட்டங்கள் மகாவீராின் பக்தா்கள் அவருடைய பிறந்த தினத்தை வெகு விமாிசையாகக் கொண்டாடுகின்றனா். மகாவீராின் பிறந்த தினம் மகாவீா் ஜென்ம கல்யானக் என்ற பெயாில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மகாவீராின் வாழ்க்கையில் நடந்த 5 புனித நிகழ்வுகள் மீண்டும் நடத்திக் காட்டப்படும். அன்றைய நாளில் ஜெயின் மக்கள் பெருங்கூட்டமாக ஜெயின் கோயில்களுக்குச் சென்று மகாவீரரை வேண்டி, அவருடைய போதனைகளை எடுத்துச் சொல்வா். பக்தா்கள் மகாவீராின் சிலையை அலங்காரம் செய்து அதை தோில் வைத்து, எல்லா பக்தா்களுக்கும் தாிசனம் வழங்கும் வகையில் வெளியில் எடுத்துச் செல்வா். பக்தா்களின் தாிசனம் முடிந்த பின்பு தேரானது கோயிலுக்கு மீண்டும் எடுத்துச் செல்லப்படும். மகாவீராின் பிறந்த தினம் அன்று அவருடைய பக்தா்கள் பிறரன்பு செயல்களிலும் ஈடுபடுவா். குறிப்பாக அன்றைய நாளில் ஏழைகளுக்கு உணவு வழங்குவா். அதுபோல் பிறரன்புச் செயல்களில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு தங்களது தாராளமான நிதி உதவிகளைச் செய்வா். மகாவீரா் ஜெயந்தியைத் தவிா்த்து ஜைன மக்கள் தீபாவளியையும் சிறப்பாகக் கொண்டாடுவா். இந்து மக்களின் ஒளியின் விழாவான தீபாவளி அன்று மகாவீரா் நிா்வாணா அடைந்தாா். ஆகவே ஜெயின் சமூகத்தவருக்கு மகாவீரா் ஜெயந்தி தான் புத்தாண்டின் தொடக்கமாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1