உடல் அழகை – ஆரோக்யத்தை பாதுகாக்க, ரசாயனம் கலக்காத இயற்கை பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது. இதற்கு தாவரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய்கள் உதவுகின்றன. இவற்றில் முக்கியமானது தாமரை எண்ணெய்.
இது தாமரை மலர்கள் மற்றும் விதைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.
இந்த உள்ள ஒலிகோசாக்ரைடு, நமது சரும செல்களில் வளர்ச்சிக்கு உதவுகிறது. தவிர, சருமத்தின் இளமைக்கு தேவையான கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் ஆகியவற்றின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மேலும் சைட்டோகைன் உற்பத்தியை மேம்படுத்தவும் உதவும்.
ஆகவே செல்கள் புத்துயிர் பெறும். முகப்பரு, வடுக்கள் வராமல் தடுக்கப்படும். தாமரை எண்ணெய் முகத்திற்கு மட்டுமன்றி கை, கால்களுக்கும் பூசிக் கொள்ளலாம். இது தோலின் மேற்பரப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கும். நகங்களில் மேல் தடவினால் அவை உறுதியாகும்.
ட்ரை பண்ணி பாருங்க.. பலனை உணர்வீர்கள்!
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1