Uncategorized

இன்றைய ராசி பலன் (02.04.24)

சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 03.49 வரை அஷ்டமி. பின்னர் நவமி. இன்று மாலை 06.42 வரை பூராடம். பின்னர் உத்திராடம். கிருத்திகை ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

 

 

மேஷ ராசி அன்பர்களே!

வெளிநாட்டில் வேலை பார்த்தவர்கள் சொந்த நாடு திரும்பவீர்கள். மகளிர் குழுவில் கிடைக்கும் பணத்தை வியாபாரத்திற்கு பயன்படுத்துவீர்கள். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். தகப்பனாரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். தொழில்துறைக்கு தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணம் கொடுக்க மறக்காதீர்கள். கேஷ் கவுண்டரில் கவனமாக வேலை செய்யுங்கள். வியாபாரத்தில் யாரையும் கூட்டுச் சேர்க்காதீர்கள். தொழிலில் போட்டி வந்தாலும் அனுசரித்துப் போக தவறாதீர்கள். சந்திராஷ்டம நாள். ஆகவே எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்.சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

தடைபட்ட திருமணத்தை நடத்தி வைப்பீர்கள். வேலை இடத்தில் அக்கறையோடு பணி செய்வீர்கள். அரசு வேலைகளை தடங்கல் இல்லாமல் நடத்துவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் கலகலப்பை அதிகப்படுத்துவீர்கள். வியாபார உயர்வுக்கு கடுமையாக உழைப்பீர்கள். பணம் நகைகளை பத்திரமாக வைத்திருக்க மறக்காதீர்கள்.அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் பண உதவி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

வீம்பாக எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். நண்பர்களிடம் போட்டி போடாதீர்கள். வேலைகள் வேகமாக நடக்காததால் வேதனைப்படுவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நகராட்சியால் சிரமப்படுவீர்கள். விவசாயத் தொழிலில் முனைப்புக் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழில் சிக்கலை சந்திப்பீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் தாமதமாகவே பெறுவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எளிய முறையில் வியாபாரம் செய்து பெரிய லாபத்தைப் பெருக்குவீர்கள். பிள்ளைகளின் கல்வித் திறனால் பெருமையடைவீர்கள். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்களை கைப்பற்றுவீர்கள். நிலம் வாங்கி விற்கும் தொழிலில் உச்சம் தொடுவீர்கள். சிறிய முதலீட்டில் சிறப்பான பலனை அடைவீர்கள்.சூரிய பகவானை வழிபடுவது நலம் தரும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பதவியில் அமர்வீர்கள். அரசாங்க வேலையில் சேருவீர்கள். சுணக்கமாக இருந்த தொழிலை ஏற்றம் காணச் செய்வீர்கள். உங்கள் பேச்சுத்திறனால் மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். பிரிந்து இருந்த இருந்த கணவன் மனைவியைச் சேர்த்து வைப்பீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

அதிரடியான முயற்சிகளில் இறங்குவீர்கள். அதற்குரிய பலனை குறைவாகவே பெறுவீர்கள். சகோதர உறவால் தொல்லையை சந்திப்பீர்கள். அரசு வேலையில் இருப்பவர்கள் சிரத்தையுடன் பணி செய்வீர்கள். பதவி உயர்வுக்கு காத்திருப்பீர்கள். அலைச்சல் அதிகமானாலும் ஆர்டர்களை பெறுவீர்கள் . வாகனங்களை ஓட்டும்போது கவனத்தை சிதற விடாதீர்கள் .மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கியப் பிரமுகர்களிடம் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். தடைபட்ட வீட்டு வேலைகள் மளமளவென நடத்துவீர்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்வீர்கள். தொழில் போட்டிகளை துடைத் தொழிப்பீர்கள். நகை வாங்கிக் கொடுத்து மகளையும் மருமகனையும் மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். தேடி வந்த உறவுகளை நல்ல முறையில் உபசரிப்பீர்கள்.விநாயகரை வழிபட வெற்றிகள் வசமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

எளிதில் முடிய வேண்டிய செயல்கள் இழுபறியாக நடப்பதால் மனம் சஞ்சலப்படுவீர்கள். வேலையில் கவனமாக இல்லாவிட்டால் அரசு ஊழியர்கள் தண்டனைக்கு ஆளாவீர்கள். நில பிரச்சினைகள் சுலபத்தில் தீர்க்க முடியாமல் நிம்மதி இழப்பீர்கள். நியாயமாகப் பேசினாலும் உறவினர்கள் வெறுப்புக்கு ஆளாவீர்கள். கை மீறி போகும் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பீர்கள்.பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

இல்லத்தரசிகள் ஏட்டிக்குப் போட்டியாக நடப்பதால் மண்டை காய்ந்து போவீர்கள். உடல் ரீதியாக சின்னச் சின்ன உபாதைகளைச் சந்திப்பீர்கள். கடன் பிரச்சினைகள் அதிகரித்து கவலை அடைவீர்கள். பணிச் சுமைகளால் தூக்கம் கெடுவீர்கள். எதிர்பார்த்த வேலை தள்ளிப் போய் தடுமாற்றம் அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபட்டால் நஷ்டம் அடைவீர்கள்.துர்கை வழிபாடு நலம் சேர்க்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

தைரியமாகச் செயலாற்றி தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தொழில்துறைகளை திட்டமிட்டு முன்னேற்ற பாதையில் கொண்டு செல்வீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள். காதலிக்கு ஸ்கூட்டி வாங்கி கொடுத்து அன்பை உறுதிப்படுத்துவீர்கள். சகோதரனுக்கு ஏற்பட்ட பணப்பிரச்சனையை தீர்க்க பாடுபடுவீர்கள்.சிவபெருமானை வழிபடுவது நன்று.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

போட்டி பந்தயங்களில் அபார வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளின் சாதனையால் பெருமைப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு வந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கடன் சுமைகளை கட்டுக்குள் வைத்திருப்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். சுவையான உணவுகளை ருசித்து மகிழ்வீர்கள். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் செலவுகள் ஏற்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!