Serial Stories யாயும் ஞாயும் யாராகியரோ

யாயும் ஞாயும் யாராகியரோ-1

 1

வேக வேகமாய் அந்த நீதிமன்ற காரிடாரில் நடந்தாள் நிரல்யா. கறுப்புக்கோட்டு மடிப்புடன் இடதுகை முழங்கையில் அவள் வேகநடைக்கேற்ப ஊஞ்சலாடியது. லெமன் யெல்லோவில்  கருநீல பார்டர் இட்ட சில்க் காட்டன் ஸாரியும் கருநீலத்தில் ஹைநெக் ப்ளவுசும் கம்பீரத்தைக் கூட்டின. 

தன்னுடைய சீனியரின் கேபினுக்குள் நுழைந்தவளின் பார்வை வலதுபுறம் துழாவியது. சீனியரின் அறை.

“ஹேய்…வா! வா..! நிரல்யா? சீனியர் இன்னும் வரலை”

மேக்னா புன்னகையோடு வரவேற்று கையில் வாட்டர் பாட்டிலைத் திணித்தாள்.

“ஸ்..ஸப்பா “

நீரை அருந்தியவள்

“இந்த ட்ராபிக்கில் நீந்திக் கரை சேருமுன்னே எனர்ஜியெல்லாம் கரைஞ்சிடுது மேகி “

“இன்னிக்கு பதினொரு மணிக்கு உன்னுடைய “மீ டூ” கேஸ் தானே ! “

“ம்”

“சீனியர் வருவாரா “

“தெரியலையே! முந்தாநாள் டிஸ்கஸ் பண்ணினார். நானும் பாயிண்ட்ஸ் சொன்னேன். ஓக்கே செய்தார்”

“அப்புறமென்ன ஆல் தி பெஸ்ட்! தூள்கிளப்பு கண்ணு “

கை குலுக்கினாள்.

“வெங்க்கி எங்கே? நீயும் அவனும் தானே அந்த மினிஸ்டர் சொத்து கேஸ் எடுத்துருக்கீங்க”

“ஆமாம் அவனும் வர நேரம்தான்”

நிரல்யா அடுத்து தான் அப்பியர் ஆக உள்ள வழக்கின் கடைசிநேர தயாரிப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டாள்.

ஒரு  முன்னணி நடிகன் மீது ஒரு நடிகை தொடுத்த “மீ டூ “வழக்கு . ஷுட்டிங்கின் போதும் கேரவனில் வைத்தும் தன்னிடம் மிஸ்பிஹேவ் செய்ததாகவும் லவ்டார்ச்சர் தந்ததாகவும் வழக்கு தொடுத்திருந்தாள்.

மீடியா மொத்தமுமே தன் பார்வையை த் திருப்பியது. அந்த நடிகன் முன்னணி நடிகன் மட்டுமல்ல எந்த கிசுகிசுவிலும் மாட்டாதவன்.  சினிமா இலக்கியம் கலைகள் வரலாறு இப்படி எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவான் பத்திரிகையாளர்களிடமும் நல்ல நட்புடன் இருப்பவன். 

சீனியரின் நீண்டநாள் நண்பரின் மகன் அந்த நடிகன். அக்மார்க் நல்லவன் என்று பேரெடுத்தவன் மீது அந்த நடிகை வீடியோ கிளிப்புகளோடு குற்றம் சுமத்தியிருக்க வழக்கை கையிலெடுத்த சீனியர் தன்னுடைய பிரதம சிஷ்யை நிரல்யாவிடம் கொடுத்து விட்டார். இதில் அவரே அப்பியரானால் பெரும் புகழ் கிடைக்கும். அத்தனை ரசிகக்கூட்டம் அவனுக்கு. அவன் இதிலிருந்து மீள வேண்டும் என்று ரசிகர் மன்றக் கூட்டங்கள் பாலாபிஷேகம் முதல் நடையாத்திரை அன்னதானம் முடியிறக்கல் என்று பலவித விஷயங்களைச் செய்து கொண்டிருந்தது.

இப்பேர்ப்பட்ட வழக்கை சீனியர் அவளை நம்பிக் கொடுத்ததில் அவளுக்கும் பெருமைதான். அத்தனை சீக்கிரம் வருகின்ற புகழைத் தூக்கி தன் ஜுனியர்க்கு தாரை வார்க்க மனசு வருமா?

அவருக்கு இருந்தது. 

என்னுடைய ஜுனியர் என்பதில் பெருமை கொள்கிறவர்…

அவர் பேரையும் அவர் வைத்த நம்பிக்கையையும் காப்பாற்றனுமே! 

நிரல்யா கொஞ்சம் தடுமாறினாள்.நீண்ட மூச்செடுத்து பின்பு அம்மாவை 

சீனியரை மனதில் கொண்டு வந்து வணங்கிக் கொண்டாள்.இருக்கையை விட்டெழுந்து கறுப்புக் கோட்டை மாட்டிக் கொண்டு வெளியேறவும் அவளுக்கு முன்னே…. சின்ன மைக்குடன் பின்புறமாய் நடந்தபடியே….




“குட்மார்னிங் மேம்! இந்த கேஸை பற்றி சொல்லுங்களேன்” 

அவனுடைய ஐ.டி. கார்டு சட்டைப்பைக்குள் இருந்தது.

“கோர்ட்டில் நடக்க இருக்கிற கேஸ் பற்றி எதுவும் பேசக்கூடாதுன்னு உங்களுக்குத் தெரியாதா மிஸ்டர்”

“மிஸ்டர் “நிரூப்” உதயம் சேனல் ரிப்போர்ட்டர்”

நீ எதுவானாலும் இருந்து தொலை என்பது போல பார்த்தவளை

“மேம் ..ப்ளிஸ்! சின்னதா எதாவது சொல்லுங்க மேம். எங்க வியுயர்ஸ்க்காக”

“கோ டு ஹெல் “என்று முனகியவள் தன்னுடைய தோழனும் கொலீக்குமான இளஞ்சேரனிடம் கண்ணைக் காட்ட அவன் தம்ஸ்அப் காட்டினான். அவன் பார்வை போன திக்கில் வெள்ளை நிற ஆடி கார் ஒன்றிருக்க திருப்தியுடன் நீதிமன்ற அறையுள் நுழைய முயல்கையில்…

அவளை மறிப்பது போல்.

“ஆல்தி பெஸ்ட் நிரும்மா”

என்று கிசுகிசுத்தான் அந்த இளைஞன்.

“அண்ட் ஹேப்பி பர்த் டே”

முறைக்க முயன்றவள் தோற்றுப்போய் பூத்து வெடிக்க இருந்த புன்னகையை சட்டென்று மறைத்துக் கொண்டாலும் விழிகள் சதி செய்தன.

“தேங்க் யூ அஸ்வின்”

யாருமறியாமல் அவளின் கையை அழுத்தி விடுவித்தவன் நகர்ந்தான் நொடி நேர இடைவெளியில்…

நிரல்யாவின் முகம் சிவந்து போனது. தன்னை மீட்டுக் கொள்ள அவகாசமும் அவளுக்குத் தேவைப் பட்டது.

பேரன்பின் கலந்துரையாடல் க்ஷணநேரம் இருஜோடி விழிகளில் கரைந்து உருகியது.

ஏனோ அந்தக் குரலும் அது ஏந்தி வந்த செய்தியும் அத்தனை பிடித்தமாயிருந்தது. நிரல்யாவிற்கு.

தேவையான நேரத்தில் தேவையான  விஷயத்தை தேவையான விகிதத்தில் கலந்து முகிழ்க்கும் குரல் தனி ஸ்பெஷல்தானே.! 

அவனுடைய அந்தக் குரலும் அப்படிப்பட்டதுதான். 

பாதரஸ வழுவழுப்போடு மினுமினுப்பாகவும் கையின் அழுத்தக் கதகதப்பில் சேர்ந்து கலந்து அவளுள் இறங்கியது. 

நகர்ந்து சென்றவனை நிமிர்ந்து பார்க்க அந்த நொடிக்காகவே காத்திருந்தவன் போல கண்சிமிட்டிச் சிரித்தான் அந்த குறும்புக்காரன்.

மீண்டும் ஒருமுறை தன்னுள் சிவந்து போனவள் அதை வெளிக்காட்டாமலிருக்க முயன்று போராடினாள்.

வக்கீலானால் தான் என்ன? வாதிடும் திறமைதானிருந்தாலென்ன?  பெண்ணின் இயல்பு போய்விடுமா?  தன்னுடையவன் என்ற உரிமையாளன் முன்னே கன்னம் சிவந்துதானே போகும். 

தன் இருக்கையில் அமர்ந்து தன்னை மீட்டுக் கொண்டவள் கோப்பை விரித்து வைத்துக் கொண்டாள்.

நீர்வெளியொன்றின் மேற்பரப்பில் சிந்தாமல் சிதறாமல் உள்நுழையும் பிம்பமாய் அவளுள்ளே நுழைந்திருந்தான் அவன்.

இன்று நிரல்யா தனியாக வாதிடும் மூன்றாவது வழக்கு.  முதலிரண்டிலும் வாகை சூடியுள்ளாள் எனினும் இது மிகப் பிரபலமானவர் குறித்த வழக்கு என்பதால் எதிர்பார்ப்புகளும் ஹேஷ்யங்களும் ஊகங்களும் எக்கச்சக்கமாயிருந்தன. மீடியாக்களில் மீம்ஸுகளுக்கும் குறைவில்லை ஆதரித்தும் தாக்கியும் வழக்கை கிழித்துக் கொண்டிருந்தனர்.

நீதிபதி மாணிக்கவல்லி நாச்சியார் அமர்ந்து கொள்ள வழக்கு துவங்கியது. 

நடிகை தரப்பு வக்கீல்  நடிகரைத் தாக்கிப் பேச நிரல்யா அவரைப் பேசவிட்டு வேடிக்கை பார்த்தாள். தன்னுடைய கிளையண்ட் கண்ணகியின் மறுவடிவம் ஹரிச்சந்திரனின் பிரதி ரூபம் இப்போது நடிகரால்  ஏகப்பட்ட மனஉளைச்சலில் தன் தொழிலைக் கூட செய்ய முடியாமலிருக்கிறார்.  அதற்கும் நடிகர் நஷ்டஈடு தரவேண்டுமென முழங்கி விட்டு உட்கார்ந்தார்.

நிரல்யா நடிகையை விசாரிக்க கேள்வி கேட்குமுன்னரே கதறியழுதாள். 

படப்பிடிப்பில் அந்த நடிகன் தன்னை தொடக்கூடாத உடல் பாகங்களில் தொட்டு டார்ச்சர் செய்ததாகவும் படுக்கையறைக்கு அழைத்ததாகவும். அவன் ஆசைக்கு இணங்காவிடில் தன்னுடைய கேரியரையே முடக்கி விடுவதாக மிரட்டியதாகவும் சொன்னாள்.

வெளியே நடிகைக்கான அனுதாப அலை ஆர்ப்பரித்தது. சில மாதர் சங்கங்கள் கூட. பதாகைகளுடன் கொடி பிடித்தனர்.

நாயகனோ அவள் சொல்வதையெல்லாம் வெறுமையாகப் பார்த்தபடி கூண்டில் நின்றானே தவிர ஒரு வார்த்தை கூட பேசவேயில்லை. நிரல்யாவும் எதிர்தரப்பும் கேட்ட கேள்விகளுக்கு  சுருக்கமான பதிலையும் அந்த புகைப்படங்கள் வீடியோக்கள் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்டவை என்றும் சொன்னான். அவற்றையும் சமர்ப்பித்திருந்தாள் நிரல்யா .

வெளியே “தலைவா…தலைவா “என்று ரசிகர் கூட்டம் அலைமோதியது. 

நிரல்யா  எதுவுமே கேட்காமல் தன்னிடமிருந்த பென்ட்ரைவை நீதிபதியிடம் சமர்ப்பிக்க எதிர்தரப்பு ஆட்சேபித்தது. 

நீதிபதி அவரை அடக்கி விட்டு அதை ஓடவிட….

அதில்

நடிகையும் அவர் லாயரும் பேசுவது காணொளியாக பதிவாகியது ஒளிர்ந்தது.

“லாயர் ஸார்! இதுலே நான்தான் ஜெயிக்கணும். ஆனா நம்ம பக்கம் எல்லாமே ஃபேக் தான். நிற்குமா நம்ம சாட்சி.”

“கவலையே வேண்டாம் மேம்.  கண்டே பிடிக்க முடியாது. அத்தோடு சில மாதர் சங்கத்துக்கிட்டேயும் பேசியிருக்கேன் மேம். ஜமாய்ச்சுடலாம்.”

“எனக்கு அவன் மேலே கழுத்து மட்டும் கோவமிருக்கு ஸார். அவன் மட்டும் என் காதலை ஏத்துட்டு இருந்தா எதுக்கு இத்தனை ப்ரச்னை நானும் செட்டிலாயிருப்பேன். எனக்கென்ன அழகுக்கு குறைச்சல்.? என்னிடம் சொல்றான்…நான் குடும்பத்துக்கு லாயக்கு பட மாட்டேனாம். அதுக்குத்தான் அவன் பேரை நாறடித்து  நஷ்டஈடாவும் ஒரு தொகையைக் கறந்திடனும்னு…”

“கேஸ் நம்ம பக்கம் ஸ்ட்ராங் மேம்! கவலையே படாதீங்க முடிஞ்சா அவர் உங்களை கல்யாணம் பண்ணியே தீரணும்ங்கிற வரைக்கும் நான் கொண்டு போறேன். என்னை நம்புங்க”

காணொளி நின்றது

நடிகையின் முகம் வேர்த்துக் கொட்ட கிறீச்சிட்டாள் 

“இது பொய் பொய் “

அடுத்து அவள் வீட்டினுள்ளே லாயர் நுழைவதும் சற்று நேரம் கழித்து வெளிவருவதும் அதே தேதியில்  அதே நேரத்தில் பதிவான சிசிடிவி சமர்ப்பிக்கப்பட்டது. 




லாயர் நிரல்யாவை வன்மமாய்ப் பார்க்க அவளோ பொருட்படுத்தாமல் ஒதுக்கினாள். 

நடிகையின் குரலே அல்ல என்று அவர் வாதிட 

குரல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அது இருவரின் ஒரிஜினல் குரல் என்று சாட்சியை பதிவு செய்தனர். வீடியோவின் உண்மைத் தன்மையும் பரிசீலிக்கப் பட்டு  உறுதி செய்யப்பட… வழக்கின் போக்கு உறுதியாகி விட்டது. மதிய உணவு வேளைக்குப் பின் தீர்ப்பு அறிவிக்கப்பட… நிரல்யா வெளியே வந்தாள்.

ஏகப்பட்ட மைக்குகள் நீட்டப்பட புன்னகையோடு தவிர்த்து விட்டு தன் காருக்குள் நுழைந்து கொண்டாள். 

காரை ஸ்டார்ட் செய்த நொடி‌.. கார் ஜன்னல் கதவு தட்டப்பட்டது .




What’s your Reaction?
+1
23
+1
26
+1
2
+1
0
+1
4
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!