Serial Stories முள்ளில் ரோஜா

முள்ளில் ரோஜா- 21

    21

வானவில்லில் தோய்ந்திருந்த பொழுதுகள்
உன் வருகைக்கான சாத்திய கனவுகளில்
கறுப்பு வெள்ளையாகிக் கொண்டிருக்கின்றன ,
காணாமல் கரைந்து விட்டது
கவிழ்ந்து விட்ட …அல்லது
கவிழ்த்து விட்ட கணங்கள்  …
மதுரப் பொழிதல்களின்றி
நறநறக்கும் உப்புத்தாளென
வறண்டிருக்கின்றன கன்னங்கள் …
இன்னதென்று புரியாமல்
சத்தமிட்டு நா சுழட்டுகிறது
அந்த சுவர் மேல் பல்லி .




ரிஷிதரனை அருகில் நெருங்கவிடக்கூடாது என்று சாம்பவி  மிக உறுதியாக நினைத்தாலும் , அதனை அடிக்கடி அவளது  மனதிற்குள்தான் செய்ய முடிந்த்து . நேரில் செயல்படுத்துவதை மிக எளிதாக தனது இயல்பான தொடுகைகளின் மூலம் முறியடித்துக் கொண்டிருந்தான் அவன் .

காபி கப்பை கையை பிடித்து கொடுத்தான் .இயல்பாக தோள்களை தொட்டு திருப்பினான் . பேசிக்கொண்டிருக்கும் போதே தனது இருக்கையை அவளுடன் நெருக்கி போட்டுக் கொண்டு அவள் கைகளை உரசினான்  .உடனிருந்த இருவரும் அறியாமல் அவள் கன்னங்களை வருடினான் .

வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தவறாக தோன்றாத இந்த நெருக்கங்கள் , சாம்பவியை வதைத்துக் கொண்டிருந்த்து . வா …என்னிடம் வந்து விடு …என்பது போன்ற அழைக்காத அவனது அழைப்பில் தேகம் வெந்து ..நொந்து கொண்டிருந்தாள் அவள் .

அருகிலிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் , அவர்களது திருமணம் முடிந்த புதிதில் இருந்த அந்த ஆண்மையும் , வேகமுமான …கணவனை நினைவுறுத்தினான் .தேனாற்றில் குளித்தது போன்ற அந்த தித்திக்கும் நினைவுகள் சாம்பவியை வதைத்துக் கொண்டிருந்தன.அவளது நிலைமையை உணர்ந்து கொண்டே வேண்டுமென்றே தனது நெருக்கங்களை அதிகபடுத்தினான் .

இவனை விட்டு விலக வேண்டும் ….இவனருகே போக கூடாது …ஜபம் போல் இதனை அடிக்கடி தனக்குள் சொல்லிக்கொண்டாள் சாம்பவி .ஆனால் அது போன்ற இவளது விலகல்களை முன்பே ஊகித்து அதனையும் செய்யவிடாமலாக்கினான் .

தனது நீண்ட பின்னலையும் சேலையோடு சேர்த்து இடுப்பில் சொருகியபடி அந்த சிறிய அலுமினிய ஏணியில் ஏறி ஸ்லாப் மேலே அடுக்கப்பட்டிருந்த டைல்ஸ் பெட்டிகளை சரி பார்த்தாள் சாம்பவி .

” ஹேய் என்ன பண்ணுகிறாய் …? ” கீழிருந்து ரிஷிதரன் குரல் கொடுத்தான் .

” இன்று வந்த பெட்டிகளை எண்ணுகிறேன் ….”

” அதெல்லாம் எண்ணி ஏற்றி வைத்த பெட்டிகள்தானே …? “

” ம் ..இன்று அந்த பையன் எண்ணி ஏற்றும்போது ஏதோ கணக்கு விடுபட்டது போன்று தோன்றியது .அதனால் சரி பார்த்து விடலாமென …” பேசியபடி கீழே பார்த்த சாம்பவி ரிஷிதரனின் பார்வை சேலையை இழுத்து சொருகியிருந்த தனது இடையில் பதிந்திருக்க கண்டாள் .




சட்டென் தனது சேலையை தளர்த்தி இடையை மறைத்தாள் . சேலையோடு சேர்த்து சொருகியிருந்த பின்னல் விடுபட அதனை தனது கைகளில் பிடித்துக்கொண்டான் ரிஷிதரன் .

” எவ்வளவு நீளமான முடி பவி உனக்கு …!!! ” பின்னலை வருடினான் .

இந்த முடியைத்தானே வெட்டிவிடு என அடம்பிடித்தாள் சஹானா .இவனுடைய எண்ணமும் அவளை போலத்தானே இருக்கும் …என நினைத்தவள் ..அவன் ஆவலோடு பின்னலை வருடுவதை ஆச்சரியமாக பார்த்தாள் .

” இதனை அப்படி இழுத்து சொருகியிருந்தாயே …பாவம் வலிக்காது ….? “

” அதெல்லாம் வலிக்காது …விடுங்கள் ” ஏணியிலிருந்து இறங்கிவிட்டவள்  தனது பின்னலை அவனிடமிருந்து பிடுங்கினாள் .

இப்போது பின்னலை விட்டு விட்டவன் அவளது இடையில் கை கோர்த்து தன்னருகே இழுத்துக் கொண்டான் .சாம்பவி கண்களை சுழற்றி பார்த்தாள் ்அவர்கள் குடோனினுள் இருந்தனர் .அப்போது அங்கே யாரும் இல்லை …

ஐய்யய்யோ …இப்படி இவனிடம் தனிமையில் மாட்டிக் கொண்டேனே …திமிற முயன்றவளை அடக்கி இன்னமும் தன்னருகே இழுத்துக் கொண்டவன் ” மெலிந்து விட்டாய் பவி ….” என்றான் .

அப்படியா …? மெலிந்து விட்டேனா …? இருக்கலாம் …நிறைய நாட்கள் சரியாக உணவுண்ட நினைவு அவளுக்கு இல்லையே …

” ஏன் …சரியாக சாப்பிடுவதில்லையா …? ” அவளது கன்னங்களை வருடியபடி கேட்டான் .

பதில் சொல்லாமல் அவனை பார்த்தாள் அவள் .இப்படி மெலிந்து ஒடிந்து விழுவது போல் இருந்தால்தானே உனக்கும் …உன் தங்கைக்கும் பிடிக்கும் …என நினைத்தாள் .

” இவ்வளவு மெலிவு எனக்கு பிடிக்கவில்லை .மாடலிங் பெண்கள் போல இந்த குச்சி போன்ற தோற்றம் நன்றாக இல்லை .அப்போதுதான் சரியான வெயிட்டில் இருந்தாய் ….” ரிஷிதரனின் சொற்கள் இன்பமாக சாம்பவியினுள் இறங்கியது .

சஹானா அவளை வெயிட்டை குறை என்று சொல்லும் போதெல்லாம் நான் என்ன மாடலா …? தோல் போர்த்திய எலும்புக்கூடு போல் உடலை வைத்திருந்து கேட் வாக் போகவா போகிறேன் …என நினைத்திருக்கிறாள் .

அதையே இப்போது ரிஷிதரன் சொல்லவும் …சாம்பவிக்கு மிகுந்த மகிழ்ச்சி …தனது சந்தோசத்தை அவள் விழிகளில் காட்ட …




” இனி நன்றாக சாப்பிட்டு உடம்பை கொஞ்சம் தேற்றுகிறாயா ….? ” கொஞ்சியபடி அவள் முகம் நோக்கி குனிந்தான் .

தண்ணென்றிருந்த இதழ்களை மடித்தபடி மூச்சு வாங்கிய போது , எப்படி நடந்த்து இது ….? என யோசித்தாள் சாம்பவி .இ…இது போன்று நடக்க கூடாது என உறுதி கொண்டிருந்தாளே ….தன் பலவீனத்தின் மீது எழுந்த கோபத்தில் பற்களை கடித்தபடி அவள் இருந்த போது ….அவளின் மனநிலை அறியாத ரிஷிதரன் …

” நாம் வெளியே எங்காவது போகலாமா பவி …? ” என்றான் .

எதற்கு இதோ இப்போது நீ ஆரம்பித்து வைத்துள்ளாயே , அதை முடிப்பதற்காகவா ….தன் மீது எழுந்த கோபத்தையும் அவன் மீதே காட்ட நினைத்து முகம் திருப்பி போக எண்ணியவளை விடாமல் பின்னிருந்து அணைத்தவன் ,

” கமிங் சன்டே போகலாம் .நீ ….” என்ற பயணத்திற்கான திட்டமிடுதலை ஆரம்பித்தான் .

போகும் இடம் குறித்த அவனது பேச்சுக்களை காதிலேயே வாங்கவில்லை சாம்பவி .என்ன ஏதாவது பைவ் ஸ்டார் ஹோட்டலாக இருக்கும் .ஆக ..இவன் திருட்டுத்தனமாக என்னை வீட்டை விட்டு வெளியே வர சொல்கிறான் .நான் என்ன இவனது மனைவியா …இல்லை வேறு யாராவதா …இவனுடன் ஹோட்டலில் ரூம் போட்டு ….மேலே நினைக்கவும் மனது வலிக்க …

” எதற்கு ..உங்கள் ஆண் தன்மையை என்னிடம் நிரூபிக்கவா …? ,” நிதானமாக கேட்டாள் .

இறுக அவளை அணைத்திருந்த அவனது பிடி தளர்ந்த்து .

” வாட்  டூ யூ மீன் …? ” வறண்டு வந்த்து அவனது குரல் .

” நான் ஒரு பெண் …நீங்கள் ஒரு ஆண் …இது மட்டும்தானே உங்களுக்கு தேவை. ஆணாக உங்களது தேவைகளை என்னிடம் நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறீர்கள் .நம் திருமணம் முடிந்த புதிதில் போல …..”

” என்ன சொல்கிறாய் …? ” அவள் தோள்களை பற்றி உலுக்கினான் .

” பெண்ணென்றால் மென்மையானவள்தானே ,மனதாலும் , உடலாலும்  எதிர்க்கும் வலு இல்லாதவள் .அந்த பலவீனத்தை உங்களை போன்ற ஆண்கள் சாதகமாக்கி கொள்கிறீர்கள் …”

வேகத்துடன் தன் பிடியில் இருந்தவளை உலுக்கியவன் , திடீரென அவளை விட்டான் .அந்த உந்தலில் சாம்பவி சுருண்டு கீழே விழுந்தாள் .

” ஆமாண்டி …எனக்கு தேவை உன் உடல்தான் .அதற்கு உனது சம்மதம் எனக்கு தேவையில்லை …” கால்களை அகற்றி ஊன்றியபடி தன் முன் உயரமாக நின்றவனை அச்சத்துடன் நோக்கினாள்.

இ…இவன் இ..இப்போது என்ன செய்ய போகிறான் …இல்லை வேண்டாம் இப்படியெல்லாம் நடக்க கூடாது ….ஒரு வித வெறியோடு தன்னருகே நெருங்கிய அவன் முகத்தை காணும் திராணியின்றி ” வேண்டாம் …”என கத்தியபடி  தன் முகத்தை இரு கைகளாலும. மூடிக்கொண்டாள் .

ஒரு சத்தமும் இல்லாது இருக்க மெல்ல தனது கைகளை விலக்கி பார்த்தபோது , அவன் அவளை பார்த்தபடி எதிரேதான் இருந்தான் .ஆனால் மிக அதிகமான வெறுப்பினை முகத்தில் தேக்கியபடி அவளை பார்த்திருந்தான் .

” சை …” என அவள் தோள்களை தள்ளியவன் , எழுந்து கீழே கிடந்த அட்டைப் பெட்டியை உதைத்தான். அது பறந்து போய் சுவரில் பட்டு விழுந்த்து .வேகமாக வெளியே போய்விட்டான் . பொங்கிய அழுகையை அடக்க தோன்றாமல் அழத் துவங்கினாள் சாம்பவி .

கொஞ்ச நேரத்தில் , வெளியே சஹானாவின் சத்தம் கேட்க எழுந்தவள் தனது முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டாள் . வெளியேவந்தாள் .




” டைல்ஸ் பெட்டிகள் சரியாகத்தான் இருக்கின்றன சஹானா …”

” சரியாக இருக்குமென்று எனக்கு தெரியும் .நீதான் தேவையில்லாமல் சந்தேகப்பட்டாய் .இப்போதாவது யார் எப்படி என்று தெரிந்துகொள் ….” சாம்பவியை முறைத்தபடி போனாள் அவள் .

தேவையில்லாமல் சந்தேகப்படுகிறேனோ நான் …? குழப்பத்துடன. சாம்பவி ஷோரூமினுள் வந்த போது அங்கே ரிஷிதரன் இல்லை .எப்போதே போயிருந்தான் .அன்று மட்டுமல்ல மறுநாளும் வரவில்லை .ஏதோ வேலையாக சென்னை போயிருப்பதாகவும் இரண்டு நாட்களில் வந்து விடுவானென்றும் ஷ்ரத் சொன்னான் .

இதோ இன்றோடு ஒரு வாரம் ஆக போகிறது .ரிஷிதரன் வரவில்லை .இனி வரவே மாட்டானோ ….ஏக்கத்துடன் நினைத்தபடி ஷோரூமை சுற்றி பார்த்தாள் . அவள் இங்கே வேலைக்கென வந்த போது மலர்கள் மணக்கும் சோலைவனமாக அவளுக்கு இந்த ஷோரூம் காட்சியளித்தது .இன்றோ கொடு வெயில் காயும் பாலைவனமாக தோன்றியது .

அப்போது போன் ஒலித்தது .அது ஷ்ராவத்தின் போன் .அங்கிருந்த டைல்ஸ் ராக்கின் மேல் தன் போனை எடுத்து வைத்துவிட்டு கார்பெட் டிசைன் டைல்சுகளை தரையில் பரப்பி வைக்க சொல்லி பார்வையிட்டுக் கொண்டிருந்தான் அவன் .போனை அவனிடம் கொடுக்க எண்ணி எடுத்த சாம்பவியின் கைகள் இன்பமாக அதிர்ந்தன…போனின் வைப்ரேசினால் மட்டும் அல்ல ….அதில் வந்து கொண்டிருந்த காலினால் …தோன்றிக் கொண்டிருந்த போட்டோவினால் ….

மயக்கும் புன்னகையுடன் போட்டோவில் தோன்றியபடி அழைத்துக் கொண்டிருந்தவன் ரிஷிதரன் .உடனே போனை ஷ்ரத்திடம் கொடுக்க மனமின்றி அதை பார்த்தபடி இருந்தாள் சாம்பவி .திடீரென ஸ்கிரீன் கறுப்பாகி விட , அட..டா கட்டாகிவிட்டதே ….எதுவும் முக்கியமான விசயமாக இருக்குமோ …என அவள் நினைக்கும.போதே ரிஷிதரன் மீண்டும் அழைத்தான் .

போனை ஆன் செய்து தன் காதில் வைத்து ” ஹலோ …” என்றாள் சாம்பவி .

ஒரு விநாடி எதிர்.முனை மௌனம் காத்தது .பிறகு தொடர்பு துண்டிக்க பட்டது .சாம்பவிக்கு அழுகை வந்த்து .என்னுடன் பேசக் கூட பிடிக்கவில்லையா …?

சாம்பவிக்கு தான் என்ன நினைக்கிறோமென அவளுக்கே தெரியவில்லை .ரிஷிதரன் அவள் அருகில் இருக்கும் போது இவன் விலகி சென்றுவிட வேண்டுமென நினைத்தாள் .அவன் அருகில் இல்லாதபோதோ விரைவாக தன்னருகே வந்துவிட வேண்டுமென நினைத்தாள் .மொத்தத்தில் அவனுடன் ஒன்றவும் முடியாமல் , விலகவும் முடியாமல் காதலில் தவித்தாள் ….தகித்தாள் .

” டுவென்டி இன்ஞ் டிவிகள் சிலவற்றை நமது ஷோரூமில் ஆங்காங்கே வைக்கலாம் ஷ்ராவத் .சென்னை, கோவை …என நமது மற்ற ப்ராஞ்சுகளில் நாம் செய்து முடித்த ப்ராஜெக்டுகளை …வீடு , ஹோட்டல் , மால் போன்றவற்றை தெளிவாக வீடியோ கவரேஜ் பண்ணி …அவற்றை அந்த டிவிகளில் ஓட விடலாம் .கஸ்டம்ர்ஸ் அதனை பார்த்துவிட்டு டைல்ஸ்களை வாங்குவதோடு , அதனை ஒட்டும் வேலையையும் நமக்கே கொடுக்க வாய்ப்பிருக்கிறது ….,”




” குட் ஐடியா சாம்பவி ….” ஷ்ரத் பாராட்டினான் .

” உனக்கு இவள் என்ன சொன்னாலும் குட்தான் …,” முணுமுணுத்தாள் சஹானா .

” அத்தோடு அந்த வீடியோவின் கீழ் அந்தந்த  கஸ்டமர்களின் அட்ரஸ் , போன் நம்பர்களையும் ஸ்க்ரோலிங்கில் ஓட விட்டோமானால் …நீங்கள் அவர்களிடமே போன் செய்து எங்கள் கற்களின் தரம் , எங்கள் வேலையின் தரம் பற்றி கேட்டுக் கொள்ளலாம் என சொன்னோமானால் …இந்த ப்ளானிற்கு ஒரு உயிர் கொடுத்தது போலிருக்கும் .சரிதானா …? “

காதில் விழுந்த குரலில் பரவசமாகி திரும்பினாள் சாம்பவி .ஆபிஸ் அறையின் வாசலில் சாய்ந்தபடி நின்று சொல்லிக் கொண்டிருந்தான் ரிஷிதரன் .

” வாவ் …சூப்பர் ரிஷி …நவ் தி ப்ளான் வில் பி கம்ப்ளிட்டேடு ….” சஹானா விழி விரிக்க …

” எக்ஸ்சலன்ட் ரிஷி….” என ஷ்ராவத் பாராட்ட …

சாம்பவி பதிலின்றி அவனை பார்த்தபடி இருந்தாள் . அவசர வேலை இருப்பதாகவும் இரண்டு நாட்களில் வருவதாகவும் கூறி சென்னைக்கு சென்றவன் ஒரு வாரம் கழித்து …இதோ இப்போதுதான் வந்து நிற்கிறான் .மூன்று வருடங்களாக அவனை பிரிந்திருந்த போது இல்லாத வெறுமை இந்த ஒரு வாரத்தில் சாம்பவிக்கு வந்திருந்த்து.

கண்களை இமைத்து விட்டால் அவன் மறைந்து விடுவானோ என கண் சிமிட்டாமல் அவனை பார்த்தாள் அவள் .ரிஷியோ அவள் புறமே திரும்பவில்லை .

” ஹவ் இஸ் திஸ் ப்ளான் ஷரத் …? ” என கேட்டு கொண்டிருந்தான் .

” சூப்பர் ரிஷி …நான் நமது பழைய ப்ராஜெக்டுகளின் வீடியோக்களை அனுப்பி வைக்க ஏற்பாடுகளை பார்க்கிறேன் . சஹி ..நீ இன்று ஈவினிங்கே டிவிக்களை பார்த்து செலக்ட் பண்ணிவிடு . டிவியை செட் பண்ண  எலெக்ட்ரீசியன்சுக்கு சொல்ல வேண்டும் .சாம்பவி உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா …? “

ஷ்ரத்தின் குரல் காதில் விழாமல் ஒரு மாதிரி விழித்துக் கொண்டிருந்தவளை பார்த்து …புருவங்களை உயர்த்தினான் .

” என்னங்க சாம்பவி மேடம் என் ஐடியா எப்படி …? பதில் சொல்லலையே நீங்க …? ” வம்பிழுத்தான் ரிஷிதரன் .

அந்த மேடத்தில் அவனை கோபமாக பார்த்தவள் ” ம் …சார் …நாட் பேட் சார் ….” அவனது மேடத்திற்கு பதிலடி கொடுத்தாள் .அவன் கண்கள் மின்னியது .சாம்பவியின் இதயம் மயங்கியது .




What’s your Reaction?
+1
49
+1
26
+1
1
+1
3
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!