19
ஆலிழை தொட்டிலில் கண்ணன் – புது திருமணம் முடித்தவர்கள் அடுத்து எதிர்பார்ப்பது பிள்ளை செல்வத்தைத்தானே .அதைத்தான் மணமக்களுக்கு பரிசாக வடித்திருந்தாள் கமலினி .போட்டோ பிரேமிலோ ஓவியமாகவோ வழங்க கொடுப்பவர்களோ வாங்குபவர்களோ செல்வத்தில் சாதாரணமானவர்கள் இல்லையே .எனவே இந்த ஆலிழை கண்ணன் தங்கத்தில் ஊஞ்சலாடினான் .ஆம் …ஆலிழையாக தங்க தகடுகள் தொட்டிலாக ஆட அதன் நடுவே தங்க தகடுகள் பூசிய வெள்ளி குழந்தை கண்ணன் கால் கட்டை விரலெடுத்து வாயில் வைத்துக் கொண்டு ஊஞ்சலாடினான் .அவனது மயில் தோகையும் , மணி மாலையும் வெண் கற்களாக மின்ன , மரகதம் ஒளிர்ந்த அவன் கண்களில் மழலையின் சிணுங்கல் தத்ரூபமாக .
” ஆஹா ” ” அற்புதம் ” ” சூப்பர் ” ” பென்டாஸ்டிக் ” போன்ற புகழாரங்கள் .
” பார்த்தவுடன் கூஸ் பம் கமலினி .ரொம்ப தேங்க்ஸ்பா .இப்படி ஒரு அழகான கிப்டுக்கு ” ப்ரியம்வதா அவளை அணைத்துக் கொண்டாள் .
” எப்படி இப்படி யோசிக்கிறீங்க கமலினி ? இந்த பக்கத்து காத்து கொஞ்சம் உங்க பக்கமும் அடித்ததோ ? ” விஸ்வேஸ்வரனை கை காட்டி விட்டு கிண்டல் கலந்து பாராட்டினான் சுதாகர் .
இவன் ஒன்றுமே சொல்லவில்லையே …கமலினி எதிர்பார்ப்போடு விஸ்வேஸ்வரனை பார்க்க அவன் நுனி விரலால் கண்ணனின் தொட்டிலை தள்ளி விட்டு விளையாடிக் கொண்டிருந்தான் .
” டேய் விஸ்வா என்னடா பேசாமல் இருக்கிறாய் ? ” சுதாகர் கேட்க …
” நீ வேறடா .நானே பேச்சே வராமல் ஸ்தம்பித்து போய் இருக்கிறேன் . நானாக இருந்தால் கப்புள்ஸ் ரிங் ஒன்றை உங்கள் இருவருக்கும் கிப்டாக கொடுத்து முடித்திருப்பேன் . இந்த கிப்ட் …வாவ் .உனக்கு ஹெவி க்ரியேட்டிவ் மைன்ட் கமலினி “
கஷ்டப்பட்டதன் பலனை இப்போதுதான் அடைந்தாள் கமலினி.” தேங்க்ஸ் டூ ஆல் ” கை குவித்து எல்லோருக்கும் நன்றி சொன்னாள் .
” சரி …சரி குழந்தை கண்ணன் வந்தாச்சு . இனி அதற்கான ஏற்பாடுகளில் இறங்கலாமே ” இளைஞர்கள் கூட்டமொன்று புதுத் தம்பதிகளை சுற்றிக் கொள்ள ,இவர்கள் மெல்ல மேடையிலிருந்து இறங்கினார்கள் .
” வேண்டிய பணம் உடனுக்குடன் கிடைத்ததால் …அத்தோடு தங்கம் , வெள்ளி, கற்களும் தேவைக்கேற்ப நம் பட்டறையிலிருந்து கொடுத்ததால் எளிதாக இதை செய்ய முடிந்த்து சார் “
” ம் …எப்படி செய்தாய் இதை ? “
” வெள்ளியில் கண்ணன் உருவத்தை மோல்டில் உருக்கி வார்த்து , தங்க தகடுகளை மெல்லியதாக்கி மேலே பொருந்தியிருக்கிறோம் .கற்கள் ஏ.டி கற்கள் .கண்களுக்கு மட்டும் உயிரோட்டம் வேண்டுமென சிறு மரகதம் .வேலைப்பாடுதான் அதிகமே தவிர ,விலை கட்டுக்குள்தான் ஆனது சார் .”
” யார் செய்த்து …? “
” அ…அது..நான்தான் …” என ஆரம்பித்தவள் அவனது கூர் பார்வையில் நிறுத்தி ” என் அப்பா சார் ” உண்மை உரைத்தாள் .
” ஐடியா உன்னுடையது .செய்முறை அவருடையது .சரியா ? “
” சரிதான் சார் “
” உன் அப்பா என்ன செய்கிறார் கமலினி ? “
கமலினிக்கு அலுத்து வந்த்து .” அதை இன்னொருநாள் சொல்கிறேனே சார் .இப்போது எனக்கு மூட் இல்லை .அரை நாள் லீவ் சொல்லியிருந்தேன் .குறை நாளும் லீவ் தந்தீர்களானால் வீட்டிற்கு போவேன் .கொஞ்சம் டயர்டாக இருக்கிறது “
கமலினி சலிப்பாக பேசிக் கொண்டிருக்கும் போதே , விஸ்வேஸ்வரன் தனது போனை எடுத்து அழுத்தினான் .” சரோஜா மேடம் .கமலினி நாளைதான் வருவார்கள் .ஒரு பர்சேசிங்கிற்காக வெளியே போகிறோம் ” தானே லீவ் சொன்னான் .
மூஞ்சியை பாரு….இவனை யார் எனக்கு லீவ் சொல்ல சொன்னதாம் ? அதுவும் இவனோடு பர்சேஸிங் போகிறேனாம் .அந்த சரோஜா என்ன நினைப்பார்கள் …? கமலினி முறைக்க …அதனைக் கண்டு கொள்ளாமல் …” வா …போகலாம் ” கார் கதவை திறந்தான் .
” எங்கே …? நான் லீவ் போட்டுவிட்டேன் .வீட்டிற்கு போக போகிறேன் .அதோ இருக்கிறது பஸ் ஸ்டாப் .அங்கே போய் பஸ் ஏறிக் கொள்வேன் “
” உனக்கு லீவ் கொடுத்த காரணம் என்னோடு வருவதற்காகத்தான் .வா …” அவள் தோள் பற்றி அழுத்தி காருக்குள் உட்கார வைத்தவன் சுற்றிப் போய் மறுபுறம் வந்து அமர்ந்து காரை எடுத்தான் .
” இப்போது எங்கே …? ” கமலினியினுள் எரிச்சல் .சும்மா இவனோடு இப்படி ஊர் சுற்றிக் கொண்டே இருந்தால் நன்றாகவா இருக்கும் ?
” நாம் நிகிதாவை மீட் பண்ண போகலாம் கமலினி.நீ அவளிடம் பேசிப் பார் .அவளை கொஞ்சம் ஆராய்ந்து அவள் குணங்களை எனக்கு சொல்லு …”
நல்ல வேலை எனக்கு மனதிற்குள் சலித்தபடி ” அவுங்க எங்கே இருக்கிறாங்க ? ” என்றாள் .
” நிகிதாவிற்கு டேபிள் டென்னிசில் இன்ட்ரெஸ்ட் . இங்கே ஏதோ டென்னிஸ் கேம்ப் நடக்கிறதாம் . அதற்காக இங்கேதான் தங்கியிருக்கிறாள் .இன்று ஒரு போட்டி .அதற்கு என்னை அழைத்திருக்கிறாள் .அங்கேதான் போய் பார்க்க போகிறோம் “
விஸ்வேஸ்வரனின் கார் ஒரு உயர்தர ஹோட்டலுக்கு போனது.அங்கே அமைந்திருந்த டேபிள் டென்னிஸ் பகுதிக்குள் இருவரும் போன போது அங்கே மேட்ச் நடந்து கொண்டிருந்த்து.இரு பெண்கள் டேபிள் முன் பந்தடித்துக் கொண்டிருக்க , அந்தப்பக்கம் கேலரியில் இருந்த சேர்களில் அமர்ந்து ஆடுபவர்களை கவனித்துக் கொண்டிருந்த நிகிதா இவர்களை பார்த்ததும் கையசைத்தாள் .அமரும்படி சைகை செய்து விட்டு ஆட்டத்தை கவனிக்க ஆரம்பித்தாள் .
இவர்கள் இருவரும் எதிர் கேலரியில் அமர ஆட்டம் நடந்து கொண்டிருந்த்து . கொஞ்ச நேரம் ஆட்டத்தை கவனித்த கமலினி ” இந்த விளையாட்டு எனக்கு தெரியாது . பந்து எதிராளியின் டேபிளில் ஒரே ஒரு முறைதான் பட வேண்டுமோ …? ” கேட்டபடி திரும்பி பார்க்க ,விஸ்வேஸ்வரன் தன் போனை பார்த்துக் கொண்டிருந்தான் .
” யாருக்கு தெரியும் ? ” தோள்களை குலுக்கினான் இவளது கேள்விக்கு .
அந்த செட் பெண்கள் ஆட்டம் முடித்ததும் அடுத்து நிகிதாவின் செட் .நிகிதாவும் மற்றொரு பெண்ணும் எதிரெதிராக ஆடத் தயாராக ” இந்த ஆட்டம் எப்போது முடிந்து நிகிதா எப்போது வர …? எனக்கு வேலை இருக்கிறதே …? ” விஸ்வேஸ்வரன் சலிக்க ஆரம்பித்தான் .
தன் பக்க டேபிளில் பந்தை ஒரு அடி அடித்து எழ வைத்து பின்மட்டையால் எதிர் பக்கம் தள்ளி விளையாட்டை ஆரம்பித்தாள் நிகிதா .
” முதலில் ஆரம்பிக்கும் போது மட்டும் இப்படி தன் பக்க டேபிளில் பந்தை தட்ட விடலாம் போல…” கமலினி சொல்ல விஸ்வேஸ்வரன் ” ம் ” என்றபடி எழுந்தான் .
” நீ பார்த்துக் கொண்டிரு கமலினி.ஒரு போன் பேசி விட்டு வருகிறேன் ” வெளியே போய்விட்டான் .
” எப்படி விளையாடினேன் …? ” மூச்சிரைப்புடன் ஆங்கிலத்தில் கேட்டபடி வந்தாள் நிகிதா .
” பென்டாஸ்டிக் மேடம் .இந்த கேம் உங்களுக்கு பேவரைட்டா ? “
” ரொம்ப பிடிக்கும் …விஸ்வாவை எங்கே ? “
” சம் பிசினஸ் கால் …”
” நீ …அன்று ஹோட்டலில் விஸ்வாவுடன் பார்த்த பெண்தானே …உன் பெயர் …”நிகிதா தன் ஞாபகத்தை துழாவிக் கொண்டிருக்கையில் …
” கமலினி ” என்றபடி வந்தான் விஸ்வேஸ்வரன் .
” யா ..யா கமலினி . மேடமெல்லாம் வேண்டாம் .கால் மீ நிகிதா “
” சொல்லு நிகிதா இங்கே எதற்கு வரச் சொன்னாய் ? “
” என் கேம் பார்க்கத்தான் .எப்படி விளையாடினேன் விஸ்வா ? “
” அது …எனக்கு இந்த கேம் அவ்வளவாக தெரியாதே நிகிதா …பிறகு எதை எப்படி சொல்வேன் ? “
” ஓ…இட்ஸ் ஓ.கே ” நிகிதாவின் முகம் கூம்பிவிட கமலினி அவளறியாமல் விஸ்வேஸ்வரனின் மணிக்கட்டை தன் இரு விரலால் அழுத்தினாள் .புரியாமல் தன் பக்கம் திரும்பியவனின் முகத்தை நிகிதா கவனிக்காத போது கன்னத்தில் ஆட்காட்டி விரல் வைத்து நிகிதா புறம் திருப்பினாள் .
” நிகிதாவை கவனியுங்கள் . விளையாட்டை பாராட்டுங்கள் ” தமிழில் அடிக் குரலில் முணுமுணுத்தாள் .
” அது எதற்கு ? ” விஸ்வேஸ்வரன் விழித்து நிற்க ” டிரஸ் சேஞ்ச் செய்து வருகிறேனென ” நிகிதா உள்ளே போனாள் .
” என்ன சார் இப்படி மக்காக இருக்கிறீர்களே …லவ் பண்ணும் பெண் என்ன சொன்னாலும் அதற்கு தலையாட்ட வேண்டாமா ? எப்படியிருக்கிறதென கேட்டால் ஆஹா சூப்பர் என்று தலையாட்ட வேண்டும் “
” ஓ …இதுதான் காதல் பாடமா ? சே மிஸ் பண்ணிட்டேனே ? ” தன் உள்ளங்கையில் குத்தினான் .
” சரி நடந்த்தை விடுங்க . இனி நிகிதா வரவும் டேபிள் டென்னிஸை பற்றி நிறைய பேசுங்கள் . அதில் இன்ட்ரெஸ்ட் இருக்கிற மாதிரி காட்டிக்கோங்க …”
” சரிதான் .ஆனால் எனக்கு டேபிள் டென்னிஸ் பற்றி தெரியாதே ….”
” ஐய்யோ இதைக் கூடவா சொல்லித் தரனும் . உங்க போனில் கூகுள் பண்ணுங்க சார் .நான் அப்படியே இந்த ஹோட்டலுக்குள் _ஒரு ரவுண்ட் போய்விட்டு வருகிறேன் .அதற்குள் நிகிதாவிடம் ப்ரெண்ட்லியாக டேபிள் டென்னிஸ் பற்றி பேச வேண்டும்.சரியா .? பெஸ்ட் ஆப் லக் ” அவசரமாக பேசி விட்டு நகர போனவளின் கையை பிடித்தான் .
” இன்னமும் சார் …சார் என்கிறாயே …? “
இந்தக் கேள்வியை கேட்கும் நேரத்தை பார் ….பற்களை கடித்து கோபத்தை அடக்கியவள் ” சரி சரி விஸ்வா.கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள ” இன்னமும் நகர விடாமல் அவள் கைகளை பற்றினான் .
” இங்கே …யாரையும் உனக்கு தெரியாதே …? எங்கே போவாய் …? உன் சேப்டி …? “
” ஐயோ விஸ்வா என்னை நான் பார்த்துக் கொள்வேன் .நீங்கள் முதலில் உங்கள் காதலை பாருங்கள் …” அவன் பிடியிலுருந்து கையை உருவிக் கொண்டு உள்ளே போனாள் .
ஹோட்டலுக்குள் போய் ஏதோ ஒன்றை ஆர்டர் செய்து சாப்பிட்டு என கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு , மீண்டும் அவள் வந்து பார்த்தபோது காபி ஷாப்பில் விஸ்வேஸ்வரனும் , நிகிதாவும் தோளுரச அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர் . கமலினி திருப்தியுடன் புன்னகைத்தாள் .
” டியூப்லைட்தான் .முதலில் சிமிட்டி விட்டு எரிய ஆரம்பித்து விட்டது ” தனக்குள் பேசிக் கொண டாள். அவர்களை தொல்லை செய்யாமல் தனது வீட்டிற்கு போக முடிவு செய்தாள் .
What’s your Reaction?
+1
25
+1
15
+1
4
+1
2
+1
+1
+1
1
Viswa in paasam vaste.avalukku ungalai paarthu konjamum poraamai varalai ithve Ava freindodu nee serthu avalai paarthaallll.