karpoora pommai onru கற்பூர பொம்மை ஒன்று

கற்பூர பொம்மை ஒன்று – 39

39

வெட்டிக்கொண்டு போக துடித்தவளை

கட்டிகொண்டு ஆட வைக்கிறாய்

கண்ணாடி மனதிலிருக்கும்

உன் பிம்பத்தை 

முந்தானை போர்த்தி எப்படி மறைப்பேன் நான் ?

பார்ட்டி ஆரம்பித்த சிறிது நேரத்தில் நடனமாட மியூசிக் போடப்பட்டது .யாரோ ஒரு பெண்ணின் இடையை அணைத்தபடி நடனமாடிக் கொண்டிருந்த வீரேந்தரை பார்த்ததும் சாத்விகாவினுள் எரிமலை வெடித்தது .நான் இங்கே எவ்வளவு குழப்பத்தில் இருக்கிறேன் …இவன் ஜாலியாக எவள் இடுப்பையோ பிடித்துக்கொண்டு டான்ஸ் ஆடிக்கொண்டிருக்கிறானே ….சாத்விகாவின் உள்ளத்தினுள் பிரேமலதா சொன்ன விசயங்களின. குழப்பங்கள் கன்ன்று கொண்டிருந்தன.

தன் தோள்களை பிடித்து இழுத்த சாத்விகாவிடம் திரும்பிய வீரேந்தர் அவளை கோபமாக பார்க்க அந்த பெண் , கணவனும் மனைவியும் என்ஜாய் பண்ணுங்க என்றுவிட்டு விலகி சென்றாள் .

” இதென்ன இன்டீசன்ட் சாத்விகா ….? ” முறைத்த கணவனுக்கு விரோத்த்தையே கொடுக்க சாத்விகா எண்ணினாலும் , மெல்லிய வெளிச்சமும் , இனிய இசையும் , ஜோடி ஜோடியாக சுற்றிலும் ஆடிக்கொண்டிருந்தவர்களுமாக சேர்ந்து ஒரு நெகிழ்ச்சி நிலையை கொடுக்க …

” நாமும் ஆடலாமா ….? ” மென்மையாய் அவள் கேட்ட விநாடியே மனைவியின் இடையை அழுத்தமாக பற்றிக்கொண்டான் வீரேந்தர் .” ஷ்யூர் பேபி …” அவளை பற்றி தன்னருகே இழுத்து கொண்டு மென்மையான நடன அசைவுகளை ஆரம்பித்தான் .




” அழகா ஆடுறீங்களே கேப்டன் சார் …நிறைய அனுபவமோ  …? ” முன்னால் ஆடிய பெண்ணை நினைத்துக்கொண்டு கணவனின் தோள்களை கைகளால் வளைத்து ஆடியபடி கேட்டாள் .

” துப்பாக்கி தூக்குவதில்தான் நிறைய அனுபவம் இருக்கிறது .பெண்களிடம் இல்லை .கல்யாணமான  பின்னும் கூட ….” மனைவியின் வலது கையையும் தனது வலது தோளுக்கு ஏற்றிக் கொண்டவன் தன் இரண்டு கைகளையும் அவள் இடையை சுற்றி வன்மையாக அழுத்தினான் .

” ஷ் ….” சாத்விகா மெல்ல முனக …” என்னடா …? ” பதறினான் .

” ஒன்றுமில்லை …” மெல்லிய கூச்சத்துடன் மறுத்த மனைவியின்  நிலை அவனது ஆர்வத்தை தூண்ட ” என்ன பிரச்சினை பேபி …” அவன் கைகள் இப்போது மென்மையாக அவள் இடையை வருடியது .

” அ…அது …கிளம்பும் போது சேலை கட்டும் போது , உங்கள் அம்மா பாவாடையை இறுக்கமாக கட்டிவிட்டார்கள் .அது எனக்கு பழக்கமில்லாத்தால் இடுப்பில் அழுத்தி கொஞ்சம் வலிக்கிறது …” மென் குரலில் தடுமாற்றத்துடன் கூறினாள் .

” ஓ…நீ சொல்லியிருக்கலாமே பேபி …எனக்கு இவ்வளவு இறுக்கம் பழக்கமில்லையென …ம் .இப்போது நான் உனக்கு ஏதாவது உதவவா …? ” அவன் கைகளை அவள் இடுப்பில் அழுந்திய பகுதியை வருடும் எண்ணத்தில் நகற்ற , சாத்விகா அவன் கைகளை பிடித்து நிறுத்தினாள் .

” உஷ் …என்ன இது …? வெளியிடத்தில் வைத்துக் கொண்டு …” நாணத்துடன் தடுத்தாள் .

” சரி …வா பாத்ரூமிற்குள் போய் பாவாடையை நெகிழ்த்தி சரி பண்ணிக்கொண்டு வரலாம் …” அவன் இயல்பாக அழைக்க சாத்விகாவை கூச்சம் பிடுங்கி தின்றது .

” ஐயோ ….சும்மா இருங்க .நாம் சீக்கிரம் வீட்டிற்கு போகலாம் .அங்கே போய் சரி பண்ணிக் கொள்ளலாம் …”

” இதெற்கெதற்கு இவ்வளவு கூச்சம் …? ” தோள்களை குலுக்கி கொண்டவன் பின்பு அனைவரிடமும் விடை பெறுவதற்கான பேச்சுக்களை தொடங்கினான் .

காரில் ஏறும்போது ” இன்று வீட்டிற்கு போனதும் நிச்சயம் உனக்கு நான்தான் உதவ போகறேன் பேபி …” என கூறி தனது கணவன் பதவியை பறைசாற்றினான் .
வெட்கத்தில் சிவந்த தன் முகத்தை கணவனுக்கு காட்டாமலிருக்க பெரும்பாடு பட்டாள் சாத்விகா .விழுங்கும் ஓரப்பார்வைகளை மனைவி முகத்தில் செலுத்தியபடி காரை விரைவாக ஓட்டினான் வீரேந்தர் .இன்று மாறி ….மாறி கேட்ட கணவனின் பெருமைகள் சாத்விகாவை சிறிது பலவீனப்படுத்தி இருந்த்து .அழகும் , ஆண்மையுமாக நிமிர்ந்து நின்ற கணவனை காதல் பொங்க பார்ப்பதை அவளால் தவிர்க்க முடியவில்லை .

அதே நிலைதான் வீரேந்தருக்கும் .துடுக்குத்தனமான பேச்சுக்களை விடுத்து காதல் பொங்க முகம் சிவந்து நின்ற மனைவி அவனுள் நிறைய ரசாயன மாற்றங்களை செலுத்திக் கொண்டிருந்தாள் .மாடிப்படி ஏறும்போதே பொறுமையின்றி அவளை அணைத்து முத்தமிட்டான் . அவனிடமிருந்து விடுபட்டு வேகமாக தனது அறைக்குள் புக போனவளை தன் அறைப்பக்கம் இழுத்தான் .

” விடுங்க நான் டிரஸ் சேன்ஞ் பண்ணனும் …”

” அதறகு் நான் உதவுவதாகத்தானே நமக்குள் ஒப்பந்தம் பேபி …”

” ஆமாம் பெரிய பாகிஸ்தான் – இந்தியா ஒப்பந்தம் …” அலட்சியமாக உதடு சுளித்தாள் .

” அந்த பாகிஸ்தான் – இந்தியா ஒப்பந்தம் கூட எனக்கு மிக எளிதாக இருக்கிறது .உன்னுடனான ஒப்பந்தமதான் மிக கடினமாக …என்னை மிகவும் சோதிப்பதாக ….” பேசியபடியே அவன் செயலில் இறங்க ஆரம்பிக்க தளர்ந்து தவித்தாள் சாத்விகா .

எப்போதும் போல் அவன் எளிதாக அவளை கைகளில் அள்ளிக்கொள்ள , இவனால் எப்படி இப்படி சாதாரணமாக தூக்க முடிகிறது …சாத்விகா எண்ணினாள்.

” ராணுவத்தில் முக்கியமான பயிற்சியே பளு தூக்குவதுதான் பேபி .கிலோ கணக்கில் தூக்கியிருக்கிறேன்.அதன் பலன்தான் இதோ …” அவளை கட்டிலில் விட்டு விட்டு தனது சட்டையை சுழட்டி  புஜத்தை உயர்த்தி திரண்டிருந்த தோள்களை காட்டினான் .

திண்ணென்ற தோள்களில் பதிந்த பார்வையை பிடுங்கி அவன்  முகத்தில் பதித்தவள் ” நான் மனதில் நினைப்பதை எப்படி வெளியே சொல்கிறீர்கள் …? ” என்றாள் .

“நான் சைகாலஜி படித்திருக்கிறேன் .உன்னை போல் மனதை முகத்தில் காட்டும் மென்மையானவர்களை கையாள்வது எனக்கு எளிது …இந்த கம்மல்கள் உன் முகத்திற்கு மிக அழகு பேபி ” காது மடல்களை வருடினான் .

” என் மனதில் நினைப்பதை கண்டுபிடித்து விடுவீர்களா …? கேட்டபடி அவன் தோளிலிருந்த கறுத்த தழும்பை வருடினாள் .” என்ன தழும்பு இது …? மிக ஆழமான காயம் பட்டிருக்கும் போலவே …? ” என்றாள் .

” இப்போது உன் மனதை சொல்லட்டுமா ….? நீ இந்த கணத்தில் உன் மனதில் என்னை நினைக்கிறாய் .என்னை மட்டும்தான் நினைக்கிறாய் .நம்மை தவிர வேறு எந்த நினைவும் இப்போது உன்னிடம் இல்லை …” மோகம் பொங்க பேசியவன் இறுக்கமாய் அவளை அணைத்து கட்டிலில் சரித்து அவள் கழுத்தில் முகம் புதைத்தபோது ,

அவள் மெல்லிய குரலில் ” இல்லை ….” என்றாள் .

” என்ன இல்லை …? ” கழுத்திலிருந்து எழாமல் அவன் கேட்க …

” இந்த நிமிடம் நான் உங்களை மட்டுமே நினைக்கவில்லை …” நிதானமாக சொன்னாள் .

மெல்ல அவளிடமிருந்து நிமிர்ந்து அவள் முகத்தை உற்று பார்த்தான் .” என்ன சொல்கிறாய் …? “

” கணவன் , மனைவியின் ஏகாந்த நேரங்களில் ஒருவரையொருவர் தொடும்போது அவர்களிருவரை தவிர வேறு எந்த நினைவிகளும் மனதில் வரக்கூடாது .அந்த தாம்பத்யம்தான் முழுமையாகி இனிக்கும் .இப்போது என் மனம் முழுவதும் குழப்பத்தில் இருக்கிறது .இந்த நேரத்தில் நமக்குள் நடக்கும் ஒரு உறவு இனிய வாழ்வின் ஆரம்பமாக நிச்சயம் இருக்காது .குழப்பங்களின் உச்சத்தில் இருக்கும் என் மனதை போலவே நம் வாழ்வும் சிக்கல்களில் சிக்கி …இறுதியாக பிரிவென்னும் ….”

” ஏய் ..எந்திரிச்சு வெளியே போடி ….” உறுமினான் .

” நான் என் மனதை சொன்னேன் .இருவரும் ஒரே சிந்தனையில் நேர் கோட்டில் பயணிக்கும் போதுதான் , கணவன் , மனைவி கூடலென முடிவெடுத்தால் ….இப்போது கூட என் கேள்விகளுக்கு பதிலளிக்க  நீங்கள் ஒத்துக்கொண்டால் , நானும் …” என நிறுத்தியவள் …அவன் கண்களுக்கிள் கூர்ந்து “டாக்டர் பிரேமலதாவை இன்று சந்தித்தேன் . அவர்களை பற்றி …”

” உன்னை நான் வெளியே போக சொன்னேன் …” கத்தியதோடு அவள் கைகளை பிடித்து எழுப்பியவன் தரதரவென அவளை இழுத்து வந்து அறைக்கு வெளியே தள்ளினான் .

” நீ கணவன் , மனைவி உறவை கொச்சை படுத்திவிட்டாய் . இனியொரு தரம் கணவனென்ற எண்ணத்துடன் உன்னருகில் வரப்போவதில்லை .இனி என் அறைக்குள் வரும்போது அனுமதி வாங்கிக்கொண்டு வரவேண்டும். …” ஒற்றை விரலை ஆட்டி எச்சரித்து விட்டு அறைக்கதவை அடித்து பூட்டினான் .

இப்படித்தான் …இதுதான் நடக்கவேண்டும் .வீரேந்தரின் ஆர்வங்களை தாங்க முடியாமல் அவன்புறம் பாய்ந்து விடத்துடித்த மனதையும் , உடலையும் கட்டுப்படுத்த வழி தெரியாமல் ,தானாகவே அவன் விலக வேண்டும் என்ற திட்டத்துடன்தான் இது போல் பேசினாள் சாத்விகா .ஆனால் அவள் நினைத்தது நடந்தும் அது அவளை சந்தோசப்படுத்தாமல் முன்னை விட அதிகமாக சோர்வு உண்டாக்கியது .

கை , கால்கள் தளர தன் அறையினுள் போய் கட்டிலில் விழுந்தாள் .என் மேல் அளவில்லாத காதலில் இருப்பவன் இந்த மாதிரி ஒரு நெருக்கமான சூழ்நிலையில் என்னை வெளியே துரத்துவானா …? இவன் காதலென்று போய் பேசி திரிகிறான் .மனதுக்குள் குமைந்தாள் .




கணவன் , மனைவிக்கான  இது போன்ற பலவீனமான நேரம் வீரேந்தரின் மனதை மாற்றி அவனை தன் வழிக்கு கொண்டு வருமோ என்றொரு நப்பாசையும் சேர்ந்துதான் இந்த விதமாக வீரேந்தரிடம் நடந்து கொண்டாள் .ஆனால் அவனோ ….அலையடிக்கும் பாறையாக உறுதியாக நிமிர்ந்து நின்றான் . கணவனிடமே நிலை கொண்ட மனதை வலுக்கட்டாயமாக மாற்றி அன்று சந்தித்த அவளை மண்டையை பிராண்டிக் கொண்டிருந்த பீரேமலதாவை நினைவிற்குள் கொண்டு வந்தாள் .

பெயருக்கு ஒரு கறுத்த முடி கூட தலையில் இல்லாமல் தலை முழவதும் வெளுத்த முடியுடன் இருந்த அந்த பிரேமலதா தன்னை சந்திரிகாவுடன் சேர்ந்து பாஸ்ட்டி மருத்துவமனையில்  வேலை பார்த்தவள் என அறிமுகப்படுத்தி கொண்டாள் .இப்போது பிரேமலதாஙுடன் பேசுவது சாத்விகாவிற்கு மிக விருப்பமாகி போனது .சக்கரவர்த்தி , சந்திரிகாவின் மருமகள் சாத்விகா எனும் அறிமுகம் பிரேமலதாவிற்கு மிகுந்த ஆவலை கொடுத்தது .

நிரஞ்சனா சரள இந்தியில் வேறு ஒருவருடனும் பேசிக்கொண்டிருக்க , பிரேமலதா சாத்விகாவிற்காக தன் பாஷையை ஆங்கிலத்தில் மாற்றிக் கொண்டு அவளுடன் உரையாட ஆரம்பித்தாள் .முதலில் சிறிது நேரம் சாத்விகாவிற்கு சலிக்கும் அளவு கேப்டன் சக்கரவர்த்தி , நர்ஸ் சந்திரிகா புராணமே பாடிக்கொண்டிருந்தாள் .

போர் காலங்களில் அதன் பாதிப்புகள் அதிகம் இருக்கும் கிராம புறங்களில் சக்கரவர்த்த , சந்திரிகாவின் சேவைகள் அளப்பற்ற்கரியன என்றாள் . வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மிக ஏழைகளையும் , சாக்கினை மட்டும் கதவாக கொண்டிருந்த ப்ளாட்பாரவாசிகளுக்கும் கூட இடம்  தேடி போய் சந்திரிகா மருத்துவ சேவை செய்த்தை சிலிர்ப்புடன் நினைவு கூர்ந்தாள் .

” உங்கள் பஸ்ட்டி மருத்துவமனையில் நிறைய அநாதை  இளம்பெண்களுக்கு பிரசவம் பார்த்திருக்கிறீர்களோ …? ” சந்திரிகாவின் புராணத்திற்கு முடிவு கட்டும் வகையில் மெல்ல நூல் விட்டாள் சாத்விகா .

” ம் …பொதுவாக பிளாட்பாரத்தில் வசிக்கும் இளம்பெண்களுக்கு பாதுகாப்பு மிக குறைவும்மா .இரவு தூங்கிக்கொண்டிருக்கும் போதே சில மனித மிருகங்களின் உடல் பசிக்கு சில பெண்கள் இரையாகி விடுகின்றனர் ….”

பிரேமலாதாவின் சொல் சாத்விகாவினுள் அதிர்ச்சி அலைகளை பரப்பியது .

” அது போன்ற துர் அதிர்ஷ்ட்ட பெண்களில் சிலருக்கு தாங்கள் கரு சுமந்திருப்பதே காலம் கடந்த பிறகுதான் தெரியவரும் .செய்வதறியாது அவர்கள் சந்திரிகாவிடம் வந்து நிற்கும் போது  அவர்களை சந்திரிகா எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வருவாள் .வேறு வழியின்றி அந்த பெண்களுக்கு நாங்கள் கருகலைப்பு செய்திருக்கிறோம் .அந்த பெண்களின் எதிர்காலத்தை மனதில் வைத்துதான் இந்த பாவத்தை செய்தோம் …” பிரேமலதா மனம் வருந்தினாள் .

எவ்வளவு கொடூரமான நிலை ….? சாத்விகாவின் உள்ளம் நைந்த்து .

” இதில் மனநிலை தவறிய பெண்கள் கூட உண்டு .மிருகங்கள் அந்த மாதிரி நிலையிலிருக்கும் பெண்களிடம் கூட தன் வக்கிரத்தை காட்டிவிட்டு சென்றிருப்பர். தூ ….” ஆத்திரமனைத்தையும் திரட்டி பீரேமலாதா காறி உமிழ சாத்விகா உடைந்து நொறுங்கினாள் .

அப்படி ஒரு மனநிலை தவறிய பெண்ணுக்குள் ஏதோ ஒரு சாக்கடை சூழ்நிலையில் உருவானவளா நான் …? அழிக்கும் காலங்கள் கடந்துவிட்டதால் உருவாக்கி , பின் கை மாற்றப்பட்டேனா ….? சாத்விகாவின் கண்கள் இருள துவங்கியது .

What’s your Reaction?
+1
13
+1
11
+1
0
+1
0
+1
0
+1
0
+1
3
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!