gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன்(12.04.24)

சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 05.47 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று அதிகாலை 05.16 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

வெளிநாடு சென்றவர்கள் சொந்த நாடு திரும்புவீர்கள். குழுவில் கிடைக்கும் பணத்தை பெண்கள் கணவனுக்கு கொடுப்பீர்கள். ஆலயத் திருப்பணிகளில் ஈடுபாடு காட்டுவீர்கள். தகப்பனாரின் ஆசையைப் பூர்த்தி செய்வீர்கள். வியாபாரத்திற்குத் தேவையான வசதிகளைப் பெருக்குவீர்கள். மனைவி மக்களிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எந்தக் காரணம் கொண்டும் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். நல்ல நண்பராக இருந்தாலும் சாட்சி வைத்து பணத்தைக் கொடுங்கள். கேஷ் கவுண்டரில் வேலை செய்பவர்கள் கவனத்துடன் செயல்பட தவறாதீர்கள். வியாபாரத்தில் கூட்டுச் சேர்க்காதீர்கள். தொழிலில் போட்டி வந்தாலும் அனுசரித்துப் போய்விடுங்கள். பழைய கடனை அடைக்க முயற்சி செய்வீர்கள். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.




மிதுன ராசி அன்பர்களே!

தடைபட்ட திருமண வேலை முடிக்க முயற்சி மேற்கொள்வீர்கள். வேலையிடத்தில் உயரதிகாரிகள் உற்சாகம் கொடுப்பார்கள். தடங்கல் இல்லாமல் அரசு உதவியை பெறுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் குடும்பத்தில் கலகலப்பை அதிகரிப்பீர்கள். தொழிற்சாலைகளில் உற்பத்தியை பெருக்குவீர்கள். இடையூறாக இருந்த போட்டியை இடம் தெரியாமல் செய்வீர்கள்.மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

வீம்பாக எந்தக் காரியத்திலும் இறங்காதீர்கள். அன்பானவர்கள் கூட அம்பாக மாறி குத்துவார்கள். தொழில்துறைகளில் இறக்கமான நிலையை காண்பீர்கள். கடினமாக பேசி காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். விவசாயத் வேலையில் முனைப்புக் காட்டுவீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழிலில் எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டு சிரமப்படுவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.




சிம்ம ராசி அன்பர்களே!

எளிய முறையில் வியாபாரம் செய்து பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். பிள்ளைகளின் கல்வித் திறனால் பெருமையடைவீர்கள். கல்லூரி விழாக்களில் கலந்து கொள்வீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் உங்களுக்கு வந்து சேரும். நிலம் வாங்கி விற்கும் வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். சிறிய முதலீட்டில் சிறப்பான பலனை அடைவீர்கள். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

அன்னையின் ஆசியால் அனைத்து நன்மைகளையும் பெறுவீர்கள். எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு கிடைத்து பரவசமடைவீர்கள். அரசாங்க வேலையில் சேருவீர்கள். சுணக்கமாக இருந்த தொழிலில் துடிப்புடன் ஏற்றம் காண்பீர்கள். உங்கள் பேச்சுத்திறனால் மற்றவர்களைக் கவர்ந்து இழுப்பீர்கள். கருத்து வேற்றுமையில் இருந்த கணவன் மனைவியை சேர்த்து வைப்பீர்கள்.அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.




துலா ராசி அன்பர்களே!

நண்பருக்கு இடையே எழுந்த சின்ன வாக்குவாதத்தால் பெரிய பிளவை சந்திப்பீர்கள். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூர் செல்வீர்கள். வியாபாரத்தில் சறுக்கல் நிலையால் சங்கடப்படுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சுணக்க நிலையால் பாதிக்கப்படுவீர்கள். யாரிடமும் கோபமாக பேசாதீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

நிலம் வாங்கிப் பத்திரப் பதிவு செய்வீர்கள். தடைபட்ட வீட்டு வேலைகளை மளமளவென நடத்துவீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் சிறப்பான நிலையை எட்டுவீர்கள். தொழில் போட்டிகளைத் துடைத்து ஒழிப்பீர்கள். நகை வாங்கிக் கொடுத்து மகளையும் மருமகனையும் மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். தேடி வந்த உறவுகளை நல்ல முறையில் உபசரிப்பீர்கள்.விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.




தனுசு ராசி அன்பர்களே!

குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள் ஆத்திரப்பட்டால் அவஸ்தைப்படுவீர்கள். உங்கள் நிம்மதியைக் கெடுக்க சிலர் சிலர் செய்யும் முயற்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். வெளியூர் பயணங்களின்போது பணத்தை பத்திரமாக வைக்க மறக்காதீர்கள். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். வயிற்று வலியால் அவதிப்படுவீர்கள்.பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

உங்கள் வேலைக்கு உலை வைக்க நினைப்பவர்களை அடையாளம் காண்பீர்கள். பொறுப்பாக நடந்து பொல்லாப்பில் இருந்து விடுபடுவீர்கள். அவசியத் தேவைக்காக அலைச்சல் அதிகமாகி உடல்நிலை பாதிப்பு அடைவீர்கள். மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் மருந்து சாப்பிடுவீர்கள். தொழிலில் இருந்த தடைகளை விலக்குவீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.




கும்பராசி அன்பர்களே!

தைரியமாகச் செயலாற்றி தலை நிமிர்ந்து நடப்பீர்கள். திட்டமிட்டபடி தொழில்துறைகளை லாபமாக நடத்துவீர்கள். நடைபாதை வியாபாரிகள் நல்ல லாபம் பார்ப்பீர்கள். விவசாயத் தொழிலில் மேன்மையைக் காண்பீர்கள். புதிய வாகனங்களை தவணை முறையில் வாங்குவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிக்க தவறாதீர்கள்.சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

போட்டி பந்தயங்களில் அபார வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் சாதனையால் கல்லூரிகளில் பாராட்டப்படுவீர்கள். எதிர்பாராத பண வரவால் சேமிப்பை உயர்த்துவீர்கள். கடன் சுமைகளை கட்டுக்குள் கொண்டு வருவீர்கள். புதிய தொழில் முயற்சியில் வெற்றியை காண்பீர்கள். சுவையான உணவுகளை ரசித்து மகிழ்வீர்கள். நளினமாகப் பேசி காரியம் சாதிப்பீர்.மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!