Samayalarai

ஐந்து நிமிடத்தில் சுவையான பிரட் உப்புமா செய்யலாமா?

பெரும்பாலான வீடுகளில் காலை உணவாக இட்லி, தோசை, பொங்கல் என்று தான் இருக்கும். ஆனால் காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக இதையெல்லாம் சமைத்து விட்டு அவசர அவசரமாக வேலைக்கு செல்ல வேண்டுமென்றால் சிரமமாக இருக்கும்.

எனவே உங்கள் காலை நேரத்தை மிச்சப்படுத்தும் விதமாக விரைவாகவும், சுவையாகவும் பிரட் வைத்து எளிய செய்முறையில் உப்புமா செய்யலாம் என்று இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.




தேவையானப் பொருள்கள் :

  • பிரட் துண்டு – 5

  • பெரிய வெங்காயம் – 1 (பெரியது)

  • பச்சை மிளகாய் – 1

  • பொடியாக நறுக்கிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்

  • முந்திரி – 10

  • மஞ்சள் தூள் – சிறிதளவு

  • எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

  • கடுகு – 1/2 ஸ்பூன்

  • உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

  • உப்பு – சுவைக்கேற்ப




News18

செய்முறை விளக்கம்:

  • முதலில் பிரட்டை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தனியே வைத்துக்கொள்ளுங்கள்.

  • பின்னர் அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பை போட்டுக்கொள்ளுங்கள்.

  • இவை நன்கு பொரிந்ததும் கறிவேப்பிலை மற்றும் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.

  • வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கியவுடன் அதில் மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.

  • இவை அனைத்தும் பொன்னிறமாக வெந்தவுடன் நறுக்கி வைத்துள்ள பிரட் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

  • அனைத்தும் நன்றாக கலந்து வெந்தவுடன் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பிரட் உப்புமா சாப்பிட ரெடி.




வீட்டுகுறிப்பு

  • பித்தளை பாத்திரங்களை சுத்தப்படுத்த முதலில் இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள். ஒரு கிண்ணத்தில் மூன்று டேபிள் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளுங்கள். இதில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து நன்றாக பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கொண்டு பித்தளை பாத்திரத்தை தேய்த்து பாருங்கள் பளிச்சென்று மாறி விடும். அடுத்து இதே போல் எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து அந்த கலவையும் இதுபோல தேய்க்க பயன்படுத்தலாம்.

  • இதற்கு எந்த உப்பை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். தூள் உப்பை சேர்க்கும் போது விரைவாக கரைந்து விடும். அதே போல் எல்லோர் வீட்டிலும் நிச்சயமாக அரிசி மாவு இருக்கும். இந்த அரிசி மாவுடன் எலுமிச்சை சாறு கலந்து தேய்க்கலாம். அரிசி மாவுடன் சேர்க்கும் போது பித்தளை பாத்திரத்தில் மேலுள்ள பச்சை நிறமான அழுக்குகள் கூட எளிதில் நீங்கி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

  • உங்களிடம் எலுமிச்சை சாறு இல்லை என்றால் அதற்கு பதிலாக வினிகரையும் பயன்படுத்தலாம். அடுத்து இந்த வினிகரில் பேக்கிங் சோடாவை கலந்து அதை கொண்டும் பித்தளை பாத்திரங்களை தேய்க்கலாம் இதுவும் பழைய பாத்திரங்கள் புதிது போல மாறுவதற்கு ஏற்ற ஒரு எளிய வழிமுறை. கொஞ்சம் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் இருந்தாலே போதும் அதில் சில பொருட்களை சேர்ப்பதன் மூலம் பழைய பித்தளை பாத்திரங்களை புதிது போல மாற்றி ஜொலிக்க வைத்து விடலாம்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!