Beauty Tips

அடர்த்தியான கண் புருவம் வேண்டுமா?

சிலருக்கு புருவங்கள் மிகவும் மெலிந்து விழத் தொடங்குவதை நாம் கவனித்திருப்போம். ஆனால், புருவம் அதிகமாகவும், அடர்த்தியாகவும் இருக்க வேண்டும் என்பதே பலரின் விருப்பமாக உள்ளது. நம் தலைமுடியைப் போல புருவ முடி அடர்த்தியாக இருக்க விரும்புகின்றனர். இது ஒருவகையான நன்மையைத் தருவதாகும். ஏனெனில், அதிக புருவ முடி இருப்பது நெற்றியில் இருந்து வியர்வை கண்ணுக்குள் நுழைவதைத் தடுக்க உதவுகிறது.




அடர்த்தியான புருவம் வளர தேவையானவை

புருவங்கள் அடர்த்தியாகவும், வலுவாகவும் இருக்க தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழை உதவுகிறது. இவை எந்த வழியில் நன்மைகளைத் தருகிறது என்பது குறித்துக் காண்போம்.

முடி உதிர்வைத் தடுக்கவும், முடி வளர்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த இரண்டு பொருள்களும் பெரிதும் உதவுகிறது. இவை மயிர்க்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மேலும், இவை ஈரப்பதமாக வைக்க உதவுகிறது. கற்றாழை ஆனது முடி வளர்ச்சி மற்றும் மயிர்க்கால்களை வலுப்படுத்துவதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டு பொருள்களும் புருவங்களை அடர்த்தியாக மாற்ற மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதே சமயம், இவற்றை சரியாக பயன்படுத்த வேண்டும்.




புருவத்திற்கு கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தும் முறை

    • முதலில் பாத்திரம் ஒன்றில் 1-1 ஸ்பூன் என்ற கணக்கில் கற்றாழை மற்றும் தேங்காய் எண்ணெயைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

    • பிறகு இந்த கலவையை புருவங்களில் தடவி வட்ட இயக்கத்தில் நன்கு மசாஜ் செய்யலாம்.

    • இவ்வாறு செய்வது இந்த இரண்டு பொருள்களும் மயிர்க்கால்கள் வரை நன்கு உறிஞ்சப்படுகிறது.

    • இந்த முறையை இரவு தூங்கும் முன் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடலாம்.

    • இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் புருவங்கள் அடர்த்தியாகவும், வலுவாகவும் வளர்வதைக் காணலாம்.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!