4
ஆவலுடன் முதல் பேட்டிக்கு போகும் போது ,
‘இந்த குரங்கு புத்திக் காரன் சதீஷ் குறுக்கே வந்து என்ன சொல்றான் ‘ “உனக்கு பேட்டி கொடுக்க முடியாதாம் . யாரோ போன் செஞ்சாங்க…” “வேலன் க்ரூப் ஆபிசிலிருந்து…..”
“சே…என்ன ஒரு மனுஷன்டீ இவன்…”
” மத்தவங்க சோகத்துல சந்தோஷப்படற மனசு..”
“என்ன விவரம்நு சொன்னாங்க..?” என விசாரித்தாள் பானு..
” ஏன் வினயா…நீ பேச மாட்டயா???
“சரி..சொல்லித் தொலை..”
“அவங்க எம்.டி. க்கு ஏதோ முக்கிய வேலை இருக்காம் இன்னிக்கு..
இதை விட்டா ஒரு மாசத்துக்கு டைம் கிடையாதாம்..அதான் சொல்லிட சொன்னாங்க…யாரோ எஸ்தராம் …பேசினா..”
” ஏன் முன் பின் தெரியாத ஒருத்திய உரிமையா பேசினானு சொல்ற?? பேசினாங்கனு மரியாதையா சொல்லு…”
வினயாவின் முன்னும் பின்னும் நடந்து சேலையில் இருக்கும் அவளின் உடல் அழகை அளந்த அவன் ,
“எனக்கு உன்னை முன்ன, பின்ன எல்லாம் தெரியுது..”
“அதனால் நான் உன்னிடம் உரிமை எடுத்து கொள்ளலாமா??”
‘சீ..என்ன ஒரு கழுகுப் பார்வை… அவனிடமிருந்து விலகிப் போனாள்..
அந்த எஸ்தருக்கு போன் போட்டுப் பேசி ‘வேற ஒரு நாள், நேரம் கிடைக்குமா என கேட்கலாமே ‘ ..
கால் போட்டு ‘எஸ்தருக்கு கொடுங்க’ என கேட்டாள்.
“எஸ்தர் மேடம் பிசியா இருக்காங்க..”
“உங்களை அடுத்த வாரம் பேச சொன்னாங்க…” என்றது போனின் மறு முனையிலிருந்த குரல்….வைத்து விட்டாள்.
அம்மாவிடமிருந்து மொபைலில் போன்…
“என்ன??”
எரிச்சலுடன் கேட்டாள்..
“அப்பா உனக்கு அந்த ஸ்டீபன் சாரோட பொண்ணு எஸ்தரின் நம்பர் அனுப்பிருக்காராம்.”
தேவைப் பட்டால் யூஸ் பண்ணிக்கோ…”
“ஒண்ணும் தேவை இல்லே.. அவங்களுக்கு இந்த வாரம் டைம் இல்லயாம்.”
“ஓ அப்படியா…எதுக்கும் பேசி தான் பாரேன்.”
“சரி வைய்யி போனை..என்னை கடுப்பேத்தாத..”
மெதுவாக யோசித்தாள்…
அம்மா சொன்னாற் போல் செய்தால் என்ன?
எஸ்தருக்கு வாட்ஸாப்பில் செய்தி அனுப்பினாள்…
” மேடம்… உங்களுடன் பேச விரும்புகிறேன்..”
” நான் வினயா..”
“‘தமிழ் தேசியம்’ பத்திரிக்கை நிருபர்.”
கொஞ்ச நேரம் கழித்து ரெண்டு ப்ளூ டிக் வந்திருந்தது.
‘சரி பார்த்து விட்டாங்க..
ஆனால் பதில் போடவில்லையே..’
ஒரு பிரபலத்தின் கதை ஒன்றை படித்து திருத்திக் கொண்டிருந்தாள்.
திடீரென போன் உயிர்த்தது..
“ஹலோ நான் எஸ்தர் பேசறேன்…
வினயா வா??”
அந்தக் குரலில் இருந்த ஆர்வத்தை கேட்ட வினயாவின் மனசு
நெடு நாட்களாக கேட்காத காதலனின் குரலைக் கேட்ட காதலியின் மனது போல குதூகலித்தது.
“சொல்லுங்க மேம்…
நானே உங்களுக்கு அரை மணில மெஸ்ஸேஜ் பண்ணலாம் நு இருந்தேன்…”
“அதெல்லாம் இருக்கட்டும்.
நீ எங்க இருக்க..இப்போ…??”
“நான் மந்தை வெளில இருக்கேன் மேம் .”
“சரி..ஒரு அரை மணிக்குள் எங்க ஆபிஸ்க்கு.
“கேமரா வை எடுத்துக்கிட்டு உடனே வரேன்.”
“அதெல்லாம் வேணாம். இன்னிக்கு பேட்டி எடுக்க முடியாது.”
“ஆனா அடுத்து என்ன நு பிளான் பண்ணலாம்.
“நீ தான் அப்பா சொன்ன அந்த வினயா வா??”
“இப்போதான் அப்பா மெஸ்ஸேஜ் பண்ணாரு..
நேர பேசலாம் வா..?? “
உடனடியாக பானுவிடம் சொல்லி விட்டு சேலையை சரி செய்துகொண்டு கிளம்பினாள்..
வாசலில் வந்து ஹோண்டாவில் கிளம்பி ஒரு யூ டர்ன் போடும் போது….
எதிர் கடையில் சிகரெட்டை முடித்த சதீஷ் அதை கீழே போட்டு நசுக்கி வாயில் ஏதோ ஒன்றை போட்டு மென்று கொண்டே,
இவளின் அழகை ரசித்துக் கொண்டே ‘எங்கே போகிறாள் இவள்.??’
பானுவிடம் கேட்டால் ‘எனக்கு தெரியாது’ என்றாள்.
வெளியே போகும் போது எழுதும் ரெஜிஸ்டரில் ‘வேலன் குரூப்’ என எழுதி விட்டு எங்கேயோ பெர்சனலா சென்றிருக்கிறாள்…”
“மாட்டி விடுவோமா???
அதனால் எனக்கு என்ன பயன்??”
‘நாமும் ஏதாவது சொல்லி வினயாவை பின் தொடர்வோம்…’
‘தொடர்ந்து இவள் அந்தரங்கம் தெரிந்து சமயம் வரும் போது நமது எண்ணத்தை சாதிப்போம்’, என நினைத்து ஏதோ ஒரு இடம் எழுதி புல்லட்டை கிளப்பி ராங்க் சைடில் போய் அவளை நெருங்கித் தொடர்ந்தான்.
வேலன் குழும அலுவலகத்தை அடைந்தாள் வினயா.
ரிசப்ஷனில் ,
“எஸ்தர் மேம் வரச் சொன்னாங்க..” என்றவளை ஏற இறங்க பார்த்தான் அந்த ரிசப்ஷனிஸ்ட்.
“நீங்க…??”
“வினயா…”
“மேம்..நீங்க சொன்ன அந்த வினயா வந்திருக்காங்க…”
மீண்டும் இவளை பார்த்தான்.
அவன் முகத்தில் தெரிந்தது வியப்பா? அல்லது வினாவா? என அறிய முயன்று தோற்றுப் போனாள்.
இப்படியும் சில ஆண்கள் இருக்கிறார்கள்.
சதீஷ் போன்ற சிலரின் கண்ணில் தெரியும் காமத்திற்கு ஒன்றும் பேசாத இந்த விழிகள் பரவாயில்லை என எண்ணிக் கொண்டாள்.
“வா..வினயா.. உள்ளே போகலாம் ..”என்றவளைப் பார்த்தாள்.
“என்ன கண்ணால யே அளக்கிறே..என்னை?? ..இது தான் மீடியாவில் இருப்பவங்க பார்வையா??”
“இல்லைங்க மேம்…உங்களுக்கு ஒரு நாப்பத்தஞ்சு வயசு இருக்கும்னு நெனச்சேன்..ஆனா இங்கே வந்து பாத்தா சின்னவங்களா தெரியறீங்க அதான்…”
“பாத்தியா…பசங்க மாதிரி பேசி கவர் பண்ண பாக்கறியே…”
இதற்குள் அவளது சிறிய கேபினுக்குள் சிரித்துக்கொண்டே இருவரும் நுழைந்து விட்டனர்.
“வா…சாப்பிடலாம்..”
இன்னிக்கு வெஜ் தான் எடுத்து வந்திருக்கேன்.”
“இல்ல மேம்.நானும் டிபன் பாக்ஸில் எடுத்து வந்திட்டேன்..”
இருவரும் பறிமாறிக் கொண்டே பேச ஆரம்பித்தனர்.
” ஹலோ…எஸ்தர்…”
“என்ன பண்ற ??. “
போனில் விபாகர்.
“சாப்பிடறேன் .”
” தனியே பேசிக் கிட்டே சாப்பிட்டு கிட்டு இருக்கியா??”
போனில் அவன் பேசியது வினயாவுக்கும் கேட்டது.
இவர்கள் இருவரும் பேசிக் கொள்வது கொஞ்சம் நெருக்கமாக இருப்பார்கள் போல என நினக்க தோன்றியது.
” இல்லப்பா…அந்த வினயா பொண்ணை வர சொன்னேன்..ரெண்டு பேரும் சாப்பிட்டு கிட்டு இருக்கோம்.”
“எதுக்கு?…இன்னிக்கு சாரை அரசு அலுவலகத்தில் திடீர் மீட்டிங்குக்கு கூப்பிட்டாங்களே…”
“அதுக்கு இல்லப்பா…எங்க அப்பாவும் அவங்க அப்பாவும் ஃப்ரெண்ட்ஸ் அதான் சும்மா கூப்பிட்டு பேசிக் கிட்டிருக்கோம்.”
“சரி…நாளைக்கு மதியம் நீ கேரளா புறப்படணும்..தயாரா இரு..விவரம் அப்புறம் சொல்றேன்.”
“ஓ..கேரளாவா..சூப்பர்..ரெடியாயிடறேன்.” போனை வைத்தாள்.
“இன்னிக்கு உன்னை வர சொன்னதற்கே என் அப்பா தான் காரணம்.”
” உன்னைப் பற்றி ரெண்டு நாளா சொல்லிக் கொண்டிருந்தார்.
இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி தான் அந்த வினயாதான் நீநு தெரிய வந்தது..”
“அப்பா சொன்னதை விட ரொம்ப அழகா இருக்கே..
நல்லா பழகுறே.. “
“மேம் …”
“எஸ்தர்நே கூப்பிடு. ஒன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுடுத்து…
சிலரை தான் அப்படி பிடிக்கும்.”
“அப்படி இதுக்கு முன்னாடி பிடிச்ச ரெண்டு பேரு
என் புருசன் சாமுவேல்..இன்னொண்ணு என் பாஸ்.”
“வேலன் சாரா??”
“இல்லே..இப்போ பேசினானே விபாகர்..அவன் தான் எல்லா விதத்திலும் எனக்கு பாஸ்..”
“ஆனா பாஸ் நு கூப்பிட்டா மட்டும் கோவம் வந்துடும்.ஆனா நான் வேணும்னே அவனை பாஸ் நு கூப்பிட்டு வம்பிழுப்பேன்.”
“உனக்கு ஹெல்ப் பண்ணணும்னு தோணிச்சு….”
“இரு…எனக்கு ஒரு ஐடியா…பாஸ் கிட்ட கேட்டு வரேன்.”
சிறிது நேரம் கழித்து மீண்டும் உள்ளே வந்தாள் ..
“நீ ரெண்டு நாள் எங்க கூட கேரளா வர முடியுமா??”
“வேலன் சார் சில வேலை சம்மந்தமா ஒரு நாள் பயணமா திங்கள் கிழமை கேரளா போகிறார்.”
“அங்கே வந்து டைம் கிடைக்கறச்சே நீ பேட்டி எடுக்கலாமே நு கேக்கப் போனேன்..”
“விபா தான் இந்த ஐடியா சொல்றான் ..”
“நீ ‘வேலனுடன் ஒரு நாள்’ என அவருடன் கூடவே இருந்து அவரது ஒரு நாள் பொழுது முழுவதுமாக கவர் பண்ணலாமாம்..”
“நான் எப்படியும் போகணும். “
“நாளைக்கே போனால் ஞாயிறு அன்று நாமும் கேரளாவை சுத்தி பார்க்கலாம்…” “உனக்கு ஒகே வா…”
‘மறுபடியும் கேரளாவா???’கொஞ்சம் யோசித்தாள் வினயா.
“ஏன் உங்க வீட்டில் ஒப்புக்க மாட்டாங்களா??
நான் எங்க அப்பாவை பேசச் சொல்றேன்..”
“இல்லே…அது இல்லே…”
“உங்க பத்திரிக்கைல எதுவும் சொல்வாங்களா??”
“அவங்க இதை எதிர் பார்க்கவே மாட்டாங்க… எதிர்க்கவும் மாட்டாங்க ..அவங்களுக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது ..”
“சரி…..வரேன்..எப்போ போகணும் ?”
நாம நாளைக்கு ஈவினிங் ட்ரெய்ன் ல போயிடுவோம்..வேலன் சாரும் விபாகரும் ஃபிளைட்ல அப்புறம் வருவாங்க..
“நீ திங்கள் காலை ப்ரேக் ஃபாஸ்ட் முதல் இரவு உணவு வரை கூடவே வந்து இருந்து சேதிகளை சேகரிச்சுக்கோ…”
“எப்படி ஐடியா…??
“நல்லாருக்கு எஸ்தர். ஆனா எனக்கு தான் பயமாயிருக்கு…”
“வேலன் சார் ஓகே சொல்லிட்டாரா??”
“இந்த விபாகர் சொன்னா வேலன் சார் சொன்ன மாதிரி..”
“இவனை அப்படியே நம்புவாரு …அப்படிப் பட்ட பையன்..எவ கொடுத்து வெச்சிருக்காளோ??” லேசாக கண்ணை தூக்கி வினயாவை பார்த்தாள்.
வினயா கண்டு கொள்ளாமல்,
“சரி எஸ்தர்… நான் ட்ரெயின் ரிசர்வ் பண்ணிடறேன்..டீடெய்ல் சொல்லுங்க..”
“தேவை யில்லை. நானே இதையும் ,உன்னுடைய தங்கும் இடத்தையும் அரேஞ்ச் பண்ணிடறேன்.
உன் போட்டோ ஐடி இருந்தா குடு.”
“டிரைவிங் லைசென்ஸ் இருக்கு…”
“ஜெராக்ஸ் எடுத்துக்கறேன்.”
விபாகர் கேபினுக்குள் நுழைந்து போட்டோ ஐடி யை ஜெராக்ஸ் எடுத்து வந்தாள்.
“எஸ்தர் மேம்..என்னுடைய ஒரிஜினல் லைசன்ஸ்..”
“ஓ..அதை மறந்துட்டேன்..எடுத்து வரேன்.”
எஸ்தர் ஜெராக்ஸ் மெசினில்
தேட வினயாவின் போட்டோ இப்போது விபாகர் கையில்.
“இந்தா நானே கொடுக்கணும் நு எடுத்து வர நெனச்சேன்..”
விபாகர் முகத்தில் லேசாக கள்ளத்தனம் தெரிந்து மறைந்ததை எஸ்தர் கவனிக்கத் தவறவில்லை.
“ஓகே.நான் டிக்கட் அனுப்பி வைக்கிறேன்.ரெண்டு பேரும் ஒண்ணா தான் தங்கறோம்.”
” நீ தைரியமா வந்து கவர் பண்ணு..ஆல் தி பெஸ்ட்..”
லிப்ஃடில் அவளை அனுப்பி விட்டு உள்ளே வந்தாள்.
விபாகர் வினயாவின் ஐடி கார்ட் வெச்சிருந்ததை வெச்சு அவனை ஓட்டலாம் என உள்ளே வந்தவளுக்கு ஒர் ஆச்சர்யம்…
விபாகர் கேபினின் கண்ணாடி ஜன்னல் வழியே கீழே பார்த்துக் கொண்டிருந்தான்.
எஸ்தர் பின்னாடியே நெருங்கி கீழே பார்த்தாள்.
அங்கே…’ஹெல்மட்’, ‘மாஸ்க்’ எல்லாம் போட்டுக் கொண்டு ஹோண்டாவை ஸ்டார்ட் செய்தாள் வினயா.
அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்த ஒருவனை அலட்சியம் செய்தாள்.
What’s your Reaction?
+1
15
+1
13
+1
+1
1
+1
+1
+1