Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 5

                                              5

” கடவுளே …முருகா …நீ …நீங்கள் …என்ன சொல்கிறீர்கள் …? ” சத்யமித்ராவின் குரல் நடுங்கியது .

” ஆறு மாத்த்திற்கு முன்தான் இந்த விசயம் எங்களுக்கே தெரிய வந்த்து .உள்ளேயே வளர்ந்து கொண்டிருந்த புற்றை அம்மாவுமே கவனிக்காமல் விட்டிருந்திருக்கிறார்கள் “

” அவர்களுக்கு ட்ரீட்மென்ட் ….”

” ம் …கீமோதெரபி ….எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கிறது .டாக்டர்ஸ் பிப்டி …பிப்டி என்கிறார்கள் .ம் …பார்க்கலாம் .கர்த்தர்தான் காப்பாற்ற வேண்டும் …”

சத்யமித்ராவிற்கு மிகவும் கஷ்டமாக இருக்க ” சாரி …எனக்கு தெரியாது .நான் அவர்களிடம் அப்படி பேசியிருக்க கூடாது …” என்றாள் .




” அம்மாவுடைய இந்த நிலைமைக்கு பிறகுதான் இவன் விசயத்தில் அப்பா அவருடைய பிடிவாத்த்தை விட்டு விட்டு இறங்கி வந்தார் …” என சாந்தனுவை காட்டினான் .

ஆனாலும் நோட்டீஸ் அது இதுவென்று பயமுறுத்தாமல் கொஞ்சம் சுமூகமாக நேரில் வந்து பேசியிருக்கலாம் என மனதில் எண்ணியபடி தலையாட்டினாள் சத்யமித்ரா .

” அது அப்பாவுடைய பாணி சத்யா .யாரிடமும் எதையும் அதிரடியாக செய்வதுதான் அவருடைய பழக்கம் .” இவள் எண்ணியதற்கு அவன் பதில் சொன்னான் .

” நீ எப்படியோ …? ” வாயால் கேட்காமல் கண்ணால் பார்த்தாள் .

” சில நேரங்களில் நானும் கூட அப்படி இருக்கலாம் .இதையே நீ டேவிட்டிடம் கூட பார்த்திருக்கலாம் .ஆனால் என்ன செய்வது . இது குடும்ப பழக்கம் போல .எல்லோரையும் பிடித்து கொண்டுள்ளது …” அவன் குரலில் கோபம் இல்லை .

” அதனால்தான் இவனுக்கும் அந்த பழக்கம் வந்து விடக் கூடாது என்று சாந்தனு எனப் பெயர் வைத்தேன் …” சோபாவில் குதித்து விளையாடிக் கொண்டிருந்த சாந்தனுவை பார்த்தபடி கூறினாள் .

” ம் …உன்னிடம் ஒரு வேண்டுகோள் சத்யா. அம்மாவிடம் நீ …அவர்கள் கொஞ்சம் கோபமாக பேசினாலும் …”

” இதனை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை.நான் பாரத்துக்கொள்கிறேன் …” 

” தேங்க்ஸ்மா …இனி நீங்கள் அம்மாவை நாளை  சந்தித்தால் போதும் .இரவு சாப்பிடும் போது அப்பாவை சந்திக்க வேண்டியதிருக்கலாம் .தயாராக இருங்கள் ….” என்றவன் ஒரு “ப்ரின்ஸ் பை ” யுடன் போய்விட்டான் .

அவன் சென்ற பிறகுதான் இவ்வளவு நேரமாக அவன் தன்னுடன் தமிழிலேயே பேசிக்கொண்டிருந்த்தை உணர்ந்து ஆச்சரியப்பட்டாள் .

இவன் அன்று நான்கு வருடங்களுக்கு முன்பு அவனது அண்ணனை சந்திக்க வந்த போது தமிழில் ஒரு வார்த்தை கூட தெரியாமல் இருந்த்து நினைவு வந்த்து .இப்போது இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறானே …ம் …ஒவ்வொரு இடமாக சுற்றி தொழில் பார்க்கிறவன் .இது போல் நிறைய மொழிகள் தெரிந்திருப்பது அவசியம் .அது போல் ஒரு நேரத்தில் பயின்றிருப்பானாயிருக்கும் என நினைத்துக் கொண்டாள் .

இரவு உணவினை நினைத்து இப்போதே வயிற்றினுள் அமிலம் சுரக்க தொடங்கியது சத்யமித்ராவிற்கு .அவரை …அந்த வில்லியம் ஆடம்ஸ்சை ….இந்த கிறிஸ்டியின்  அப்பாவை …நினைக்கும்போதே அன்று ஆஸ்பிடலில் சிறிதும் இளக்கமற்று அவர் நின்றிருந்த அந்த தோற்றம்தான் நினைவு வந்த்து .அவர் முன் நின்று முழுதாக ஒரு வார்த்தை பேச முடியுமென்று ஏனோ இவளுக்கு தோன்றவில்லை .

” நான் உன்னுடனேயே இருக்கிறேன் சத்யா .பயப்பட வேண்டாம் ” இரவு உணவிக்கு இவர்களை அழைக்க வந்த கிறிஸ்டியன் கூறினான் .

” நான் என்ன தப்பா செய்திருக்கிறேன் .எதற்கு பயப்பட வேண்டும் …” தைரியமாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்ட சத்யாவை பார்த்த கிறிஸ்டியனின் விழிகளில் பாராட்டோடு கொஞ்சம் கேலியும் தெரிந்தாற் போல் இருந்த்து .




” என்ன …எதற்கு இப்படி பார்க்கிறீர்கள் …? ” தனது பலவீனத்தை மறைக்க , உடனடியாக அவனுடன் ஒரு சண்டைக்கு தயாரானாள் .

” எனது பார்வை வாபஸ் .நீ மிகவும் தைரியமாக இருக்கிறாய் …” இரண்டு கைகளையும் உயர்த்தி ஒப்புக்கொடுத்தான் .

மிக சிரம்ப்பட்டு அவனின் இதழ்களுக்குள் புதைத்து கொண்ட அந்த சிரிப்பை பற்றி கேட்கலாமா என யோசித்து விட்டு , இப்போது வேண்டாம் ..பிறகு பார்த்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தாள் .

” இப்போதுதான் என் பழைய சத்யாவை பார்த்தேன் …” சாந்தனுவை தூக்கியபடி அவள் முகம் பாராமல்  மிக மெலிதாக கூறினான் .

சத்யா புரியாமல் பார்க்க  ” அன்று …நான்கு வருடங்களுக்கு முன்பு சடசட…சுருசுருவென மத்தாப்பு கம்பியாய்  பொறிந்து தள்ளினாளே …அந்த கள்ளமில்லா சத்யாவை …”

குழந்தையை தூக்கிக்கொண்டு நிமிர்ந்தவன் ” இப்போது ஏன் இப்படி அமைதியாகி விட்டாய் சத்யா ..? ” விசாரித்தான் .

” ம்ப்ச் …” என்றாள் சத்யா .அதில் …உனக்கு தெரியாதா …? என்ற சத்யாவின் அலுப்பு இருந்த்து .

” ம் … எனக்கு புரிகிறது .சரி வா போகலாம் …” மிக மென்மையான அந்த குரலில் தேவைக்கு அதிகமான ஆறுதலை உணர்ந்தவள் , அகல எட்டுக்களுடன் அவன் சற்று முன் செல்ல …ஆறுதல் தந்த அவனது அருகாமையை இழக்க விரும்பாமல் தனது பாதங்களை எட்டி வைத்து அவனோடு இணைந்து நடந்தாள் .

” கீழே அப்பா ,அத்தை , மாமாவுடன் நீங்களிருவரும்  ஷீபாவையும் ,எபனேசரையும் சந்திக்க வேண்டியதிருக்கலாம் ….” சாந்தனுக்கு மாடியிலிருந்து கீழே வேடிக்கை காட்டியபடி மாடியின் முதல் படியில் இறங்கியபடி கிறிஸ்டியன் கூறிய போது சத்யாவின் மனதினுள் வேறொரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்த்து .

இவன் சற்று முன் என்ன சொன்னான் …? என் சத்யாவா …? அப்படியா கூறினான் …? இந்த யோசனையிலேயே மாடிப்படிகள் முடிந்திருந்தன.

” அத்தையை பார்ப்பதற்காக ஷீபா வந்திருக்கிறாள் .நிச்சயம் அவள் உன்னையும் பார்க்க விரும்புவாள் …” சொல்லியபடி சென்றவன் , சத்யாவின் கவனமின்மையை உணர்ந்து

” சத்யா….” அழுத்தமாக அழைத்தான் .

” ம் …எ..என்ன சொன்னீர்கள் …? “

” ஷீபா வந்திருக்கிறாளென்றேன் ….”

” இ..இல்லை .அ…அப்போது என்ன சொன்னீர்கள் …? “

” எப்போது …? இப்போது அந்த அப்போது வேண்டாம் .இப்போதைய தேவைகளை இப்போது பார்ப்போம் .அந்த அப்போதுகளை பின்னால் பார்க்கலாம் ….”

” ஆஹா ….” சத்தமின்றி மெலிதாக கை தட்டினாள் .

” என்ன அருமையாக தமிழ் பேசுகிறீர்கள் …எப்படி இவ்வளவு தெளிவாக பேசக் கற்றீர்கள் …? “

ஏதோ சொல்ல வாயெடுத்துவிட்டு “அதை பிறகு பார்க்கலாம் .இப்போது …”

” எப்போது …அந்த அப்போதை பார்ப்பதாக வைத்திருக்கிறோமே , அதோடு சேர்த்து இந்த அதையுமா …? “

வலது தோளிலிருந்த சாந்தனுவை இடதிற்கு மாற்றிக்கொண்டு , வலது கரத்தால் அவளின் பின்மண்டையில் லேசாக தட்டினான்…

” வாய் …வாய் …இந்த வாய் இப்போது என்ன செய்கிறதென்று பார்க்கத்தானே போகிறேன் …”

” தெளிவாக சொல்லிவிடுங்கள்பா .இந்த இப்போது …எந்த இப்போது …? அப்போது பேசினோமே , அந்த இப்போதா …அல்லது ….”

” ஏய் சத்யா ….” என்ற கிறிஸ்டியன் அதற்கு மேல் பேச முடியாமல் தலையை சரித்து கடகடவென சிரிக்க தொடங்க , என்ன கம்பீரமான சிரிப்பு …என மனதினுள் நினைத்தபடி அந்த சொற்கள் வெளிவந்து விடுமோ …என பயந்து , இதழ் கடித்தபடி மென்குரலில் தானும் இணைந்து நகைக்க தொடங்கினாள் .




இவர்களின் சிரிப்பில் சாந்தனுவும் கைகளை தட்டியபடி சிரித்துக்கொண்டே , ஒரு கையை கிறிஸ்டியனின் தோளில் போட்டுக்கொண்டு மறுகையை சத்யமித்ராவின் கழுத்தை சுற்றி போட்டு தன்னருகே இழுத்துக்கொண்டான் .

முகம் மலர சிரித்த குழந்தையின் முகம் பூ மலர்ந்த்தை போலிருக்க  ,சத்யா சட்டென எட்டி சாந்தனுவின் கன்னத்தில் முத்தமிட்டாள் .

குறுகுறுத்த பார்வையுடன் அவளை பார்த்த கிறிஸ்டியன் ” நானும்தான் சிரித்தேன் …” என்றான் .

சட்டென சத்யமித்ராவின் முகத்திலிருந்த குறும்பும் , சந்தோசமும் காணாமல் போய் நாணமும் , சங்கோஜமும் வந்து அமர்ந்து கொண்டது .தனது கழுத்தை சுற்றியிருந்த சாந்தனுவின் கரங்களை அவள் எடுக்க முயல , பிள்ளை தனது தாயை விடுவதாக இல்லை .

” ஷ் …ம்மா …” என அவளை அதட்டினான் குழந்தை .வெடுக்கென குழந்தையை தள்ள முடியாமல் தவித்த சத்யாவை புன்னகையோடு வேடிக்கை பார்த்தான் கிறிஸ்டியன் .

அவனது பார்வையை சந்திக்க முடியாமல் தரையை பார்த்த சத்யாவின் பார்வையில் , நல்ல பளபள கறுப்பில் ஹை ஹீல்ஸ் அணிந்த இரண்டு கால்கள் தென்பட்டன.

தொடர்ந்து உயர்ந்த பார்வையில் வெண்ணிற கால்களுடன் , பாக்கு மட்டை நிறத்துடனான வெல்வெட் கவுன் அணிந்த அந்த அல்ட்ரா மாடர்ன் பெண் பட்டாள் .இரண்டு கைகளாலும் தன் இடுப்பினை தாங்கி நின்று கொண்டு அவளை இகழ்ச்சியுடன் பார்த்திருந்தாள் .

” என்ன நடுவீட்டில் வைத்துக்கொண்டு மூவருமாக கூத்தடித்துக் கொண்டிருக்கிறீர்கள் ….? “

மிகச்சுத்தமான அவளது மலையாளம் புரியாமல் தடுமாறிய சத்யமித்ரா , பிறகு அது புரிந்து அவளை கோபமாக பார்க்கும் முன் …

” வாட்ஸ் திஸ் ரேச்சல் .கன்ட்ரோல் யுவர் வேர்ட்ஸ் ….” என அவளை அதட்டியிருந்தான் .

அவனை அலட்சியப்படுத்தி தனது பார்வையாலேயே சத்யமித்ராவை குத்திக்  கிழித்துக்கொண்டிருந்தாள் அந்த ரேச்சல் .

” சத்யா …இது ரேச்சல் . ஷீபாவோட தங்கை ….இது சத்யமித்ரா ரேச்சல் .சங்கமித்ரா அண்ணியுடைய தங்கை …” தமிழும் , மலையாளமும் கலந்து இருவரையும்  அறிமுகம் செய்தான் .

சத்யமித்ராவின் நீண்ட கரங்களை கவனிக்காதவள் போல் தன் கைகளை இடுப்பிலிருந்து எடுக்காமலேயே முகத்தை திருப்பிக் கொண்டு போனாள் ரேச்சல் .

” அவள் அக்காவை நினைத்து அவளுக்கும் கோபம் இருக்குமில்லையா சத்யா …? ” கிறிஸ்டியன் சமாதானமாக பேசினான் .

ரேச்சலின் அக்கா ஷீபாவைத்தான் டேவிட்டிற்கு மணமுடிப்பதாக இருந்த்து . அதாவது ரேச்சலும் , ஷீபாவும் ..கிறிஸ்டியனின் அத்தை …வில்லியம்ஸின் தங்கை கரோலினின் பெண்கள் .தனக்காக மணமுடிக்க பேசப்பட்ட ஷீபாவை மறுத்துவிட்டு , அனைவரையும் எதிர்த்துக் கொண்டு  சங்கமித்ராவை மணந்து கொண்டான் டேவிட் .

வில்லியம்ஸ் ஷீபாவிற்கு தனது அந்தஸ்திற்கு சற்றும் குறையாத எபனேசரை திருமணம் முடித்து வைத்துவிட்டார் .இதில் கரோலினும் அவள் கணவன் அலெக்சும் திருப்தியடைந்தாலும் …அந்த பழைய நினைவு இவர்கள் அனைவர் மனதிலும் இருக்கத்தானே செய்யும் .ஜெபசீலி மனதில் இன்னமும் அந்த கசப்பு இருந்த்தே ….

சத்யமித்ராவின் இந்த பயம் சரியென்பது போல் அந்த டைனிங்டேபிளை சுற்றியமர்ந்திருந்த அனைவரின் விழகளும் குரோத்த்துடன் அவளை முறைத்தன.

What’s your Reaction?
+1
4
+1
3
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!