25TH CHAPTER
மிகவும் சஸ்பென்ஸான ஒரு திரைப்படத்தின் கடைசிக் காட்சியில் மூச்சைப்பிடித்துக்கொண்டு சீட்டின் கடைசி நுனியில் அமர்ந்து கொண்டு பார்ப்பார்களேஅதேபோல் தான் அந்த சப்மரைனில் இருந்த நால்வரின் நிலையும் தற்போதுஇருந்தது. ஏற்கனவே ஒரு ராட்சத மீனின் டெண்டகன்ஸ்ஸால் சற்றே பாதிக்கபட்டுஇருந்த சப்மரைன் இந்த திமிங்கலத்தின் பிடியில் மாட்டினால் அவ்வளவுதான்.
உத்ராவின் உடல் நடுங்கியது பரத்தின் கரங்களுக்குள் இன்னும்ஒண்டிக்கொண்டாள். அவனின் பிடியும் இறுகித்தான் போயிருந்தது.இறப்பிலும்பிறப்பிலும் நானும் உன்னோடுதான் என்று உத்ராவிற்கு உணர்த்துவதைப் போலஇருந்தது அந்த அணைப்பு அந்த அணைப்பிலேயே பிரியன் ஏற்படுத்திய சஞ்சலம்மற்ற பெண்களுடன் பரத்தின் பழக்கம் எல்லாமே சாம்பல் ஆனதைப்போலயிருந்தது, அவன் கைகளில் வெப்பம் அவனுக்கு பரத்தின் காதலைஉணர்த்தியது. ஏஞ்சல் அவர்களைத் திரும்பிப் பார்த்தாள் அவர்களின் பிணைப்புஅவளுக்குள்ளும் ஒரு சலனத்தை வெளிப்படுத்தத்தான் செய்தது ஆனால்அலெக்ஸின் கவனம் திமிங்கலத்திடம் இருந்து எப்படி தப்பிப்பது கூடிய வரையில்சப்மரைனின் வேகத்தை அதிகப்படுத்திக் கொண்டே சென்றான்.
சில சப்தம் ஏஞ்சலினாவைக் கலவரப்படுத்திட வைத்தது அவர்கள் அடர்ந்தபவளப்பாறைகளுக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டார்கள். ஆனால் இது தற்காலிகபாதுகாப்புதான் அலெக்ஸ் நாம் முன்பை விடவும் தற்போது அதிக பாதிப்பில்இருக்கிறோம் அலெக்ஸ்
என்ன சொல்றே ஏஞ்சல் ?
எனக்கு திமிங்கலத்தினோட பாஷைகள் தெரியும் அது இப்போ தன்னோடஇணையைக் கூப்பிடுது அந்த அதிர்வலைகளைக் கேட்டு இங்கே ஒன்று இரண்டுஇல்லை ஒரு திமிங்கலக் கூட்டமே வரலாம் ஏசோனார் ஏ போன்றஅலைவரிசையைக் கொண்டு அது தனக்கு உதவி கோருகிறது. அவர்களை விரட்டிவந்த திமிங்கலம் அதே இடத்தில் நின்று கொண்டு இருந்தது அதன் பக்கத்தில்இருந்து இரத்தகசிவு ஏற்பட்டது. பரத் என்று கூக்குரலிட்டாள் அங்கே பாருங்க….!
உத்ரா காட்டிய இடத்தில் ஏஞ்சலினா சொல்லியதைப் போல திமிங்கலத்தின்கூட்டம் ஒன்று அவர்களின் சப்மரைனைக் கடந்து சென்றது. கடவுளே இதென்னகொடுமை.. பயப்படாதே உத்ரா திமிங்கலத்திற்கு ஒரு அதிசய குணம் உண்டுநம்மை விரட்டிக் கொண்டு வந்த அந்த திமிங்கலம் இப்போது பிரசவ வேதனையைஅனுபவித்துக் கொண்டு இருக்கிறது . சாதரணமாக திமிங்கலத்தின் பிரசவ காலம்12 முதல் 17 மாதங்கள் வரை ஆகும். பிரசவ காலத்தில் மற்ற திமிங்கலங்கள்கர்ப்பிணியை காப்பாற்றும் பொருட்டு நர்ஸ் போல சுற்றி நின்று உதவி புரியுமாம். ஏஞ்சலினா சொன்னதைப் போலவே வலி தாங்க முடியாத திமிங்கலத்தைச் சுற்றிஒரு 20 அடி தொலைவில் மற்ற திமிங்கலங்கள் வட்டமிட்டு நின்று கொண்டன. அரைவட்டம் அடித்த திமிங்கலம் சப்தம் எழுப்பியபடியே உடலை அங்குமிங்கும்அசைத்துக் கொண்டு உதிரத்தை வெளியேற்றியபடியே குட்டிகளை ஈன்றதுமொத்தம் நான்கு குட்டிகள் ஒவ்வொன்றும் 25அடி நீளமும் ஒரு யானையின் எடையும்கொண்டு இருந்தது. அந்தத் தாய் திமிங்கலம் குட்டிகளை ஈன்றவுடன் மெல்லஆசுவாசப்படுகிறது தன்னுடலில் ஒட்டிக்கொண்டு கிடந்த அந்த கடைசிக் குட்டியின்தலைப்பாகத்தை வெளியிட மிக நீண்ட நேரம் போராடியது. சப்மரைனில் உள்ளநால்வரும் அதை வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். பிரசவம் என்பது எல்லாபெண் பிறப்புகளுக்கும் வலி மிகுந்ததுதான் போலும் பெண்களின்நிலைமையையே வலியைத் தாங்குவதுதானே !
அனைவரின் நினைவிலும் தன்னையும் அறியாமல் அவர்களைப் பெற்றவர்கள்நின்றார்கள். மானசீகமாக அவர்களுக்கு நன்றிசெலுத்தினார்கள் இளையவர்கள். குட்டியை ஈன்றதும் அதிக ரத்தப்போக்கு கொண்ட திமிங்கலத்தை செவிலியாய்தாங்கிய மற்ற மீன்கள் பாதுகாப்பாய் அழைத்து செல்ல பிறந்த குட்டிகளைஅழைத்து கொண்டு சில மீன்கள் அவைகளுக்கு நீருக்கு மேலே நீச்சல்கற்றுக்கொடுக்கத் தொடங்கியது. கடலுக்கு அடியில் இப்படியொரு வித்தியாசமானஉணர்ச்சி கலந்த நிகழ்வு நடக்கும் என்று அவர்கள் யாரும்எதிர்பார்க்கவில்லையென்றாலும் நடந்துவிட்ட நிகழ்வு அவர்களுக்குசொல்லவொண்ணா மாற்றத்தைத் தந்தது. கனத்த மெளனத்தை அவர்களிடம்நாட்டியமாடச் செய்தது. அதை முதலில் கலைத்தவள் ஏஞ்சலினாதான்
அலெக்ஸ் நமக்கு அருகாமையில் ஒரு சிக்னல் கிடைத்ததாக சொன்னீர்களேஅவர்கள் கூட உதவி கேட்டதாக முதலில் அவர்களைக் காப்பாற்றலாம் என்றுசிக்னல் வந்த இலக்கை நோக்கி அடைந்தார்கள். சற்று அருகாமையில் நடந்தநிகழ்வு என்றாலும் பத்மினியில் திமிங்கத்தின் உணர்வுப் போராட்டங்களைப்பார்க்க முடியவில்லை ஆனால் அவளின் கண்களில் கூட்டம் கூட்டமாக சென்றமீன்கள் மட்டும் பட்டன. அதிர்ச்சியும் பயமும் ஒருசேரத்தாக்க அவளின் இருப்பிடம்நோக்கி ஒரு சப்மரைன் வேகமாக வந்தடைந்தது அதிலிருந்து வருபவர்கள் பரத்உத்ரா என்று அறிந்ததும் தன் பசிதாகத்தைக் கூட மறந்து உற்சாகமடைந்தாள்பத்மினி…..!
சத்யா தன்னுடைய அந்தமான் பயணம் குறிந்து நிக்கோலஸிடம் பேசியிருந்தான். எனக்கென்னமோ உங்க மேல நம்பிக்கை கொஞ்சகொஞ்சமா குறைஞ்சிட்டு வருதுசத்யா…
நிக்கோலஸ் நடக்கிறது என்னன்னு எனக்கும் புரிபடலை அதை தெரிந்துகொள்ளத்தானே நானே நேரில் போறேன். சென்றமுறை நம்முடைய புரெஜெக்ட்டில்எந்த குறையும் வரவில்லையே இப்போது சிறு தவறு நடந்திருக்கிறது ப்ரியனின்நிலை என்னவென்றே தெரியவில்லை அதனால் தான் நானே நேரில் செல்கிறேன். ஏதேனும் தொழில் நுட்பக் கோளாறாகத்தான் இருக்கும் தயவு செய்து அமைதியாய்இருங்கள் நிக்கோலஸ்
எப்படி என்னால் அமைதியாய் இருக்க முடியும் சத்யா நீ என் ஒருவனுக்கு பதில்சொல்லிவிட்டால் போதும் ஆனால் நான் அப்படியில்லை என் மேலிடத்திற்கு தகவல்சொல்லவேண்டும் எந்தக் காரணம் கொண்டும் கனிமவளங்களின் வருகை நிற்கக்கூடாது என்றுதானே நமக்குள் உடன்பாடு அதில் குறையென்றால் நான் எப்படிபதில் சொல்ல முடியும். ஸாரி டூ சே திஸ் சத்யா இன்னும் ஒரு நாளைக்குள் நீ இந்தசிக்கலை சீர்ப்படுத்தவில்லையென்றால் நான் நமது உடன்படிக்கையை கேன்சல்செய்ய வேண்டிவரும் அதுமட்டுமில்லை நான் கொடுத்த பணத்தையும்திருப்பித்தரவேண்டும். எங்களுக்கு எதிராக நீ செயல்படுகிறாய் என்று எங்கள்கும்பல் மூலம் தண்டனைக்கும் ஆளாகவேண்டும். எது சிறந்தது என்று நீயே முடிவுஎடுத்துக்கொள்.
நிறுத்துங்கள் எப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை போய்விட்டதோ இனிபேசிப் பிரயோசனம் இல்லை நான் அந்தமான் சென்று பார்த்துவிட்டு உண்மையேசொன்னாலும் நீங்கள் என்னை நம்பப்போவது இல்லை பேசாமல் என்னோட நீயும்கிளம்பிவிடு நிக்கோலஸ் உண்மைநிலையை நீயே நேரில் வந்து பார்த்துவிட்டால்என்மேல் உள்ள சந்தேகம் உனக்கு தீர்ந்து விடும் அல்லவா ? அவர்கள் இருவரும்கிளம்பத்தயாரானார்கள்.
சத்யாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி அங்கே காத்திருக்கப் போகிறது என்பதைஅறியாமலேயே ?!
பத்மினி தன் கண்களுக்கும் முன் வைக்ப்பட்ட அத்தனை உணவையும் ஒருநொடியில் முடித்திருந்திருந்தாள். அத்தனை பசி உத்ராவின் பாசமான வருடலில்இன்னும் இரண்டு பிஷ்பிரை சொல்லேன் என்று கண்ணடித்தாள்.
பாவம் பத்மினி உன்னைக் கல்யாணம் செய்து கொள்ளப்போகிறவன் செத்தான். இப்படியா சாப்பிடுவே ? உத்ரா நீயும் இப்படித்தானா இல்லை என்று பரத்கிண்டலடிக்க பத்மினி ஸ்பூனைத் தூங்கி அவன் மேல் எரிந்தாள்.
அந்த கவலை உனக்கு ஏன் பரத் ? உனக்குத்தான் ஆள் இருக்கில்லை இப்போ எனக்குசாப்பாடு வாங்கிக் கொடுத்ததும் மட்டுமில்லை நான் உனக்கு செய்த உதவிக்குகாலம்பூரா எனக்கு சோறு போட்டுத்தான் ஆகணும்.
அதுக்கு நான் என் சொத்தையே எழுதி தரணும்
என்ன பரத் இது ?!அவ தன்னோட உயிரைப் பயணம் வைச்சு இந்த சதித்திட்டத்தைதகுந்த ஆதாரத்தோட கண்டுபிடிச்சிருக்காள் அதற்கு பாராட்ட வேண்டாமா ? உங்கள் கண் முன்னாலேயே இத்தனை பெரிய அநியாயம் நடந்திருக்கிறது நீங்ககண்மூடி இருந்தீங்களே அநாவசியமா அவளை குறை கூற வேண்டாம்
நான் ஒண்ணும் உன் தோழியைச் சொல்லலைம்மா எம்மா சாப்பாட்டு ராமிஇன்னும் எறா ப்ரை சொல்லவா ?
வேண்டாம் நைட்டுக்குப் பார்த்துக்கலாம் பரத் அந்த இரண்டுபேர் எங்கே
ஏஞ்சலினாவையும். அலெக்ஸ்ஸையும் கேட்கிறாயா அவர்கள் இங்கேவந்ததுகாணாமல் போன விமானத்தில் பயணித்த விஐபியை அவரைச் சேதராமில்லாமல்கண்டுபிடித்தாகிவிட்டது இல்லையா ? கண்டுபிடிக்கப்பட்டவர் அரசியல்வாதிமைக்கும் மீடியாவும்தானே அவர்களின் வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. இன்னும்ஒருவாரத்திற்கு அவர்கள் தான் டிவியோட ஹாட் நியூஸ் பிரஸ் மீட் நடக்குதுமுடிந்ததும் வந்திடுவாங்க
நீ ரொம்பவும் களைச்சி போயிருக்கே கொஞ்சநேரம் ஓய்வெடு மத்ததை அவர்கள்வந்ததும் பேசிக்கலாம் என்று பரத் சொன்னதும் பத்மினியை அழைத்துக்கொண்டுஉத்ரா சென்றுவிட அடிப்பாவி காதலனை அம்போன்னு விட்டுட்டுப்போயிட்டாளேன்னு போலியாய் வருந்தத் தொடங்கினான் பரத்
What’s your Reaction?
+1
16
+1
7
+1
+1
1
+1
+1
+1