தேவையான பொருட்கள்
அரிசி மாவு-2 கப்
தேங்காய் துருவல் -1/4 கப்
பெரிய வெங்காயம்-1
சீரகம்- ½ தேக்கரண்டி
செய்முறை விளக்கம்
-
முதலில் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். பின் தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம், சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
-
பின்பு ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் அரிசி மாவு சேர்த்து அதில் அரைத்து வைத்த கலவையை சேர்த்து பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
-
பின் பிசைந்த வைத்த மாவை உருண்டையாக உருட்டி கொள்ளவும். கட்டையால் தேய்க்க முடியாது அதனால் வாழ இலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த வாழை இலையில் உருட்டி வைத்து உருண்டையை வைத்து அதன் மேல் ஒரு தட்டை வைத்து அழுத்துங்கள்.
-
பிறகு அடுப்பை பற்ற வைத்து கடாயை வையுங்கள். தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும் தட்டி வைத்த பூரி மாவை பொரித்து எடுங்கள். அவ்வளவு தான் அரிசி மாவு பூரி ரெடி.
டிப்ஸ்
-
இந்தப் பூரி மாவை மெல்லிசாக தட்டி விடாதீர்கள். கொஞ்சம் கடினமாக தட்டிக் கொள்ளுங்கள்.
-
இதை பூரிக்கட்டையால் சப்பாத்தி மாவு போல் தேய்க்க வராது.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1