தேவையான பொருட்கள்
பச்சரிசி-1/2 கப்
துருவிய தேங்காய்-3 கப்
சர்க்கரை-1/2 கப்
ஏலக்காய்- 2
எண்ணை -1 டேபிள்ஸ்பூன்
செய்முறை விளக்கம்
-
பச்சரிசியை ஊறவைத்து நன்றாக ஆட்டவும்.
-
பின் வாணலியில் எண்ணெயை சுட வைத்து, மாவை அதில் ஊற்றி நன்கு சூடு வந்து கெட்டியாகும் வரை கிளறி இறக்கவும்.
-
-
ஆறியதும் சிறிய நீள வடிவமுள்ள உருண்டைகளாக உருட்டி ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.
-
-
தேங்காயை மிக்ஸியில் அரைத்து கெட்டியாக பால் எடுக்கவும். பால் 2 கப் அளவு இருக்க வேண்டும். அதில் சர்க்கரை சேர்த்து கலந்து அடுப்பில் வைக்கவும்.
-
வேக வைத்த உருண்டைகளை தேங்காய் பால், சர்க்கரை கலந்த பாலில் போட்டு கலந்து, ஏலக்காய் பொடி தூவி பரிமாறவும்.
டிப்ஸ்
-
வீட்டில் அரைத்த ரேஷன் அரிசியில் இந்த கொழுக்கட்டை செய்யலாம் அல்லது கடையில் வாங்கிய இடியாப்ப மாவிலும் தயார் செய்யலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1