தேவையான பொருட்கள்
பாதாம்- ஒரு கப்(250 கிராம்)
நெய்- அஞ்சு ஸ்பூன்
ரவை -2 டேபிள் ஸ்பூன்
காய்ச்சி ஆற வைத்த பால் –1/4 கப்,
காய்ச்சாத பால் – ¾ கப்
சர்க்கரை -1 கப்
மஞ்சள் கேசரி பவுடர் -1/4 ஸ்பூன்
செய்முறை விளக்கம்:
-
ஒரு கப் அளவிற்கு பாதாம் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த 250 கிராம் பாதாம் பருப்பை ஒரு பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்த தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள்.
-
20 நிமிடம் நன்கு அதன் ஆவியிலேயே பாதாம் வேக ஆரம்பிக்கும். பிறகு தண்ணீரை வடிகட்டி விட்டு ஆற விட்டு விடுங்கள். லேசாக சூடு பொறுக்கும் அளவுக்கு ஆறியதும் நீங்கள் ஒவ்வொரு பாதமாக எடுத்து அதன் மேல் தோலை உரித்து கொள்ள வேண்டும்.
-
உரித்த பாதாம் பருப்புகளுடன் கால் கப் அளவிற்கு காய்ச்சி ஆற வைத்த பால் சேர்த்து நன்கு கெட்டியாக பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.
-
பின்னர் அடுப்பில் ஒரு நான்ஸ்டிக் பேன் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் அளவுக்கு நெய் விட்டு கரையுங்கள். நெய் கரைந்ததும் அதில் இரண்டு ஸ்பூன் அளவுக்கு வெள்ளை ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
-
ரவை நிறம் மாறியதும் அதில் நீங்கள் அரைத்து வைத்துள்ள இந்த பாதாம் பேஸ்ட்டை சேர்க்க வேண்டும். பாதாம் சேர்த்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.
-
சிம்மிலேயே நன்கு கிண்டி விட வேண்டும். பாதாம் கெட்டியானதும் நீங்கள் காய்ச்சாத பால் முக்கால் கப் அளவிற்கு சேர்த்து கலந்து விட வேண்டும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு பிரட்டி விட்டு கொண்டு இருந்தால், பாலுடன் சேர்த்து பாதாம் பச்சை வாசனை போக நன்கு வெந்து வரும். திரண்டு வெந்து வரும்போது நீங்கள் சர்க்கரை சேர்க்க வேண்டும்.
-
சர்க்கரை சேர்த்ததும் லேசாக இளக ஆரம்பிக்கும். மீண்டும் ஒரு முறை பிரட்டி விடுங்கள். நன்கு இளகியதும் மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து கிண்டி விடுங்கள். அவ்வளவுதான் வாயில் வைத்தவுடன் கரையக்கூடிய சுவையான பாதாம் அல்வா தயார்.
டிப்ஸ்
-
கொதிக்கும் தண்ணீரில் மட்டுமே பாதம் வேக வேண்டும். ஊற வைத்த பின்பு வேக வைக்க கூடாது.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1