17
” தூ …நீயெல்லாம் ஒரு பொண்ணா …? ” ராமச்சந்திரனின் ஆக்ரோசத்தில் துடித்தாள் கண்ணம்மா .
” இரண்டே நாட்கள் வெளியூர் போயிருந்தேன் .அதற்குள் அப்பனும் , மகளுமாக திருமணத்தையே முடித்து விட்டீர்களே .என்னை விட அவன் பணக்காரனென்றுதானே இரண்டாம் தாரமென்றாலும் பரவாநில்லையென அவனிடம் போய்விட்டாய் ….”
” ராமச்சந்திரன் யோசித்து பேசுங்கள் …”
” இன்னமும் என்னடி யோசிக்க …? அதெப்படியடி நீங்களெல்லாம் எளிதாக ஆள் மாற்றிவிடுகிறீர்கள் …? எத்தனை தடவைதான் தாலி கட்டிக் கொள்வாய் …? “
” ராமச்சந்திரன் நடந்த்தை மறந்துவிடுவோம் .நான் இப்போது இன்னொருவரின் மனைவி …”
” ஓ…அப்போது என் மனைவி இல்லையா நீ …? எனக்கு அதெல்லாம் தெரியாது .என் மனைவி எனக்கு வேண்டும் …”
” என்ன உளறுகிறீர்கள் …? என் கணவரிடம் உங்களை பற்றி ஒரு வார்த்தை சொன்னால் போதும் ….”
” என்ன செய்து விடுவான் …? உன்னைப் போல் நானும் அவளது புருசன்தான்டா என்பேன் .ஆதாரங்களை காட்டுவேன் .அவனிடம் மட்டுமல்ல…உன் மாமியாரிடமும் …என்ன காட்டட்டுமா ….? “
திடுக்கிட்டாள் கண்ணம்மா .மணிபாரதியை கூட சமாளிக்கலாம் ஆனால் மீனாட்சியை …சாஸ்திரம் , சம்பிரதாயம் அதிகமாக பார்ப்பவர் .எனது முன் கதை தெரிந்தால் நிச்சயம் என்னை வீட்டை விட்டு விரட்டிவிடுவார் ….
” இப்போது உனக்கு என்ன வேண்டும் …? “
” அப்படி வா வழிக்கு .அவனுக்கு போல் எனக்கும் பொண்டாட்டி வேண்டும் ….” அவன் முகத்தில் குரூரம் தெரிந்த்து .
” அதெப்படி ….” என்றவள் சட்டென அவன் சொன்னதன் பொருள் புரிந்து அருவெறுப்பில் உடல் துடிக்க ,தனை மீறி பளாரென அவனை அறைந்தாள் .
” நாயே …என்னடா பேசுகிறாய் …? செருப்பால் அடிப்பேன் …”
” அடி ..ஆனால் அதற்கு பிறகு எனக்கு பொண்டாட்டி ஆகிவிடு …”
” சை …அப்படி ஒன்று உன் கனவில் கூட நடக்காதுடா …”
” சரி …அதை விடு எனக்கு இப்போது பணமுடை .கொஞ்சம் பணம் கொடு ….”
கண்ணம்மாவிற்கு இப்போதுதான் அவனது நோக்கம் தெளிவாக தொடங்கியது .
————-
” ஐ …அம்மா நம்ம கடை …” நித்திகா காரிலிருந்து கத்தினாள் .கார் அப்போதுதான் கடையை கடந்த்து .
” டிரைவர் காரை கடைக்குள் பார்க் பண்ணுங்க .நித்தி வர்றியா கடைக்குள் போகலாம் ….”
” போகலாம் .ஆனால் அப்பாவிற்கு பிடிக்குமா …? “
சொந்த கடைக்குள் வரக் கூட குழந்தைக்கு தயக்கம் .எப்படி பிள்ளையை தனிமைப்படுத்தி வைத்திருக்கிறான் .உடனே இதனை அவனிடம் கேட்க வேண்டுமென உள்ளே நுழைந்துவிட்டாள் .
” வாங்க மேடம் வணக்கம் .என்னை தெரிகிறதா …? ” பரபரப்பாக வரவேற்ற விற்பனை பெண்ணிடம் புன்னகைத்தாள் .
” தெரியாமல் இருக்குமா …? உன் பெயர் கூட சரண்யாதானே .சொல்லும்மா இப்போது எப்படி இருக்கிறாய் …? “
” ரொம்ப நன்றாக இருக்கிறேன் மேடம் .எல்லாம் உங்களால்தான் .அன்று நீங்கள் சொன்னதும்தான் முதலாளி கடையையே புரட்டி போட்டு மாற்றிவிட்டார் .அந்த சூப்பர்வைசரையே மாற்றிவிட்டார் .அவர் முதலாளிக்கு தூரத்து சொந்தமென்பதால் எங்களையெல்லாம் அதை சொல்லியே விரட்டிக்கொண்டிருந்தார் .இப்போது நல்ல சூப்பர்வைசர் ,எங்களுக்கெல்லாம் நல்ல சாப்பாடு , ஓய்வு , கவனிப்பு …அப்புறம் டிரஸ்ஸங் ரூமெல்லாம் கூட ரொம்ப பாதுகாப்பாக மாற்றிட்டாங்க .ரொம்ப நன்றி மேடம் …”
” ம் …சரி .இப்போது உங்கள் முதலாளி எங்கே …? நான் பார்க்கலாமா …? “
” ஐய்யோ என்னங்க மேடம் …நீங்கள் பார்க்காமல் …வேறு யார் …உங்கள் கல்யாணத்தோடு நான் லீவில் ஊருக்கு போயிருந்தேன் .அதனால் வர முடியவில்லை …ஒருநாள் உங்களை நேரில் வந்து பார்க்க வேண்டுமென நினைத்திருந்தேன் .நீங்களே வந்துவிட்டீர்கள் .வாங்க சார் மாடி அறையில்தான் இருக்கிறார் …” லிப்டை அவளே இயக்கி மேலே கொண்டு வந்துவிட்டாள் .
அறைக்குள் நுழையும் முன் மீண்டும் நித்திகா தயங்கினாள் .
” அப்பாவுக்கு வேலை நேரத்தில் டிஸ்டர்ப் பண்ணினால் கோபம் வரும் …”
” அதென்ன நித்தி மகள் மேல் கூடவா கோபம் …? நீ வா …அந்த கோபத்தை பார்த்திடுவோம் …”
” மே ஐ கமின் …” கேள்வியுடன் கதவை திறந்து வந்த இருவரையும் கண்டதும் மணிபாரதி புருவம் உயர்த்தினான் .வருமாறு தலையசைத்தவன் ….
” என் மனைவி , மகள் ….” எதிரிலிருந்தவர்களுக்கு அறிமுகப்படுத்தினான் .
” இவர்கள் கனடாவிலிருந்து வந்திருக்கிறார்கள் . நமது கடை உடைகளை அங்கே ஏற்றுமதி செய்யும் விசயமாக பேசிக்கொண்டிருக்கிறோம் .நீங்கள் இருவரும் பக்கத்து அறையில் வெயிட் பண்ணுகிறீர்களா …? ” முதலாளி தோரணையிலிருந்து இறங்காமல் பேசியவனை …செல்லமாய் முறைத்து சரிதான் போடா என சத்தமின்றி வாயசைத்துவிட்டு வெளியேறினாள் .
” அப்பாவுக்கு கோபம்தான் …” கவலைப்பட்ட நித்திகாவை டிரஸ் செலக்ட் செய்யும்படி சரண்யாவுடன் அனுப்பி வைத்தாள் .
” அம்மா …இந்த சுடிதாரை போட்டு காண்பியுங்களேன் …” ஆசையாய் எடுத்து வந்தாள் நித்திகா .
” நித்தி நான் உனக்கு எடுக்க சொன்னால் …எனக்கு எடுத்து வந்திருக்கிறாய் …? “
” அம்மா ..ப்ளீஸ் நீங்கள் சுடிதார் போட்டு நான் பார்த்ததில்லை .ஒரே ஒரு தடவைம்மா ….,”
” என்ன …இதையா …இதில் கையில்லை , கழுத்தில்லை …நெக் எப்படி இறங்குது பாரு …”
,” கை தச்சுக்கலாம் .சால் போட்டுக்கலாம் .ப்ளீஸ் மா …”
” ம் ..சரி உனக்காக .ஆனால் போட்டுக் காட்டிட்டு கழட்டிடுவேன் ” நித்திகாவிற்காகத்தான் அதனை அணிந்தாள் .ஆனால் அணிந்த்தும் இளமையாய் தெரிந்த தனது தோற்றத்தில் தானே ஈர்க்கப்பட்டாள் .
” ஐ…அம்மா சூப்பராக இருக்கீங்கம்மா .” நித்தி எட்டி அவள் கன்னத்தில் முத்தமிட்ட போது …
” என்ன அம்மாவும் , மகளும் திடீர்னு இந்த பக்கம் ” கேட்டபடி கதவை திறந்து உள்ளே வந்தான் மணிபாரதி .
” சும்மாதான்பா …திடீர்னு வந்த்தால் கோபமா …? ” கவலையாய் கேட்ட மகளின் தலையை வருடியவன் ….
” இதற்கெல்லாம் கோபமாடா ….? ” என்ற போது பார்வை மனைவி மேல் ஒட்டிக்கொண்டிருந்த்து .
” அப்பா …அம்மாவுக்கு சுடிதார் அழகாக இருக்கில்லை …? “
” ம் ….நல்லாயிருக்கு ….” அவன் பார்வை அவள் உடல் மேல் அலைந்த்து .
ஸ்லீவ் இல்லாமல் இருந்த தனது சுடிதாரின் கைகளை மறைக்க முயன்ற கண்ணம்மா , கணவன் பார்வை போனவித்த்தில் திணறினாள் .இந்த ஷாலை எங்கே …அதை பிரித்து தள்ளி தனியே போட்டிருந்தாள் நித்திகா .அதை எடுக்க போய் நித்திகாவின் கவனத்தை கவர மனமின்றி முள் மேல் நிற்பது போல் நின்றாள் .
” நித்தி புது மாடல் லெகிங்கா நிறைய வந்திருக்கு .போய் பாரேன் ….” மனைவி மேல் பார்வையை பதித்தபடி மகளை வெளியேற்ற முனைந்தான் .
” நிஜமாப்பா .எனக்கு பிடித்ததெல்லாம் எடுத்துக்கவா ….? “
” எடுத்துக்கோடா …உனக்கில்லாத்தா …? ” நித்திகா புது உடைகளின் ஆசையில் ஓடிவிட்டாள் .
வேகமாக ஷாலை எடுக்க போன கண்ணம்மாவின் கைகளை பற்றியவன் ” ஐந்து வயது குறைந்துவிட்டது கண்ணம்மா…” என்றான் .கண்கள் உடல் முழுவதும் பரவி தவித்தது .
” விடுங்க …” ஷாலை எடுக்க முயன்றவளை தடுத்து அங்கிருந்த ஆளுயர கண்ணாடியின் புறம் அவளை திருப்பியவன் , தானும் அவளருகில் நின்று கொண்டு ….
” உன் பக்கத்தில் நிற்கும் போது நான் கொஞ்சம் வயது அதிகமானவனாக தெரிகிறேனோ …? ” என்றான் .
அன்று தொந்தியென்று கேலி செய்த்தால் கவலைபடுகிறானோ ….யோசித்தபடி தன்னருகில் நின்ற கணவனை பார்த்தாள் .தொடர்ந்த குடிப்பழக்கத்தால் சற்றே தளர்ந்திருந்த வயிற்று பகுதி தவிர , வேறெந்த தளர்வுமற்று உயரமாக நிமிர்ந்து நின்ற கணவனை பெருமையுடன் பார்த்தாள் .
உறுதியோடு அகன்றிருந்த அவன் தோள்களில் கைகளை வைத்தவள் ….” நீங்கள் பார்மல் டிரஸ்ஸில் இருக்கிறீர்கள் .ஜீன்ஸும் , டி ஷர்ட்டும் போட்டுக் கொண்டால் , ஐந்து வயது குறைந்து விடுவீர்கள் ….” என்றாள் .
” ஐந்தா ….உனக்கும் எனக்கும் பதிமூன்று வயது வித்தியாசம் .பத்து வயதாவது குறைய வேண்டுமே ….? ”
அவன் கவலையில் கண்ணம்மாவிற்கு சிரிப்பு வந்த்து .பதிமூன்று வயதா …? அப்படியா தெரிகிறான் …
” வேண்டாம் …நீங்கள் இப்படியே இருங்கள் .இதுதான் எனக்கு பிடித்திருக்கிறது ….” சொல்லி முடிப்பதற்குள் அவளை ஆரத் தழுவியிருந்தான் .
” நிஜம்மாகவா கண்ணம்மா …இது ஒரு பிரச்சினையில்லையா உனக்கு …? ” இன்னமும் கணவனுடன் சேராமல் தான் தவிர்த்து வருவது இந்த மாதிரி சந்தேகங்களை அவனுக்குள் கொடுத்திருக்கிறதோ ….?
” மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச நீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா “
மெல்ல அவன் காதுக்குள் முணுமுணுக்க ஆச்சரியமானாள் .
” ஹேய் இந்த பாட்டெல்லாம் உங்களுக்கு தெரியுமா ..? “
அவன் கவலையில் கண்ணம்மாவிற்கு சிரிப்பு வந்த்து .பதிமூன்று வயதா …? அப்படியா தெரிகிறான் …
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா “
” ம் ….உன் அப்பா எனக்கு கொடுத்த புத்தகத்திலிருந்து படித்தேன் . பாரதி காதல் பாடல்களில் என்னமாய் உருகியிருக்கிறான் தெரியுமா …? “
” அவர் எத்தனையோ பாடல்கள் எழுதியிருக்கிறார் .காதல் மட்டும்தான் உங்களுக்கு தெரிந்த்தா ….? ” செல்லமாய் கோபித்தாள் .
” என் கண்ணம்மாவை அருகில் வைத்துக்கொண்டு காதலில்தானே மனம் போகும் கண்ணம்மா .கொஞ்சம் முன்பு என்னடி சொன்னாய் …” டா” வா …ம் ….” மோக்க் குத்தூசியாய் அவன் பார்வை …
” மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”
கணவன் உதடுகள் அழுந்திய கன்னங்கள் தகிக்க கொதித்திருந்தாள் கண்ணம்மா .
What’s your Reaction? +1 5 +1 2 +1 1 +1 +1 +1 +1
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று”
What’s your Reaction?
+1
5
+1
2
+1
1
+1
+1
+1
+1