முனியாண்டி, முனீசுவரன் என்றும் குறிப்பிடப்படுகிறார். தமிழகத்தில் தோட்டங்கள் மற்றும் பயிரிடப்படும் கிராமப் புறப்பகுதி உள்ளிட்ட இடங்களில் தமிழ் கிராமப்புற காவல் தெய்வம் ஆகும். முனீசுவரன், தென்தமிழ்நாட்டின் தமிழ்ச் சமூகத்தால் முதன்மையாக வணங்கப்படுகிறார். நோய்கள் மற்றும் விலங்குகள்/இயற்கைச் சேதங்களிலிருந்து பயிர்களைப் பாதுகாக்கும் சக்திவாய்ந்த கடவுளாக இவர் கருதப்படுகிறார்.தென்னிந்தியக் கிராமப்புற தெய்வமான மாரியம்மனின் தெய்வீக உதவி கடவுளாகவும் முனீசுவரன் அங்கீகரிக்கப்படுகிறார்.
முனியாண்டி என்ற சொல் முனி, ஆண்டி என்ற இரு சொற்களின் கலவையாகும். ஆண்டி என்ற சொல்லை இரண்டு விதமாக வரையறுக்கலாம். ஒன்று கடவுளின் அடிமையைக் குறிப்பது (ஆட்சியாளரைப் போல). இரண்டாவது விளக்கம் ஆண்டவர் என்ற சொல்லிலிருந்து பெறப்பட்டது. அதாவது ஆட்சி செய்பவர். இந்த விளக்கத்திற்குக் காரணம் ஆண்டி என்ற சொல் தமிழ் சமயங்களில் மற்ற தெய்வங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மர வழிபாடு
ஆலமரம் , அரசமரம் மற்றும்பனைமரம் போன்ற மரங்கள் முனிகள் வெவ்வேறு பரிமாணங்களுக்கு இடையே பயணிக்கப் பயன்படுத்திய நுழைவாயில்கள் என்று நம்பப்படுகிறது. முனிகளும் இத்தகைய மரங்களில் வசிப்பதாக நம்பப்படுகிறது. முனி வழிபாட்டின் மிகப் பழமையான வழிபாடு மர வழிபாடு ஆகும்.
நடுகல் வழிபாடு
சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்ச் சங்க காலத்திலேயே நடுகல் வழிபாடு குறிப்பிடப்பட்டுள்ளது. நடுகல் அல்லது வீரக்ல் (வீரர்களுக்கு) முக்கியமான ஒருவரின் மரணத்தை நினைவுகூரும் வகையில் நடப்பட்டது. முனி வழிபாட்டில், சைவ புனித சாம்பல் (விபூதி) முத்திரைகள், சந்தனம் மற்றும்குங்குமப் பூ (குங்குமம்) ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கல் அல்லது மூன்று கற்கள் (அல்லது செங்கற்கள்) எனப் பிரிக்கலாம். சிவன் மற்றும் சக்தியின் அடையாளமாக ஒரு திரிசூலம் (சூலம்) இங்கு நடப்படுகிறது.
உருவ வழிபாடு
உருவ வழிபாடு என்பது சமகால வழிபாட்டு முறையாகும். முனியினை பக்தர் உருவகப்படுத்திக் காட்சியளிக்கும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டு அலங்கரிக்கப்படுகின்றன. முனியின் வகையைப் பொறுத்து அருவாள், வாள் மற்றும் சூலாயுதம் போன்ற பிற அடையாளங்கள் பயன்படுத்தப்படும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1