Cinema Entertainment

விஜயாவை அவமானப்படுத்திய ஸ்ருதியின் அம்மா – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட் அப்டேட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சுருதி மீனாவிடம் டீ மீனா டீ போட்டுக் கொடுக்க ரோகினியும் கிச்சனுக்கு வர மூணு பேரும் சேர்ந்து டீ குடிக்கின்றனர்.

ரோகிணி இவ்வளவு சீக்கிரமா வருவீங்களே எதிர்பார்க்கல ஸ்ருதி என்று சொன்ன ஏன் வந்தது உங்களுக்கு பிடிக்கலையா என்று கேட்கிறார். ச்சே ச்சே அப்படியெல்லாம் இல்ல நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம், உங்க அப்பாவ அடிச்சிருக்காரு அந்த கோபம் உங்களுக்கு இல்லையா? முத்து உங்க வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்பார் என்று நினைத்தேன் என்று சொல்ல மீனா அவர் எதுக்கு மன்னிப்பு கேட்கணும் அவங்க அப்பா என்ன பத்தி பேசுனதுக்கு மன்னிப்பு கேட்டாரா என்று கேட்க ரோகிணி என்ன ஸ்ருதி உங்க அப்பா மன்னிப்பு கேட்கணும்னு சொல்றாங்க என்று கொளுத்தி போட ஸ்ருதி மீனா சொல்றதும் சரிதானே. ரெண்டு பேர் மேலயும் தப்பு இருக்கு நான் முத்துவோட கேரக்டர் அதுதான் புரிஞ்சுகிட்டேன் என்று பதிலடி கொடுக்க ரோகினி பல்பு வாங்குகிறார்.




பிறகு புருஷன் பொண்டாட்டி சண்டை வரத்தான் செய்யும் என்று மீனா சொல்ல சுருதியின் அது என்னவோ சரிதான் என்று சொன்ன ரோகினி முத்துவின் மீனாவும் போடாத சண்டையா இவங்க சண்டை போடும்போது கோர்ட்டுக்கு போயிடு வாங்கன்னு நினைச்சு இருக்கேன் என்று சொல்கிறார்.

பாசம் இருக்கும் இடத்தில் தான் கோபத்தை காட்ட முடியும் சண்டை போட்டாதான் ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும் என்று மீனா சொல்கிறார். ஏன் உங்களுக்கு மனோஜ்க்குள் சண்டையே வராதா என்று கேட்க ரோகினி இல்லை என்ற சொல்ல அப்புறம் எதுக்கு உங்க ஹஸ்பண்ட் மேல போய் தூங்குனாரு என்று ஸ்ருதி மடக்கி கேள்வி கேட்கிறார். அதே சின்ன ஆர்கியுமென்ட் தான் என்று சொல்ல அதுவும் பைப் தானே என்று மீண்டும் பல்பு கொடுக்கிறார் சுருதி.

பிறகு மொட்டை மாடியில் கல்யாண வாழ்க்கை பற்றி அண்ணன் தம்பிகள் மூணு பேரும் புலம்பி கொண்டிருக்க சுதி ரவிக்கு போன் போட்டு எங்க இருக்க தூங்கணும் சீக்கிரம் வா என்று கூப்பிட ரவி பதறி அடித்து ஓடி வருகிறார்.. அடுத்து ரோகினி போன் பண்ணது மனோஜூம் பதறி அடித்து ஓடி வர மீனா மட்டும் போன் பண்ணலையே என யோசிச்சு மீனாவுக்கு போன் பண்ணி எனக்கு நீ போனை போட்டு இப்ப கீழ வர சொல்ற மிரட்டுற மாதிரி பேசணும் என்று அடம் பிடிக்கிறார். பிறகு மீனாவும் பேச முத்து சந்தோஷப்படுகிறார்.

அடுத்ததாக மீனா வெளியே பூ கொடுத்து விட்டு வர கிளம்ப சுருதியின் அம்மா வீட்டுக்கு வருகிறார். இங்க வரமாட்டேங்குது தான் சொன்னா நான் தான் அவளை பேசி அனுப்பி வச்சேன் என்று டிராமா போட அந்த நேரம் பார்த்து பூ கேட்டு ஒரு பெண்மணி வீட்டுக்கு வருகிறார். விஜயாவை பார்த்து இரண்டு முழம் பூ கொடுங்க என்று சொல்ல விஜயா கடுப்பாகிறார்.




நான் பூ விக்கல என்று சொல்ல உங்க மருமகள் தானே விக்கிறாங்க, மீனா வர வரைக்கும் காத்திருக்க முடியாது. நான் ஏற்கனவே சொல்லி வச்சிருந்தேன்‌‌. பிரிட்ஜில் தான் இருக்கும் எடுத்துக் கொடுங்க என்று சொல்ல ஸ்ருதி என் அம்மா அதான் சொல்றாங்களே எடுத்துக் கொடுங்க என்று கூறுகிறார். விஜயா பூவை எடுத்துக் கொடுக்க அந்த பெண்மணி முழம் போட்டு குடுங்க என்று சொல்ல ஸ்ருதியின் அம்மாவும் பூவ முழம் போட்டு தான் குடுக்கணும் சம்பந்தி அம்மா கொடுத்து அனுப்புங்கள் என்று சொல்ல முழம் போட்டு கொடுக்கிறார். இதனால் விஜயா கடுப்பாக ஸ்ருதி நம்ம வீட்டுக்கு கிளம்பும்போது எனக்கும் இரண்டு முழம் பூ கொடுங்க என்று  போட்டு வாங்கிக் கொண்டு செல்கிறார். இதையெல்லாம் பார்த்து ரோகினி சந்தோஷப்படுகிறார்.

பிறகு சுதா வெளியே இறங்கி வரும் போது புதிய ரவி வீட்டுக்கு வருகின்றனர். கையில என்ன பூ என்று சுருதி கேட்க வீட்டுக்கு வாங்கிட்டு போறேன் சம்மந்தி அம்மா தான் முழம் போட்டு கொடுத்தாங்க மீனாவுக்கு உதவியா இருக்காங்க என்று சொல்ல மேலே வந்த ஸ்ருதி பரவால்ல ஆன்ட்டி மீனாவுக்கு உதவியா இருக்கீங்க கடையில யாரும் இல்லாமல் இருக்காங்க நீங்க போய் பார்த்துக்கோங்க என்று சொல்லி ரூமுக்கு செல்கிறார்.

இதனால் விஜயா பயங்கர கோபத்தில் இங்கும் அங்குமாக உலாத்திக் கொண்டு புலம்பி கொண்டிருக்கிறார். இதைப் பார்த்த ரோகினி இதுதான் சந்தர்ப்பம் என இன்னும் விஜயாவை ஏற்றி விட முயற்சி செய்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!