பொதுவாக நடிகைகள் பைக் ஓட்டுவது பெரிய விஷயமல்ல என்பது பலருக்கும் தெரிந்த ஒன்று தான் ஆனாலும் தமிழ் நடிகைகள் ஏதாவது ஒரு வண்டியை ஓட்டி விட்டால் அதனை பெரிதாக சமூகவலைதளத்தில் பேசி ட்ரண்ட் செய்து விடுவார்கள். அந்த வகையில் சமீபகாலமாக பல நடிகைகள் புல்லட் ஓட்டுவதை நாம் பார்த்திருப்போம்.
ஆனால் அந்த காலத்திலேயே கே ஆர் விஜயா அவர்கள் ராயல் என்ஃபீல்டு வண்டியை அசால்டாக ஓட்டியுள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது. நடிகை கே ஆர் விஜயா தென்னிந்திய சினிமா நடிகை ஆவார் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
1963ஆம் ஆண்டில் தனது வாழ்க்கையை தொடங்கினார் இவர் தென்னிந்திய சினிமாவில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரமிக்க வைத்தவர் அதுமட்டுமில்லாமல் அனைத்து முக்கியஸ்தர்களிடமும் பணியாற்றி விட்டார் கே ஆர் விஜயா அவர்களுடன் பல திரைப்படத் தொழிலாளர்கள் நடித்துள்ளார்கள்.
இவர் ஆரம்ப காலத்தில் தனது கல்வி படிப்பைத் திருச்சூர் புங்குண்ணத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் பயின்றார். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் எம்ஆர் ராதாவின் நாடகக் குழுவில் தானே நடிப்பதால் அவர் ஒரு நடிகையாக வேண்டும் என்று அவரது தந்தை விரும்பினார். இவர் சினிமாவில் ஜொலித்தது மட்டுமல்லாமல் தனியாக ஜெட் வைத்த முதல் நடிகை இவர்தான். தவிர, மாடி நீச்சல் குளமுள்ள பங்களா, குதிரை வளர்ப்பு என மிக ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த முதல் தமிழ் நடிகையும் இவர்தான்.
சினிமாவில் நடிக்கும் பொழுது முன்னணி நடிகர்களாக ஜொலித்த எம்ஜிஆர் சிவாஜி ஜெமினி கணேசன் என எல்லோருடனும் இணைந்து நடித்துள்ளார் தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என சுமார் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் அம்மன் வேடத்தில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
கே ஆர் விஜயா 1966ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான சுதர்சன் வேலாயுதம் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர் வர்த்தக நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாகவும் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்தார். இந்த தம்பதிகளுக்கு ஹேமலதா என்ற மகள் இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய இளைஞர்கள் ஓட்ட ஆசைப்படும் ராயல் என்ஃபீல்டு பைக் அந்த காலத்திலேயே நடிகை கே ஆர் விஜயா ஓட்டியுள்ளார்.
தன் கணவரான வேலாயுத நாயருக்கு மூன்றாந்தாரமாக வாழ்க்கைப்பட்டாலும், துளியும் கருத்துவேறுபாடின்றி, அவரின் இறுதிக்காலம் வரையிலும் அவருடனேயே ஒற்றுமையாக வாழ்ந்தவர். திருமணத்திற்குப் பிறகு நடிக்க வாய்ப்பு வந்தும், மறுத்து, படங்களில் தொடர்ந்து நடிக்க கணவருடைய முழு ஆதரவும், ஊக்கமும் கிடைத்தபின்னரே நடிக்க வந்தவர். முதல்தாரமாகவே கணவனுடன் நீண்டகாலம் வாழவியலாத பல நடிகைகள் மத்தியில் கே.ஆர்.விஜயாவின் இத்தகைய மணவாழ்வு ஆச்சர்யத்திற்கும், போற்றுதலுக்கும் உரியது.
தன் நூறாவது பட (“நத்தையில் முத்து”) பட வெற்றியைத் தன் செலவில் விழா வெடுத்துக் கொண்டாடிய முதல் தமிழ்நடிகை. அதில் எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர் உள்ளிட்ட திரையுலக ஜாம்பவான்கள் அனைவரும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
கால்ஷீட் குளறுபடி பெரும்பாலும் செய்யாதவர். கால தாமதமாக படப்பிடிப்புக்கு வருவதையோ, தன்னால் படப்பிடிப்பு பாதிக்கப்படுவதையோ விரும்பாதவர். படப்பிடிப்புக்குழுவினர் அனைவருடனும் நல்லிணக்கமான போக்கை மேற்கொண்டவர்.
முதல்நிலை நாயகியாக பிரபலமாக பல படங்களில் நடித்த காலகட்டத்திலேயே, இரண்டாம்நிலை நாயகியாகவும், நடித்தவர். தன் கதாபாத்திரம் பிடித்துவிட்டால் போதும் படத்தில் நடித்துவிடுவார். இப்படி நடித்தால் தன்இமேஜ் பாதிக்குமே என்றெல்லாம் ஒருபோதும் கவலைப்படாதவர்.
அப்பொழுது எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1