lifestyles Sprituality

உங்கள் பிறந்தக் கிழமைக்கான பலன்கள் பற்றி தெரியணுமா?இதோ!

உங்கள் பிறந்த கிழமைக்கான பலன்களை முழுமையாக தெரிந்துக் கொள்ள இந்தக் கட்டுரையை முழுமையாக படிக்கவும். இதில் கூறப்பட்டுள்ள பலன்கள் உங்களுக்கு சரியாக பொருந்துகிறதா என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக ஒருவருடைய ஜாதகம், ராசி, நட்சத்திரத்தை வைத்து பலன்கள் கூறப்படும். இவை எதுவும் இல்லாமல் ஒருவருடைய பிறந்தக் கிழமை வைத்து பொதுவான பலன்களை தெரிந்துக் கொள்ளலாம்.

இவ்வாறு கூறப்படும் பிறந்த கிழமை பலன்கள் பொதுவாக அந்தக் கிழமையில் பிறந்தவர்களுக்கான பொதுவான பலன்கள் ஆகும். அதாவது அந்தக் கிழமையில் பிறந்தவர்களுக்கு என்று சில குணாதிசயங்கள் ஒரே மாதிரி இருக்கும். அவற்றைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.




தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு பலன்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில் அது அவரது ஜாதகத்தை வைத்து மட்டுமே தெரிந்துக் கொள்ள முடியும்.

ஞாயிறு முதல் திங்கள் வரை ஏழுக் கிழமைகளுக்குமான பொதுப் பலன்கள் கீழே தனித்தனியான இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பிறந்தக் கிழமைக்கு கூறப்பட்டுள்ள பலன்கள் உங்களுக்கு எவ்வளவு சரியாக உள்ளது என்பதை படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

முதலில் ஞாயிற்றுக்கிழமையில் பிறந்த பலன்களை பார்க்கலாம்:

உங்களுக்கான பலன்கள் இதோ!

ஞாயிற்றுக்கிழமை சூரியன் கிரகம் அதிகமாக இருக்கிறது. சூரியன் அதிபதியாக கொண்ட ராசி சிம்ம ராசியாகும். இந்த கிழமையில் பிறந்தவர்கள் செய்யும் வேலையை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக பேச கூடியவர்கள்.

இவர்கள் அதிகாரம் செய்ய கூடிய குணம் இயல்பாக இருப்பதால் அந்த பதவியில் நல்ல செயல்படுவார்கள். இவர்களிடம் கோபம் அதிகமாக காணப்படும். இவர்களுக்கு சிறு சிறு விஷயங்கள் கூட எரிச்சல் ஏற்படுத்தி கோபமாக நடந்து கொள்வார்கள். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருப்பதை போல் தேவைப்படுபவர்களுக்கு உதவி செய்யவும் தயங்க மாட்டார்கள்.

ஒரு சிலர் அதிமாக பேசுவார்கள். இவர்களிடம் தைரியம், துணிச்சல் காணப்படும். இவர்களுக்கு அதிகமாக சுற்றுவது, பயணம் மேற்கொள்வது என்பது பிடித்தமான விஷயமாகும். ஞாயற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் நேர்மறை சிந்தனையுடனும், அன்பாகவும், பணிவுடனும் நடந்து கொள்வார்கள்.

இவர்கள் வெளிப்படையாக பேசுவதால் சில நேரங்களில் மற்றவர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரிடும். இவர்கள் சொல்வதை செய்து முடிப்பதில் வல்லவர்கள். இவர்களிடம் பொறுப்பு அல்லது வேலை கொடுத்து விட்டால் அதனை செய்து முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். எப்பொழுதும் அதே சிந்தனையில் இருப்பார்கள்.




நம்பிகை உரியவராக இருப்பீர்கள். உங்களை நம்பி பொறுப்பு அல்லது வேலை கொடுக்கலாம் ஆனால் நம்பி எந்த விஷயம் கூற முடியாது. உளறி கொட்டி தீர்த்து விடுவீர்கள். அனைத்து கற்பனை நிறைந்த வேலைகளும் ஞாயற்றுக்கிழமையில் செய்யலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் பிறந்தவர்கள் அமைதியாக யாரிடமும் நெருங்கி பழக மாட்டார்கள். இவர்களிடம் நண்பர் வட்டம் அவ்வளவு இருக்காது. உங்களுக்கு சந்தேகம் குணம் இருப்பதால் யாரையும் எளிதில் நம்ப மாட்டீர்கள். யாரேனும் ஏதுனும் சொல்லி விட்டால் அதனை பெரிதாக மனதளவில் எடுத்து கொள்வீர்கள். வெளிப்புறத்தில் உங்களுக்கு நேர்மறை உருவம் மற்றும் சிந்தனை இருக்கும். நீங்கள் யோசித்து செயல் படுவீர்கள்.

நீங்கள் உதவி செய்தாலும் உங்களின் கோபம் குணத்தால் மற்றவர்களுக்கு உங்களை பார்த்தால் ஒரு பயம் தோன்றும். நீங்கள் சுயமாக மற்றும் சுதந்திரமாக சிங்கம் போல் இருக்க விருப்பம் கொள்வீர்கள். யாரும் கட்டுப்படுத்த முடியாது, அவ்வாறு செய்தால் தோல்வி அவர்களுக்கு தான்.

உங்களின் விடாப்பிடி மற்றும் கோப குணத்தால் மற்றவர்களிடம் பழகுவதில் கடினமாக நினைப்பீர்கள். அரசு சார்ந்த வேலை, தலைமை தாங்கும் வேலைகள், கலை, மிலிட்டரி, போலீஸ், ஆசிரியர், கணினி துறையில் இருப்பீர்கள். உங்களுக்கு பொறுமை இருக்காது, விரைவில் எரிச்சல் ஏற்படுத்தி விடும். சில நேரங்களில் இந்த பொறுமை இல்லாததால் செய்யும் செயலை பாதியில் விட்டு விடுவீர்கள். தனிமையில் அதிகமாக இருக்க ஆசைபடுவீர்கள்.

ஞாயிற்றுக்கிழமையில் விழாக்கள் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடத்த சிறந்த நாளாக கருதப்படுகிறது. மேலும் சந்தோசமான மற்றும் வெற்றி நாளாகவும் கருதப்படுகிறது.

திங்கட் கிழமை பிறந்த பலன்களை நாளை தெரிந்து கொள்ளுவோம்..




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!