தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக பார்க்கப்படுபவர் சங்கர் இவர் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளன இவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லி இவர் முதன்முதலாக ராஜா ராணி என்ற திரைப்படத்தை இயக்கினார் அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில் அடுத்ததாக தளபதி விஜய் அவர்களுடன் இணைந்து தெறி, பிகில், மெர்சல் ஆகிய திரைப்படங்களை இயக்கினார் இந்த அனைத்து திரைப்படங்களும் ஓரளவு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இந்த நிலையில் கடைசியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அவர்களை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் அடுத்ததாக அல்லு அர்ஜுன் அவர்களுடன் இணைய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இது திரைப்படத்திற்கான பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது அதேபோல் அட்லி சமீபத்தில் ஒரு பேட்டியில் ஹாலிவுட்டில் இருந்து அழைப்பு வந்துள்ளதாக கூறியிருந்தார்.
மேலும் சங்கர் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் எந்திரன் இந்த திரைப்படத்தில் துணை இயக்குனராக அட்லீ பணியாற்றிய இருந்தார் அப்படி இருக்கும் நிலையில் எந்திரன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கையெழுத்து துப்பாக்கியை வைத்துக்கொண்டு நிற்கும் அன்சின் புகைப்படம் வெளியாகி உள்ளது இந்த புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாக வருகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1