gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (24.03.24)

சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.16 வரை சதுர்த்தசி. பின்னர் பௌர்ணமி. இன்று காலை 08.46 வரை பூரம். பின்னர் உத்திரம். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

மனத் துணிவோடு தொழிலை விரிவுபடுத்துவீர்கள். வியாபாரத்தில் உச்சத்தைத் தொட வேண்டும் என்ற வேட்கையோடு வேலை செய்வீர்கள். அவசரமான காரியங்களுக்கு கடந்தகால சேமிப்பை பயன்படுத்துவீர்கள். காதலிக்காக நகை வாங்கி கொடுப்பீர்கள். பங்கு பரிவர்த்தனை வியாபாரத்தை செழிப்பாக நடத்துவீர்கள்.இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

வீடு கட்டுவதற்கான வங்கி கடனை பெறுவீர்கள். புதிய ஒப்பந்தங்கள் பெற்று கட்டுமான வேலையை ஆரம்பிப்பீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் பெறுவீர்கள். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். மலர் வணிகம் செய்பவர்கள் விலை உயர்வால் மகத்தான பலன் பெறுவீர்கள்.இன்று சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக் கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகி அவஸ்தை படுவீர்கள். வயிற்றுக் கோளாறுக்கு மருத்துவமனை செல்வீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். ஆடு மாடு வளர்ப்பதன் மூலமாக அபிரிமிதமான லாபத்தை அடைவீர்கள்.இன்று நீங்கள் மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

விவசாயத் தொழிலில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள். தோப்புக் குத்தகையின் மூலம் கணிசமான வருமானம் பெறுவீர்கள். தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவீர்கள். வெளிநாட்டு பயணத்தில் உள்ள சிக்கலை தீர்ப்பீர்கள். கோயில் திருப்பணிகளுக்கு பண உதவி செய்வீர்கள். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள்.இன்று ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்கினால் வீண் விவகாரங்களில் மாட்டிக் கொள்வீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் சிலர் விபத்துக்களில் சிக்குவீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

நம்பியவர்கள் கைவிட்டதால் மனவேதனை அடைவீர்கள். வேலை இடத்தில் செய்யாத தவறுக்கு திட்டு வாங்குவீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையே காண்பீர்கள். காதலியின் கோபத்தை சமாளிக்க முடியாமல் திண்டாடுவீர்கள். கடன்கள் அதிகரிப்பதால் கவலைப்படுவீர்கள்.அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வேலை இடங்களில் உங்கள் திறமையை அதிகரித்து பாராட்டுப் பெறுவீர்கள். உங்களின் அன்பைப் புரிந்து கொண்டு பிள்ளைகளின் பாசத்தை பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த வில்லங்கத்தை தீர்ப்பீர்கள். தொழிலுக்கு எதிர்பார்த்த வங்கிக் கடனை சுலபமாக பெறுவீர்கள். பண வரவால் மன நிம்மதி அடைவீர்கள். இன்று நீங்கள் லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் கூடுதலாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

நீங்கள் எடுக்கும் நல்ல முயற்சிகளுக்கு முழுமையான பலனை அனுபவிப்பீர்கள். வேண்டாம் என்று எட்டிப் போனவர்களை ஒன்று சேர்ப்பீர்கள். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுத்து லாபம் அடைவீர்கள். அரசு ஒப்பந்தக்காரர்கள் புதிய காண்ட்ராக்டர்கள் பெறுவீர்கள். கவர்ச்சியாக பேசி காதலியின் மனதை கொள்ளை அடிப்பீர்கள்.இன்று நீங்கள் விநாயகரை வழிபட மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். எதிர்காலத்திற்கான சேமிப்பை உயர்த்த திட்டமிடுவீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். உங்களை மதித்து உறவினர்கள் வீடு தேடி வருவதால் மகிழ்ச்சி அடைவீர்கள். அக்கறையாக பணியாற்றி அதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள்.இன்று நீங்கள் பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

உதவி பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்புவதால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியில் இறங்கும் நபர்களை அடையாளம் காண்பீர்கள். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். பெண்களால் சின்ன சின்ன அவமானங்களை சந்திப்பீர்கள். கடுமையாக யாரையும் பேசாதீர்கள். சந்திராஷ்டம நாள். கவனம் தேவை.இன்று ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் நீங்கள் செல்வாக்கு பெறுவீர்கள். அரசு வேலையில் சேருவீர்கள். கட்டுமானத்துறையில் வேலைவாய்ப்பபை பெருக்குவீர்கள். இருதய நோய் தாக்குதலுக்கு ஆளான மாமனாருக்காக செலவு செய்வீர்கள். ஆடம்பரமாக செலவு செய்யாதீர்கள்.சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீனராசி அன்பர்களே!

மற்றவர்களுக்கு நல்லது செய்யப் போய் கெட்ட பேர் எடுப்பீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக் கால் வைக்காதீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்கினால் கஷ்டப்படுவீர்கள்.இன்று நீங்கள் மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!