சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 05.26 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று அதிகாலை 01.39 வரை பூசம். பின்னர் ஆயில்யம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்
மேஷ ராசி அன்பர்களே!
எச்சரிக்கையாக பைக் ஓட்டவில்லை என்றால் விபத்தில் சிக்குவீர்கள். அன்புக்குரியவரின் வெறுப்புக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அடைய மாட்டீர்கள். நம்பியவர்களால் ஏமாற்றப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்களின்போது அலட்சியமாக இருக்காதீர்கள். எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுங்கள்.விநாயகரை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே!
கணவன் மனைவிக்கிடையே நெருக்கத்தை அதிகரிப்பீர்கள். சொத்துக்களில் இருந்த வழக்ககை முடிவுக்கு கொண்டு வருவீர்கள். நோய் பற்றிய கற்பனையால் கவலைப்படுவீர்கள். வியாபாரத்தில் தெளிவு அடைவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். திறமைக்கேற்ற வேலை கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். பரபரப்பாக வேலை பார்ப்பீர்கள்.ஆஞ்சநேயர் வழிபாடு நன்மை தரும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியுடன் ஆதாயமும் தரும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.
மிதுன ராசி அன்பர்களே!
பிள்ளைகளின் உடல்நலப் பாதிப்பால் பதற்றம் அடைவீர்கள். உங்களின் கடுமையான போக்கால் உறவுகளில் விரிசலை உண்டாக்குவீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த நீங்கள் எதிர்பார்த்த பணம் கிடைக்காமல் சிரமத்தை எதிர்நோக்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சலில் அவதிப்படுவீர்கள். அரசு வேலையில் அலட்சியம் காட்டாதீர்கள்.தட்சிணாமூர்த்தி வழிபாடு தடைகளைத் தகர்த்துவிடும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நன்று.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தேவையற்ற செலவுகளால் கையிருப்பு கரையும்.
கடக ராசி அன்பர்களே!
நிதி நெருக்கடி குறைந்து நிம்மதியாக இருப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் சாதகமான பலனை பெற மாட்டீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் பாதக நிலையை சந்திப்பீர்கள். நிலம் வாங்கி விற்பதில் நல்ல லாபம் அடைவீர்கள். அந்தஸ்தை அதிகரித்துக்கொள்ள ஆடம்பரச் செலவுகள் செய்வீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த வில்லங்கம் விலகி உரிய பங்கை பெறுவீர்கள். வியாபாரம் சுமாராகத் தான் இருக்கும். துர்கை வழிபாடு காரிய வெற்றி தரும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிர்பார்த்த செய்தி கிடைப்பது தாமதமாகும்.
சிம்ம ராசி அன்பர்களே!
கிடைக்குமா கிடைக்காதா என்று இருந்த பணம் கைக்கு வந்து திக்குமுக்காடி போவீர்கள். புதிய தொழில் தொடங்குவீர்கள். வசீகரப் பேச்சால் வாடிக்கையாளர்களை ஈர்த்து அதிக ஆர்டர்கள் பெறுவீர்கள். ஐடி தொழிலில் அற்புதமான லாபம் பார்ப்பீர்கள். நினைத்த காரியங்களை தடையில்லாமல் நடத்துவீர்கள். ஒற்றைத் தலைவலியிலிருந்து விடுபடுவீர்கள்.விநாயகப் பெருமானை வழிபடுவதன் மூலம் மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி அன்பர்களே!
வெட்டியாக பேசி வீண்வம்பை விலைக்கு வாங்குவீர்கள். வேலையிடத்தில் வாக்குவாதம் செய்யாதீர்கள். மனைவியின் மனதைப் புரிந்து கொண்டு நடப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணம் சம்பாதிக்க குறுக்கு வழியில் இறங்காதீர்கள். காரியத் தடைகள் வந்தாலும் கவலைப்படாதீர்கள். கடின உழைப்பால் கம்பீரமாக நிற்பீர்கள். மகாலட்சுமியை வழிபட மகிழ்ச்சி கூடுதலாகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வராது என்று நினைத்த கடன் தொகை கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டாகும்.
துலா ராசி அன்பர்களே!
போட்டி பந்தயங்களில் வெற்றி அடைவீர்கள். சொத்து விஷயத்தில் இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பை பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் காண்பீர்கள். நிலத்தில் செய்யப்பட்ட முதலீடுகளை பன்மடங்கு பெருக்குவீர்கள். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை பெறுவீர்கள். பதவி உயர்வும் சம்பள உயர்வும் அடைவீர்கள். தாராளமாக பணம் செலவு செய்வீர்கள்.முருகப்பெருமானை வழிபடுவது நன்று.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பப் பெரியவர்களால் ஆதாயம் உண்டாகும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவியை பெற மாட்டீர்கள். வாக்கை காப்பாற்ற முடியாமல் அவமானப் படுவீர்கள். உற்பத்தியைப் பெருக்க கடுமையாக உழைப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால் நஷ்டம் அடைவீர்கள்.லட்சுமி நரசிம்மர் வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கச் செய்யும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருப்பது அவசியம்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும்.
தனுசு ராசி அன்பர்களே!
உடல்நலப் பாதிப்பால் மருத்துவச் செலவு செய்வீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைச் செய்வீர்கள். சுவாசப் பிரச்சினையால் சுகவீனம் அடைவீர்கள். சில்லரை வியாபாரிகள் மந்தமான வியாபாரத்தால் சிரமப்படுவீர்கள். ஐடி துறையில் தூக்கத்தைக் கெடுத்து வேலை பார்ப்பீர்கள். காதலியின் அலட்சியத்தால் நிம்மதி இழப்பீர்கள்.சிவபெருமானை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பதற்றம் தவிர்க்கவும்.
மகர ராசி அன்பர்களே!
நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையால் தொழிலை மேம்படுத்துவீர்கள். வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த தொழிலை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். கழுத்தில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றுவீர்கள். அன்பை வெளிப்படுத்தி காதலியின் மனதில் இடம் பிடிப்பீர்கள். ஆடம்பரமாக செலவு செய்வீர்கள்.இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது,
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கும்பராசி அன்பர்களே!
குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள். சகோதரிக்கு பண உதவி செய்வீர்கள். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அபிரிமிதமான பலனை அடைவீர்கள். வெளியூர்களில் கிளைகள் திறக்க முயற்சி மேற்கொள்வீர்கள். தொழிலுக்கு வாங்கிய பழைய கடன்களை அடைத்து நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சியுடன் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
மீனராசி அன்பர்களே!
இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பீர்கள். அரசு வகையில் வரவேண்டிய தொகைகளை பெறுவீர்கள். பெண்களால் ஆதாயம் அடைவீர்கள். வரவுகளை அதிகரித்து சேமிப்பை உயர்த்துவீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலை சிறப்பாக நடத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் விரும்பிய இடமாறுதல் பெறுவீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபட சிரமங்கள் குறையும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் மனதில் சஞ்சலம் ஏற்படும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற செலவு செய்ய வேண்டி வரும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1