Cinema Entertainment

விஜய்யை பற்றி வெளிப்படையாக பேசிய நடிகர் அருண் பாண்டியன்!.

தமிழ் சினிமாவில் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானாலும் கூட தொடர்ந்து போராடி மக்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஜய். சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டத்திலேயே ஒரு ஆக்ஷன் ஹீரோவாக ஆக வேண்டும் என்பதுதான் விஜயின் ஆசையாக இருந்தது.




ஏனெனில் சிறு வயதிலேயே விஜய் அதிகபட்சம் விஜயகாந்த் திரைப்படங்களில்தான் நடித்து வந்தார். இதனால் விஜயகாந்தை பார்த்து அவரைப் போலவே ஆக்ஷன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் விஜய்க்கு ஆசையாக இருந்தது.

ஆனால் ஒரு ஆக்ஷன் கதாநாயகனாக விஜய்யை ஏற்றுக்கொள்ள மக்கள் பெரிதாக தயாராக இல்லை. எனவே காதல் திரைப்படங்களில் நடிக்க துவக்கினார் விஜய். பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும் மாதிரியான காதல் திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தன. மிகத் தாமதமாகத்தான் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கினார் விஜய்.




திருமலை திரைப்படத்தில் துவங்கி கில்லி, சிவகாசி, திருப்பாச்சி என்று அனைத்து திரைப்படங்களும் ஆக்ஷன் படங்களாகவே அமைந்தன. இந்த நிலையில் தற்சமயம் அரசியலிலும் கால் பதித்திருக்கிறார். விஜய்யின் வெற்றி கழகம் கட்சியானது 2026 இல் தேர்தலில் நிற்கும் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இது குறித்து பேசிய நடிகர் அருண்பாண்டியன் கூறும் பொழுது சினிமாவைப் பொறுத்தவரை எனக்கும் விஜய்க்கும் இடையே நிறைய பிரச்சனைகள் இருந்திருக்கின்றன. ஆனால் அவருடைய அரசியல் வருகை என்பதை நான் பாராட்டுகிறேன். ஏனெனில் எந்த ஒரு நடிகரும் சினிமாவில் வாய்ப்புகள் இல்லாமல் போன பிறகுதான் அரசியலுக்கு வருவார்கள்.

ஆனால் விஜய்யை பொருத்தவரை சினிமாவில் வரவேற்பு இருக்கும்பொழுதே மக்களுக்கு தொண்டு செய்வதற்காக அரசியலுக்கு செல்கிறார் விஜய். எனவே அது முழுமையாக பாராட்ட வேண்டிய ஒரு விஷயம் ஆகும் என்று கூறி இருக்கிறார் அருண் பாண்டியன்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!