gowri panchangam Sprituality

இன்றைய ராசி பலன் (25.02.24)

சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 08.54 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று முழுவதும் பூரம். உத்திராடம் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.




மேஷ ராசி அன்பர்களே!

வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். கல்விப் பணியில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். பூர்வீகச் சொத்துக்களை பெறுவீர்கள். தொழில் போட்டிகள் குறைந்து வியாபாரத்தில் விருத்தி அடைவீர்கள். அன்புடன் பேசி காதலியயை அரவணைப்பீர்கள். அவசியமான செலவுகள் செய்து அந்தஸ்தை உயர்த்திக் கொள்வீர்கள்.இன்று சிவபெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷப ராசி அன்பர்களே!

எதிர்பார்த்த வங்கிக் கடனை தடையின்றி பெறுவீர்கள். அரசாங்க ஒப்பந்தங்களால் அனுகூலம் அடைவீர்கள். கடுமையான போட்டிக்குப் பின்னர் காண்ட்ராக்ட் எடுப்பீர்கள். மனைவியின் ஒற்றைத் தலைவலியை போக்க மருத்துவரை சந்திப்பீர்கள். சிறு வியாபாரிகள் நல்ல லாபம் அடைவீர்கள். மலர் வணிகம் செய்பவர்கள் மகத்தான பலன் பெறுவீர்கள்.ஆறுமுகப் பெருமானை வழிபட அல்லல்கள் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் சில பிரச்னைகள் ஏற்படும்.

மிதுன ராசி அன்பர்களே!

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களில் அலைச்சலால் அவதிப்படுவீர்கள். வயிற்றுக் கோளாறை சரி செய்ய மருத்துவரை நாடுவீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனம் களவு போய் காவல் நிலையம் செல்வீர்கள். உறவினர்களை ஒன்று சேர்க்க பாடுபடுவீர்கள்.
அம்பிகை வழிபாடு அளவற்ற மகிழ்ச்சி தரும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிணக்கு கள் நீங்கும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

கடக ராசி அன்பர்களே!

உயிர்த்தொழில் என்று சொல்லக்கூடிய பயிர்த் தொழிலை சிறப்பாக செய்வீர்கள். விவசாயிகள் நல்ல லாபம் பெறுவீர்கள். தொழிற்சாலையில் உற்பத்தியை பெருக்குவீர்கள். இடையூறுகளைத் தாண்டி வெளிநாட்டில் வேலை செய்வீர்கள். புதிதாக தொழில் தொடங்குவீர்கள். பிள்ளைகள் நலனில் கூடுதல் அக்கறை செலுத்துவீர்கள். எதிர்பார்த்த அரசு பணியில் அமர்வீர்கள்.இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் நன்மைகளை கூடுதலாகப் பெறலாம்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சி சாதகமாக முடியும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

சிம்ம ராசி அன்பர்களே!

எடுத்த காரியத்தில் தடை ஏற்படுவதால் மனச்சோர்வு அடைவீர்கள். கடன் காரணமாக சொத்துக்களை விற்றவர்கள் புதிய மனை இடம் வாங்குவீர்கள். கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொழிலில் இறங்காதீர்கள். கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்துகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். காதலியிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள்.
தட்சிணாமூர்த்தியை வழிபட உடல் ஆரோக்கியம் மேம்படும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

நம்பியவர்களால் தக்க சமயத்தில் ஏமாற்றப்படுவீர்கள். பணியிடங்களில் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். டீக்கடையில் அமர்ந்து கொண்டு தேவையற்ற விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான நிலையை காண்பீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் அதிக லாபம் பெற மாட்டீர்கள். ஷேர் மார்க்கெட்டில் அதிக முதலீடு செய்யாதீர்கள்.வேங்கடேச பெருமாளை வழிபடுவதன் மூலம் மனஅமைதி பெற லாம்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையை அனுசரித்துச் செல்வது அவசியம்.

துலா ராசி அன்பர்களே!

தாராளமான பணப்புழக்கத்தால் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்பார்த்ததைவிட தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரிகள் விற்பனையில் சாதுரியமாகப் பேசி சாதகமான பலனை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உரிய மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். பழைய கடன்களை அடைப்பீர்கள்.லட்சுமி நரசிம்மரை வழிபட முயற்சிகள் சாதகமாக முடியும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்களை ஒவ்வொன்றாக விலக்குவீர்கள். வியாபார விருத்திக்கு பெண்களின் சேமிப்பைப் பெறுவீர்கள். தொழிலில் செய்த முதலீட்டால் பல மடங்கு லாபத்தை பெறுவீர்கள். முன்பு வாங்கிப் போட்ட நிலத்தின் மதிப்பு உயர்ந்து மனநிறைவை அடைவீர்கள்.முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் மனஅமைதி பெறலாம்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

தனுசு ராசி அன்பர்களே!

மனைவி பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்வீர்கள். மேம்போக்காக இருந்த நீங்கள் சேமிப்பில் நாட்டம் கொள்வீர்கள். பழைய கடன்களை அடைக்கும் முயற்சியில் இறங்குவீர்கள். உங்களால் முடிந்த உதவியை பிறருக்கு செய்வீர்கள். வேலையாட்களின் உதவி யால் வியாபாரத்தை நல்ல முறையில் நடத்துவீர்கள். நிலையான வருமானம் பெற்று நிம்மதியாக உறங்குவீர்கள்.இன்று நீங்கள் ஆஞ்சநேயரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

மகர ராசி அன்பர்களே!

நீங்கள் உதவி செய்தவர்களால் உபத்திரவம் அடைவீர்கள். கூட இருந்து குழி பறிக்கும் முயற்சியை முறியடிக்க சிரமப்படுவீர்கள். ஐந்தாம் படையினரை அடையாளம் காண்பீர்கள். வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவீர்கள். வார்த்தைகளை அளந்து பேசுவீர்கள். நிதானமாக செயல்படுவீர்கள். சந்திராஷ்டம நாள். சங்கடங்களைச் சந்திக்காதீர்கள்.மகா விஷ்ணு வழிபாடு மகிழ்ச்சி தரும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சங்கடம் ஏற்படும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படும்.

கும்பராசி அன்பர்களே!

உங்கள் பேச்சாலும் செயலாலும் மற்றவர்களைக் கவர்வீர்கள். இல்லாதவருக்கு உதவி செய்வதன் மூலம் உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். அரசாங்கப் பதவியை அலங்கரிப்பீர்கள். சளி தொல்லையால் சங்கட்டப்படுவீர்கள். உரிய நேரத்தில் தொலைபேசியை எடுக்காமல் காதலியிடம் திட்டு வாங்குவீர்கள். கோயில் திருப்பணிக்கு உதவுவீர்கள். இன்று மகாலட்சுமியை வழிபடுவதன் மூலம் நன்மைகள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் தெய்வவழிபாடு நடத்தும் வாய்ப்பு ஏற்படும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கியமான விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு உகந்த நாள்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனராசி அன்பர்களே!

நீங்கள் நல்லது சொன்னாலும் மற்றவர்கள் தப்பாகப் புரிந்து கொள்வதால் மன வேதனைப்படுவீர்கள். குடும்பத்தினரின் செய்கையால் மனக் குழப்பம் அடைவீர்கள். வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகமாகி உடல் உபாதையில் சிக்குவீர்கள். செய்யாத குற்றத்திற்கு நீங்கள் தண்டனை பெறுவீர்கள். அகலக் கால் வைக்காதீர்கள். கடன் வாங்காதீர்கள்.குலதெய்வத்தை வழிபட அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!