கறிவேப்பிலை இல்லாது பெரும்பாலான சமையல் முடிவடையாது. இந்த இலைகள் சமையலுக்கு மட்டுமின்றி மருத்துவத்துக்கும் பயன்படுகின்றன. இந்த இலைகளை வளர்ப்பது பல வகையில் உதவியாக இருக்கும்; இவற்றை வளர்ப்பது மிகவும் எளிமையான காரியம்.
கறிவேப்பில்லை பொதுவாக அனைத்து வகை மண்ணிலும் வளரும் தன்மை கொண்டது இருப்பினும் நன்கு நீர் வடியக்கூடிய மண்ணாக இருந்தால் எந்த இடையூறும் இல்லாமல் செழித்து வளரும், அத்தகைய குணம் கொண்ட செம்மண்ணை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும், அதனுடன் செறிவூட்டப்பட்ட உரம் அதாவது மக்கிய தொழுஉரம் அல்லது மண்புழு உரம் இரண்டையும் சமபங்கு கலந்து மண்கலவை தயார் செய்யவும்.
வளர்க்கும் முறை
இந்த செடிகளை வளர்க்க 2 விதமான முறைகள் உள்ளன.
முதல் முறை: கறிவேப்பிலை விதைகளை விதைத்து அவற்றை செடியாக மாற்றுவது. இந்த விதைகள் செடியாக ஓரிரண்டு காலம் எடுக்கும் – இது மிக மெதுவான முறை ஆகும்.
இரண்டாம் முறை:
-
கறிவேப்பிலையின் ஒரு கொத்தினை, வளம் கொண்ட மண் நிரப்பப்பட்ட ஆழமான ஜாடியில் நட்டு வளர்ப்பது. இந்த ஜாடியில் அதிகப்படியான நீரை வெளியேற்றும் துளைகள் இடப்பட்டுள்ளனவா என்று உறுதி செய்து கொள்ளவும்.
-
வளர்க்கும் முறை கறிவேப்பிலை செடியை கதிரவனின் கதிர் படும்படி வைக்க வேண்டும். குளிர்காலத்தில் இச்செடி இலைகளை உதிர்த்திடும், ஆகையால், இந்த காலத்தில் செடிக்கு நீர் விடுவதை நிறுத்தவும்.
-
இரும்பு சத்து கொண்ட உரத்தை செடிக்கு பயன்படுத்தவும். இந்த செடியில் தோன்றும் பழங்களை நீக்கிவிட வேண்டும்; இது மேலும் அதிக இலைகள் வளர உதவும். செடியின் காய்ந்த இலைகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும். செடி 6 அங்குல நீளம் அடைந்ததும் அதை பறித்து பயன்படுத்தலாம்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1