🌹பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி “சங்கரமஞ்சி ஜானகி என்ற எனது பெயர் சவுகார் படத்தில் நடித்த பிறகு சவுகார் ஜானகியாக மாறிவிட்டது.
🌹நான் 90 வயதை நெருங்குகிறேன். இப்போதும் எனது வேலைகளை நானே செய்கிறேன்.
🌹74 ஆண்டுகளுக்கு முன்பு நடிக்க ஆரம்பித்தேன். சவுகார் பட வசனத்தை தூக்கத்தில் எழுப்பி இப்போது கேட்டாலும் சொல்வேன். எனக்கு 15 வயதிலேயே பால்ய விவாகம் நடந்தது.
🌹விஜயவாடாவில் குடியேறினோம். கணவருக்கு வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டோம். சென்னை வந்து தங்கி பல சோதனைக்கு பிறகு சவுகார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
🌹அந்த படத்தில் எனக்கு ரூ.2 ஆயிரத்து 500 சம்பளம் தந்தனர். குடும்ப கஷ்டத்தில் இருந்து மீளத்தான் சினிமாவுக்கு வந்தேன்.
🌹சிவாஜி கணேசன் ஆதரவு தந்தார். புதிய பறவை படத்தில் கவர்ச்சியாக நடித்த காட்சிக்கு வரவேற்பு கிடைத்தது. 500 படங்களிலும், 300 நாடகங்களிலும் நடித்து இருக்கிறேன். வருடத்துக்கு 20 படங்களில் நடித்தேன்.
🌹முன்பெல்லாம் காப்பி அதிகம் குடிப்பேன். இப்போது அந்த பழக்கத்தை விட்டு தேன், இஞ்சி பொடி, சீரக பொடி கலந்து தண்ணீர் குடிக்கிறேன். ஆரோக்கியமான உணவு சாப்பிடுகிறேன்.
🌹எனக்கு சமையல் தெரியும். நானே சமைத்து எல்லோருக்கும் பரிமாறுகிறேன். தயிர், வாழைப்பழம், பருப்பு வகைகள் சாப்பிடுகிறேன். வெண்ணெய், பால் அளவோடு எடுத்துக்குவேன்.
🌹பசி இல்லாவிட்டால் பழம் மட்டும் சாப்பிட்டு படுத்துக்கொள்வேன். எனது நல்ல பழக்கத்தால் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் எதுவும் இல்லை. இரண்டு முழங்கால் ஆபரேசன் செய்தேன். இருதய அறுவை சிகிச்சையும் நடந்தது.
🌹ஆனாலும் எனது வேலையை நானே செய்து கொள்கிறேன். வீட்டு வேலைதான் எனது உடற்பயிற்சி, கடவுள் மீது பக்தி உள்ளது.
🌹ஆண்டவன் புண்ணியத்துல இப்போ நல்லா இருக்கேன். நிறைய சினிமா வாய்ப்புகள் வந்துச்சு. நான்தான் சில வாய்ப்புகளைத் தவிர்த்துட்டேன்.
🌹 மகன், மகள் அமெரிக்காவில் இருக்காங்க. ஒரு பொண்ணு மட்டும் சென்னையில் இருக்கா. நான் பெங்களூரில் எனக்கான வீட்டில் இருக்கேன். கொள்ளுப் பேரன், பேத்தியும் இருக்காங்க.என்னை கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க.
🌹நான் யாரையும் எதிர்பார்க்காமல் தொண்ணூற்று மூன்று வயசுல கூட கடவுளை நினைச்சுக்கிட்டு பேரப் பிள்ளைகளுக்கு ஊறுகாய், ஜாம்னு ரெடி பண்ணிக் கொடுத்துட்டு சந்தோஷமா இருக்கேன்!” எனச் சிரிக்கிறார், சௌகார் ஜானகி.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1