gowri panchangam Sprituality

மகாபாரதக் கதைகள்/தானத்திற்கும் தர்மத்திற்கும் ஆன வேறுபாடு – மகாபாரதம் கூறும் மகத்தான கதை

மகாபாரதத்தில் கர்ணன் என்ற கதாபாத்திரம் தர்மத்திற்கு மிகவும் பெயர் பெற்றது. தானத்திற்கும் தர்மத்திற்கும் ஆன வேறுபாடு என்ன என்பது பற்றி கர்ணன் செய்த தான தர்மங்கள் வாயிலாக நாம் அறிவோம்.




மகாபாரதம் என்று கூறினாலே கண்ணபிரான் எப்படி நம் மனக்கணில் வந்து நிற்பாரோ அதேபோல வந்து போகும் கதாபாத்திரங்களில் முக்கியமானது கர்ணனின் கதாபாத்திரம். கர்ணன் இருந்தது தவறான இடமாக இருந்தாலும் அவன் அனுபவித்த வேதனைகள் அவனை சிறு சிறு தவறுகள் செய்ய வைத்திருந்தாலும் அவன் செய்த ஈகை குணத்தின் காரணமாக வானளவு உயர்ந்து நின்றான் என்பதே உண்மை. அப்படிப்பட்ட கர்ணன் சூரியனின் பிள்ளையாக குந்திதேவிக்கு பிறந்தவன். குருசேத்திரப் போரில் கர்ணன் இறந்த பிறகு அவனது ஆன்மா தனது தந்தையான சூரியதேவனையும் சிவபெருமனையும் வணங்கி சொர்க்கலோகம் சென்றது.




இந்த நேரத்தில் சூரியனுக்கு மிகப்பெரிய சந்தேகம் மனதில் உழன்று கொண்டிருந்தது. போர்க்களத்தில் அர்ஜுனன் வீட்டு அம்புகள் மார்பில் பாய்ந்த போதும் மரணிக்காமல் இருந்தால் கர்ணன். அப்போது அவனது உயிரை அவன் செய்த புண்ணியங்கள் காத்து நிற்பதாக கிருஷ்ணர் கூறுவார். அந்த புண்ணியங்களை எல்லாம் வயதான அந்தணரின் உருவில் வந்து கிருஷ்ணர் பெற்ற பிறகு அர்ஜுனன் விடும் அம்புக்கு கர்ணன் உயிர்துறப்பான். புண்ணியங்களின் பலனாக கர்ணனின் உயிர் பிரியவில்லை என்பதால் அந்த புண்ணியங்களை யாசகமாக பெற்றார். கிருஷ்ணர் இதன் மூலம் கர்ணனுக்கு மேலும் புண்ணியம் சேர்ந்து மரணமே நிகழ்ந்திருக்கக் கூடாது அல்லவா இதுதான் சூரியனின் மன குழப்பத்திற்கு காரணம். அந்த மனக்குழப்பத்தாலும் கோபத்தாலும் அவரது உடல் வெப்பம் அதிகரித்தது. இதை உணர்ந்த ஈசன், சூரியனின் முன்பாக தோன்றி “சூரியனே உன் மனதில் என்ன தடுமாற்றம் ?”என்று கேட்டார்.சிவபெருமானை வழங்கிய சூரியன் “ஐயனே பலவிதமான தான தர்மங்களை செய்து புண்ணியங்களை சேர்த்து வைத்த என் மகன் கர்ணனை போரில் கொன்றது விதி என்று ஏற்றுக்கொண்டேன். ஆனால் எல்லா புண்ணியங்களையும் கிருஷ்ணருக்கு தானமாக அளித்ததால் அவன் இன்னும் பெரிய புண்ணியவான் ஆகி விடுகிறான். பிறகு எப்படி அவனுக்கு மரணம் ஏற்பட்டது? இது எனக்கு அநீதியாக தெரிகிறது இறைவா” என்றார்.




முகத்தில் புன்னகையை படரவிட்ட ஈசன் “பொதுவாக மனிதர்களுக்குள் ஏற்படும் சலனமே உன்னை இந்த கேள்வி எழுப்ப வைத்துள்ளது. உன் மூலம் அவர்களுக்கு பதில் கிடைக்கும். பிறருக்கு தேவையானவற்றை அவர் கேட்டோ அல்லது பிறர் மூலம் அறிந்தோ தருவது தானம் எனப்படும். இது புண்ணிய கணக்கில் சேராது. ஏனெனில் இல்லாதவரும் இயலாதவரும் கேட்டபின் கொடை அளிப்பது என்பது ஒரு மன்னனின் கடமை.

ஆனால் எவரும் கேட்காமல் நாமாக ஒருவரின் நிலையறிந்து கொடுப்பது ‘தர்மம்’ இதுதான் புண்ணியம் தரும். இன்னும் எளிமையாக சொல்வதென்றால் பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது ‘தானம்’ .ஒருவரின் பசியை அறிந்தவர் கேட்காமலேயே அந்த பசியை போக்குவது ‘தர்மம்’ கர்ணன் பல தர்மங்களை செய்து புண்ணியம் ஈட்டியவன்தான். ஆனால் மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் ‘தானமாக’ கேட்டு வாங்கினாரே தவிர ‘தர்மமாக’ பெறவில்லை அனைத்து புண்ணியங்களையும் தானமாக தாரை வார்த்து கொடுத்தபின் கர்ணனும் ஒரு சாதாரண மனிதன் தான். அதனால் தான் மரணம் அவனை எளிதாக பற்றி கொண்டது” என்று கூறிய சிவபெருமானை வணங்கி நின்றார் சூரியன். அவரது மனதில் இருந்த குழப்பங்கள் அனைத்தும் நீங்கி இருந்தது.




What’s your Reaction?
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!