சோபகிருது வருடம் ஐப்பசி மாதம் 01 ஆம் தேதி புதன்கிழமை 18.10.2023, சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 12.54 வரை திருதியை. பின்னர் சதுர்த்தி. இன்று இரவு 08.52 வரை அனுஷம். பின்னர் கேட்டை. பரணி கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே!
தொழிலை விரிவுபடுத்த வேண்டும் என நினைக்கிறீர்களா, இப்போது செய்யாதீர்கள். கையில் இருக்கும் பொருட்களை பத்திரப்படுத்த தவறாதீர்கள் . அனாவசியமான செலவுகளை குறைத்துக் கொள்ளவில்லை எனில் கடன் வாங்கும் நிலைக்கு ஆளாவீர்கள். பங்குச்சந்தையில் ஈடுபடாதீர்கள். அடுத்தவரின் ஆசை வார்த்தைக்கு மயங்காதீர்கள். சந்திராஷ்டமம். கவனம் தேவை. விநாயகரை வழிபடுவதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறலாம்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே!
வெளியூர்ப் பிரயாணங்கள் தொழிலுக்குத் தேவையான வெற்றிகளைப் பெறுவீர்கள். இல்லத்தரசிகள் மூலமாக பணச்சுமையை குறைப்பீர்கள். ஆன்லைன் வர்த்தகங்கள் அதிக லாபத்தை அடைவீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். அரசுப்பணியாளர்கள் ஊக்கத்தொகை பெறுவீர்கள்.முருகப் பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
மிதுன ராசி அன்பர்களே!
புது நண்பர்களின் சேர்க்கையால் அதிக நன்மை அடைவீர்கள். வியாபாரம் வெற்றிகரமாக நடப்பதால் பொருளாதார மேம்பாடு காண்பீர்கள். உறவினர்களிடம் இருந்த மனக்கசப்பை பேச்சுவார்த்தையின் மூலம் அகற்றுவீர்கள். எதிர்ப்புகளைத் தாண்டி பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெற்று மகிழ்ச்சி அடைவீர்கள். சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க நன்மைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
கடக ராசி அன்பர்களே!
தேவையில்லாத கற்பனையால் துன்பப்படுவீர்கள். எந்த முடிவும் எடுக்க முடியாமல் தடுமாற்றம் அடைவீர்கள். அடுத்தவரின் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்காதீர்கள். சோம்பேறித்தனத்தை விலக்கிவிட்டு சுறுசுறுப்பாக வேலை செய்வீர்கள். அரசு ஊழியர்கள் நேர்மையைக் கடைப்பிடித்து பாராட்டை பெறுவீர்கள். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள். அம்பிகையை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே!
வெளிநாட்டில் இருந்து கிடைக்கும் பணத்தால் வியாபாரத்தை மாற்றி அமைப்பீர்கள். நிலத்தில் போட்ட முதலீடுகளால் வருமானத்தைப் பெருக்கி நிம்மதி அடைவீர்கள். வியூகம் அமைத்து தொழிலை நடத்துவீர்கள். வெற்றியும் பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்த இடையூறுகளை சரிப்படுத்துவீர்கள். பங்குச்சந்தை பரிவர்த்தனை வியாபாரத்தில் ஏற்றம் பெறுவீர்கள. இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் பல வகைகளிலும் நற்பலன்கள் அதிகரிக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாருடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி அன்பர்களே!
ஆசையுடன் கேட்ட ஆபரணத்தை வாங்கிக்கொடுத்து மனைவியை ஆனந்தத்தில் ஆழ்த்துவீர்கள். உறவினர்களின் ஒத்தாசையால் உற்சாகமாக இருப்பீர்கள். நண்பர்கள் மூலமாக நல்ல செய்தி பெறுவீர்கள். சகோதர உறவுகளில் இருந்த மனக்கசப்பை நீக்குவீர்கள். உங்களுக்கு எதிரான சிந்தனையில் இருந்தவர்களின் உதவியை பெறுவீர்கள்.மகாலட்சுமி வழிபாடு மனமகிழ்ச்சி தரும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.
துலா ராசி அன்பர்களே!
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்தை அதிகரிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாட்டை செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள். ஐடி பணியாளர்கள் கடினமான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொறுப்பாக வேலை செய்து புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
அடுத்தவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் அந்தஸ்தை அதிகரிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கை நிலைநாட்டுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாட்டை செய்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்க அட்வான்ஸ் கொடுப்பீர்கள். ஐடி பணியாளர்கள் கடினமான முயற்சியில் வெற்றி காண்பீர்கள். பொறுப்பாக வேலை செய்து புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள்.ஆறுமுகக் கடவுளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே!
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். வேலையிடத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். இடப்பிரச்சினையில் ஏற்பட்ட சச்சரவுக்காக காவல் நிலையம் செல்வீர்கள். வேலையில் அலட்சியமாக இருந்து அவஸ்தைப்படாதீர்கள். பைக் ஓட்டும்போது கவனத்தைச் சிதற விட்டு விபத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.அம்பிகையை தியானித்து நாளைத் தொடங்குவதன் மூலம் சிரமங்கள் நீங்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
மகர ராசி அன்பர்களே!
முறைப்புடன் இருந்த கணவன் மனைவி உறவை இறுக்கமாக மாற்றுவீர்கள். பெரியோர்களின் நல்லாசியால் ஊக்கம் பெறுவீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிப்பீர்கள். வெளிநாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை வெற்றிகரமாக செய்வீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். சிறு தொழில் வியாபாரிகள் அதிக பலன் அடைவீர்கள்.மகாவிஷ்ணுவை வழிபட, மகிழ்ச்சி கூடுதலாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
கும்பராசி அன்பர்களே!
பொங்கிவரும் அருவிபோல் பொருள் வரவை அதிகரிப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் கைக்கு கிடைத்து தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். குடும்பத்தில் இணக்கமாக இருந்து மனச்சங்கடத்தை மாற்றுவீர்கள். தனியார் துறையிலும் கணிசமான வருமானம் பெறுவீர்கள். சமுதாயத்தில் மதிப்பும் செல்வாக்கும் அடைவீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.
மீனராசி அன்பர்களே!
விரோதிகளின் எதிர்ப்பால் விசனப்படுவீர்கள். விடாமுயற்சியால் அதை முறியடிப்பீர்கள். எப்பாடுபட்டாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்றவில்லை என்றால் அவமானப்படுவீர்கள். வெளியூர்ப் பயணங்கள் வெறும் அலைச்சலை கொடுத்து சோர்வடைவீர்கள். அநாவசியமாக யாருக்கும் அறிவுரை கூறாதீர்கள். அதனால் பகையை சம்பாதிப்பீர்கள்.விநாயகரை வழிபட புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1