பீமனால் ஏற்பட்ட மோசமான காயங்களுடன் துரியோதனன் போர்க்களத்தில் படுத்துக் கொண்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவரால் பேச முடியாமல் தனது மூன்று விரல்களை உயர்த்திய நிலையிலேயே வைத்திருந்தார். அந்த மூன்று விரல்கள் உயர்த்தியதன் பொருளைப் புரிந்துகொள்ள அவரது ஆட்கள் முயற்சிகள் மேற்கொண்டும் பயனற்று போனது. அவரது அவலநிலையைப் பார்த்த கிருஷ்ணர் துரியோதனனிடம், “உன்னுடைய மனதில் உள்ள பிரச்சனைகளை நான் அறிவேன் அவற்றை நான் நிவர்த்தி செய்கிறேன்” என்றார்.
கேள்விகளும் அதற்கான பதில்களும்:
கிருஷ்ணர் துரியோதனனின் மூன்று கேள்விகளைத் தனது ஞானத்தால் அறிந்துக் கொண்டார். அவை
-
அஸ்தினாபுரத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டாதது,
-
விதுரனைப் போரில் ஈடுபடச் செய்யாதது,
-
துரோணரின் மரணத்திற்குப் பிறகு அஸ்வதாமனைத் தளபதியாக ஆக்காமல் இருந்தது. ஆனாலும் இவற்றைச் செய்திருந்தால் முறியடிக்க வியூகங்களும் கிருஷ்ணரிடம் இருந்தது.
அவர் அளித்த பதில்கள் இவை தான்: நீ அங்கு ஒரு கோட்டையைக் கட்டியிருந்தால், குதிரையைக் கொண்டு கோட்டையைத் தகர்க்க நகுலனிடம் அறிவுறுத்தியிருப்பேன் என்றும் விதுரனைப் போரில் பங்கேற்கச் செய்திருந்தால் நானும் போரில் ஈடுபட்டிருப்பேன் என்றும், நீங்கள் அஸ்வதாமனைத் தளபதியாக நியமித்திருந்தால், நான் யுதிஷ்டிரனின் கோபத்தைத் தூண்டியிருப்பேன் என்றார்.
துரியோதனன் நிம்மதியாக இறக்கக்கூடும்
கிருஷ்ணரின் இந்த பதில்களைக் கேட்ட துரியோதனன் மூன்று விரல்களையும் மூடிவிட்டு சில நொடிகளில் அவன் மரணித்தான். நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம் நகுலன் தனது குதிரையை கனமழையில் கூட ஈரமாக்காமல் ஓட்ட முடியும் என்பது அதோடு நனையாமல் மட்டுமல்ல ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் இடையில் வேகமாக பயணிக்கவும் முடியும். கௌவுரவர்கள் மற்றும் பாண்டவர்களில் நகுலனால் மட்டுமே இதனைச் செய்ய முடியும். யுதிஷ்டிரருக்குக் கோபம் வந்தால், அவரது கண் பார்வையால் அனைத்தையும் எரிக்க முடியும்.
What’s your Reaction?
+1
2
+1
4
+1
+1
+1
+1
+1