பிரபல நடிகர் மாரிமுத்து (செப்.8) காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை பார்த்த மருத்துவர் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அவர் கூறிய தகவல்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கின்றது. மட்டுமில்லாமல் விழிப்புணர்வு கொடுக்கும் வகையிலும் இருக்கிறது.
அப்படி என்ன அவர் பேசினார் என்று வாருங்கள் பார்ப்போம். அவர் கூறியதாவது, காலை சரியாக 08:25 மணிக்கு மாரிமுத்து அவர்கள் அவரே காரை ஓட்டிக்கொண்டு வந்து நிறுத்தினார்.
நிறுத்தியது தான் மிச்சம். அங்கிருந்து இறங்குவதற்கு அவர் மிகவும் கஷ்டப்பட்டார். எங்களுடைய மருத்துவமனை ஊழியர்கள் தான் அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு வந்தனர்.
அவர் காரிலிருந்து கொண்டு வரும் பொழுதே மயக்க நிலைக்கு சென்று விட்டார். வந்ததும் அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகளை கொடுத்தோம். உயிர் காக்கும் மருந்துகளை கொடுத்தோம்.
அவருடைய நாடித்துடிப்பு மீளவே இல்லை. கிட்டத்தட்ட ஒரு 15 நிமிடம் தொடர்ந்து அவருடைய இதயத்தை மீண்டும் துடிக்க வைக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டோம்.
இறுதியாக அவருக்கு சாக் கொடுத்து பார்க்கலாம் என்று முடிவு செய்து இரண்டு முறை சாக் கொடுத்தோம். அப்போதும் அவருடைய நாடித்துடிப்பு மீளவில்லை. ஒரு வேலை அவர் ஓட்டி வந்த காரை வேறு யாராவது ஓட்டி வந்திருந்தால்.. அவர் சற்று ஓய்வாக இருந்திருப்பார்.
அவருக்கு உண்டான அந்த கோல்டன் டைம் என்று சொல்லக்கூடிய அந்த நேரம் சற்று கூடுதலாகி இருக்கும். அவர் ஏற்கனவே பதட்டத்தில் மூச்சு திணறில் இருக்கிறார். அவரே வாகனத்தையும் இயக்கி வந்திருக்கிறார் என்பது துரதிஷ்டவசமானது.
அவர் ஏற்கனவே இரண்டு முறை ஆஞ்சியோ செய்து ஸ்டெண்ட் வைத்திருக்கிறார். அப்படி இருக்கும் பொழுது உடலை வருத்திக் கொள்ளக்கூடிய எந்த வேலையும் செய்யக்கூடாது.
கஷ்டப்பட்டு மூச்சு பிடித்து செய்யக்கூடிய வேலைகள் அதிகம் செய்யாமல் இருப்பது தான் நல்லது. அவர் தன்னை வருத்திக் கொள்ளக் கூடிய ஏதாவது ஒரு விஷயத்தை செய்திருக்க வேண்டும்.மிகவும் கஷ்டப்பட்டு ஒரு ஒரு வேலையை செய்திருப்பார். அதனால் தான் அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டு விட்டது.
ஒரு ஐந்து நிமிடம் முன்கூட்டியே மருத்துவமனைக்கு அவர் வந்திருந்தால் கூட அவர் உயிரோடு இருந்திருப்பார் என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார் மாரிமுத்து-விற்கு மருத்துவம் பார்த்த அந்த மருத்துவர்.
What’s your Reaction?
+1
+1
2
+1
+1
+1
+1
+1