14
மூன்று இடம் மாறி விட்டார்கள்.
இப்போது எஸ்தர் அப்பாவால் கிடைத்த உதவி மூலம் முக்கிய பேட்டி எடுக்கலாம் என கேரளா வந்தது தப்பாக போய் விட்டது.
‘இரண்டு நாளாய் அடி மனதில் இருந்த நினைவுகள் வெகுவாக என்னை அலைக் கழித்து விட்டனவே..’
“பாஸ்கரின் நினைவு என்னைக் கொல்வது மட்டுமல்லாமல் நிற்காது..நான் இப்படி இருந்தால் எனக்காகவே வாழும் அம்மா அப்பா நிலமை என்னாவது??”
” இப்போது பாஸ்கர் பற்றி சோஷியல் மீடியாவின் மூலம் கூட
கண்டுபிடிக்க முடியவில்லையே.. அடிக்கடி படம் போட்டு அசத்தும் அவனின் முகனூல் பக்கம் மூணு நாலு வருஷத்துக்கு முன்னாடி இருப்பது போலவே இருக்கே..”
“அவன் ஒருவேளை இப்போது உயிருடன் இல்லையோ..”
அந்த நினப்பு அவளுக்கு வர..
இனி இந்த பழைய போட்டோக்கள் அனைத்தையும் அழிப்பது தான் ஒரே வழி.. என அழித்தாள்.
‘நாளைக்கு என்ன கேள்வி கேட்கலாம்??.’
‘இவனை மறக்க அம்மா அப்பா சொல்வது போல வேறு ஒருவனை மணப்பது தான் சரி..’ என தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
‘ஒரு வேளை ஆண்டவனாகப் பார்த்து இப்படி ஒரு நாடகம் ஆடுகிறானோ ..இந்த எஸ்தர் ?, அவங்க அப்பா?, அவ சொல்வது போல அவளோட பாஸ் விபாகர்.??
‘நாளைக்கு காலை என்ன உடை உடுக்கலாம்’ என ஏற்கனவே தேர்ந்தெடுத்து இருந்த ஆரஞ்ச், பச்சை சுடிதார் செட் எடுத்து ஓட்டல் ரூமில் இருந்த அயர்ன் பாக்ஸில் லேசாக தேய்த்து ஹேங்கரில் மாட்டினாள்.
காலை உணவின் போதே ஆரம்பிக்க வேண்டுமே..
இயல்பாக பேசி அவரிடம் நல்ல பதில்களை பெற்று…
லேசாக கண்ணயர்ந்தாள்.
“நீங்க தான் எஸ்தர் சொன்ன வினயாவா??
கவலைப் படாதீங்க உங்க பேட்டிக்கு நான் உதவி செய்யறேன்.
அந்த கேமராவை என் கிட்ட கொடுங்க…நான் போட்டோ எடுக்கிறேன். நான் விபாகர்.”
“தெரியும் சார்..எஸ்தர் சொல்லி இருக்காங்க..எஸ்தர் எங்கே சார் ?.”
“அவங்க எம்.டி சார் கூட பேசிக் கிட்டிருக்காங்க..இன்னிக்கு அரசு அதிகாரி கூட மீட்டிங்..ஏதேதோ சொல்லிக் கொண்டு போக…”
அவனையே பார்த்துக் கொண்டு லேசாக வெட்கப் படத் துவங்கினாள்.
‘இவன் தான் என் வாழ்க்கையை மாற்றப் போகிறான்’ என நம்பினாள்.
“வினயா மேடம்.. .எஸ்தர் உங்க குடும்பத்தை பத்தி சொல்லிக் கிட்டிருந்தாங்க.. உங்களுக்கு சம்மதம்நா….”
“என்ன ஒரு மரியாதையா மேடம்நு சொல்றார்..”
என நினைக்கையில்…
படுக்கையில் இருந்த போன் ஒலித்தது கேட்டு கண் விழித்தாள்.
சே…கனவு..
அவன் முகத்தை நினைவு படுத்த முயன்று தோற்றாள்.
எஸ்தரை இறக்கி விட்டு போன நீல சட்டைக்காரரின் பின் பக்கத்தை வைத்து இவனின் உருவத்தை மீண்டும் கொண்டு வர பார்த்தாள்.
மீண்டும் போன் ஒலித்தது..
“இப்போ மூணு மணி..நீ சாப்பிட கூட வரலியே..ரூம்லயே சாப்பிட்டு விட்டயா..நாலு மணிக்கு மேல வெளியில் போகலாமா…”எதிர் முனையில் எஸ்தர்.
ஒகே..கா ..நான் ரெடியாயிடுறேன்.
அப்போது தான் தான் லஞ்ச் கூட சாப்பிடவில்லை என நினைவுக்கு வந்தது.. ஓட்டல் ஃப்ரிட்ஜில் இருந்து சில பிஸ்கட்கள் , ஒரு ஆப்பிள் சாப்பிட்டு காபி போட்டு சாப்பிட்டாள்.
“அக்கா..பீச் பக்கம் வேண்டாம்… லுலு மால்க்கு போகலாம் என்றாள்.
“ஒகே..எங்கேயோ போகலாம்..போரடிக்குதுப்பா..”
லுலு மாலுக்கு சென்று சுற்றி பல வகை பாதாம் பிஸ்தா எல்லாம் அம்மா அப்பாவுக்கு வாங்கினாள்.
“உங்க குழந்தைக்கு “என டாய் கன் ஒன்று வாங்கி கொடுத்தாள் எஸ்தரிடம்.
எத்தனை இருந்தாலும் அவனுக்கு துப்பாக்கிநா பைத்தியம்….தாத்தா மாதிரி போலிஸ் ஆகணும்.. என சொல்லிக் கிட்டிருப்பான்..
அங்கிருந்து கிளம்பி கம்பெனி காரில் பீச் பக்கம் போய் சாப்பிட்டு ஓட்டலுக்கு போகலாம் என முடிவெடுத்தார்கள்.
கன், போலீஸ் என்றவுடன் பிரகாஷ் மாமா நினைவுக்கு வர, அதனை போக்க…
“அக்கா..உங்க விபாகர் எப்படி இருப்பாரு.
போட்டோ இருக்கா…”
“இருக்குமே..என் பழைய போனில் நிறைய இருக்கு..ரூமுக்கு போனாவுட்டு காட்டறேன்..”
“இல்லக்கா…இன்று ஒரு உருவம் கனவில் வந்துச்சு..ஆனால் தெளிவா தெரியல..அதான்..”
“அய்..உனக்கு கல்யாண ஆசை வந்திருச்சா..உங்க அப்பா பாவம்… சொல்லிக் கிட்டிருப்பாரு.. பார்த்துடலாம் ..விபாகர் ரொம்ப நல்லவன்டி..”
“அப்பாக்கு சொல்லிடறேன். ரெண்டு குடும்பத்தையும் அப்பாக்கு தெரியுமே..நான் பேசி இந்த கல்யாணத்தை முடிக்கறேன்..
வா..இப்போ போட்டோ எடுக்கலாம்”
சில தனி போட்டோக்கள் எடுத்தனர்..
அப்போது அங்கே வந்த ஒருவனிடம் தங்கள் இருவரையும் போட்டோ எடுக்க கேமராவை கொடுக்க அவன் எடுக்கும் பாணியில் நின்று சட்டென கேமராவுடன் ஓட்டம் பிடித்தான்.
அவனை வினயா துரத்த அப்போது அங்கு வந்த காரில் அவன் ஏறினான்
வினயா அதற்குள் அவனை நெருங்க கார் கதவு திறந்து வினயா காரினுள் இழுக்கப்ட்டாள்.
கார் வேக மெடுத்து மறைந்தது எஸ்தரின் கண்ணிலிருந்து.காரின் உள்ளே இப்போது சதீஷின் கைப் பிடியில் வினயா…
What’s your Reaction?
+1
7
+1
13
+1
+1
+1
+1
+1
3