Cinema Entertainment

கார்த்திக்ராஜா இசையில் இவ்ளோ சூப்பரான பாடல்களா?

தமிழ் சினிமாவில் ஒரு இசை குடும்பமாக திகழ்வது இசைஞானியின் குடும்பம் தான். இசையில் ஜாம்பவானாக விளங்கும் இளையராஜாவின் இரண்டு மகன்களுமே பிரபல இசை அமைப்பாளர்கள் தான் மற்றும் அவருடைய மகளான பவதாரினி ஒரு பின்னணி பாடகி. ஆனால் யுவன் சங்கர் ராஜா பெற்றுள்ள அந்த ஒரு பெருமையை ஏனோ கார்த்திக் ராஜாவால் அடைய முடியவில்லை. இதில் இளையராஜாவிருக்கும் கொஞ்சம் வருத்தம் உண்டு என பல செய்திகள் எழுதி இருக்கின்றன.




அதுமட்டுமில்லாமல் தன்னுடைய அடுத்த இசை வாரிசு கார்த்திக் ராஜா தான் என்றும் இளையராஜா ஆசைப்பட்டாராம். ஆனால் அவரால் தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னேறி வர முடியவில்லை. ஒரு பிரபலத்தின் வாரிசாக இருந்தாலும் திறமையை நிரூபித்தால் மட்டுமே ரசிகர்களின் மனதில் இடம்பெற முடியும் என்பது உண்மைதான்.

ஆனால் கார்த்திக் ராஜாவிற்கு திறமை இருந்தும் அவரால் எட்ட வேண்டிய உயரத்தை அவரால் அடைய முடியவில்லை. ஆனால் அவர் இசையமைத்த பாடல்கள் ரசிகர்களின் மனதை துள்ளி ஆட வைத்திருக்கின்றது .கார்த்திக் ராஜாவின் இசையில் இத்தனை அருமையான பாடல்களா என்று இப்பொழுது யோசிக்க வைத்திருக்கிறது.

சில பாடல்களைக் கேட்கும்போது இது இளையராஜாவின் இசையில் உருவானது என நினைப்போம் ஆனால் அது கார்த்திக் ராஜா இசையமைத்த பாடல்கள் குறிப்பாக அமைதிப்படை, உழைப்பாளி, பொன்னுமணி போன்ற படங்களில் படங்களுக்கு எல்லாம் கார்த்திக் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் பாண்டியன் திரைப்படத்தில் அமைந்த பாண்டியனின் ராஜ்ஜியத்தில் என்ற பாடலுக்கு மெட்டமைத்தவர் கார்த்திக் ராஜா தான் என்பது யாரும் அறியப்படாத ஒரு தகவல்.




96க்கு பிறகு வரிசையாக படங்களுக்கு இசையமைத்து வந்த கார்த்திக் ராஜாவிற்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த படம் விக்ரம் அஜித் இணைந்து நடித்த உல்லாசம் திரைப்படம் தான். இந்தப் படத்தில் அமைந்த அத்தனை பாடல்களும் சூப்பர் சூப்பர் ஹிட். அதன் பிறகு இவரை மிஞ்சியவர் இசையில் யாரும் இல்லை என நினைத்துக் கொண்டிருந்த நேரம். காதலா காதலா உள்ளம் கொள்ளை போகுதே டும் டும் டும், நாம் இருவர் நமக்கு இருவர், வாஞ்சிநாதன் போன்ற பல படங்களுக்கு கார்த்திக் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் இந்தி கன்னடம் மலையாளம் தெலுங்கு ஆங்கிலம் என பழமொழிகளிலும் கார்த்திக் ராஜா இசை அமைத்திருக்கிறார் தற்போது மிஸ்ஸின் இயக்கி வரும் பிசாசு 2 என்ற படத்திலும் கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளாராம். அவர் இசையமைத்த பாடல்களில் இன்றும் நம் மனதை கொள்ளை கொண்ட பாடல்களாக செல்லமே செல்லமே என்றாயடி, வீசும் காற்றுக்கு பூவை தெரியாதா, ரகசியமாய் ரகசியமாய், என்ற பல பாடல்கள் இவரின் இசையை பறைசாற்றுகின்றன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!