சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 11.14 மணி வரை நவமி. பின்னர் தசமி. இன்று இரவு 09.48 மணி வரை விசாகம். பின்னர் அனுஷம்.அஸ்வினி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே!
நம்பியவர்களால் சில நேரம் ஏமாற்றப்படுவீர்கள். காதலியின் டார்ச்சரால் வேலையில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் சில சிக்கல்களில் இருந்து மீண்டு வருவீர்கள். வியாபாரிகள் பணம் புரட்ட சிரமப்படுவார்கள். சந்திராஷ்டம நாள். எந்த விஷயத்திலும் எச்சரிக்கையுடன் நடந்தால் நஷ்டத்தை தவிர்ப்பீர்கள்.விநாயகரை வழிபடுவதன் மூலம் அனுகூலப் பலன்களைப் பெறலாம்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.
பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் தாமதமாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே!
வீட்டில் திருமண நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி பண்ண அக்கறையுடன் வேலை பார்ப்பீர்கள். வெளிவட்டார செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமடைந்து போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கடன் சுமையை கணிசமாக குறைப்பீர்கள். முருகப் பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.
மிதுன ராசி அன்பர்களே!
சுவாச பிரச்சனையால் அவதிப்படுவீர்கள். தொழிலுக்கு மறைமுக எதிர்ப்புகள் தோன்றுவதால் சங்கடப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்கள். பெற்றோரின் மருத்துவ செலவுக்காக நகையை அடகு வைப்பீர்கள். சொத்து பிரச்சனைக்காக சகோதரர்களே கொடுக்கும் தொல்லைகளை சமாளிப்பீர்கள். சிவபெருமானை வழிபட்டு இன்றைய நாளைத் தொடங்க நன்மைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தெய்வ வழிபாடுகளை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.
கடக ராசி அன்பர்களே!
பிள்ளைகளின் பிரச்சனைக்காக பள்ளிக்கூடம் சென்று ஆசிரியரை சந்திப்பீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்வீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் மழலைச் செல்வம் கிடைத்து மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்கு தேவையான பண உதவியை நண்பர்களிடமிருந்து பெறுவீர்கள். வெளியூர் பயணங்களுக்காக குடும்பத்தை பிரிந்து செல்வீர்கள். அம்பிகையை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது நன்று.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது.
பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும்.
ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில சங்கடங்கள் உண்டாகும்.
சிம்ம ராசி அன்பர்களே!
எதிர்ப்பானவர்கள் நண்பர்கள் என இரு தரப்பிடமிருந்தும் உதவி பெறுவீர்கள். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் சாதனை படைப்பீர்கள். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்கி பத்திரம் போடுவீர்கள். வெளிவட்டார செல்வாக்கு அதிகரித்து பெரிய மனிதர்களை சந்திப்பீர்கள். நீண்ட காலமாக தொந்தரவு கொடுத்த கழுத்து வலியில் இருந்து விடுபடுவீர்கள். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவதன் மூலம் பல வகைகளிலும் நற்பலன்கள் அதிகரிக்கும்.
மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாயாருடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுக்குக் கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி அன்பர்களே!
திடீரென்று ஏற்பட்ட தடங்கலால் வெளியூர் பயணத்தை ஒத்தி போடுவீர்கள். நல்லது நினைத்து உதவி செய்யப் போய் அவப் பெயரை சுமப்பீர்கள். வியாபாரத்தில் மந்தமான நிலை காணப்பட்டு மனச் சங்கடம் அடைவீர்கள். காதலியின் தொந்தரவால் இரவு தூக்கத்தை தொலைப்பீர்கள். உறவினர்களை ஒன்று சேர்க்கும் முயற்சியில் தோல்வி அடைவீர்கள்.மகாலட்சுமி வழிபாடு மனமகிழ்ச்சி தரும்.
உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் தேவையைப் பூர்த்தி செய்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.
அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக நிறைவேறும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப் பிடிப்பது நல்லது.
துலா ராசி அன்பர்களே!
கலகலப்பாக பேசி பெண்களின் மனதை கவர்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன திருமண பேச்சு வார்த்தையை முடித்து வைப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த கூடுதலாக முதலீடு செய்வீர்கள். கடுமையாக உழைத்து வியாபாரத்தை பெருக்கி பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். மனதை அழுத்திய கவலையை மாற்றுவீர்கள்.இன்று லட்சுமி நரசிம்மரை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.
சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
கடன் வாங்கி கடனை அடைப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் தடுமாற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மூலமாக கிடைக்க வேண்டிய உதவிகளை தாமதமாக பெறுவீர்கள் வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தற்போது கைக்கு வராமல் சிரமப்படுவீர்கள். உற்பத்தியை பெருக்கி முதலாளியின் பாராட்டைப் பெற கடுமையாக பாடுபடுவீர்கள்.ஆறுமுகக் கடவுளை வழிபடுவதன் மூலம் நன்மைகள் கூடுதலாக நடைபெறும்.
விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.
கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே!
ரத்த அழுத்தம் அதிகமாகி உடல் நிலையில் பாதிப்பை அடைவீர்கள். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாட்டைச் செய்வீர்கள். நெருக்கு வட்டத்தில் வந்த திருமணப் பேச்சு வார்த்தை தள்ளிப் போவதால் விசனப்படுவீர்கள். சில்லரை வியாபாரிகள் மந்தமான வியாபாரத்தால் சிரமப்படுவீர்கள். ஐடியில் அலுப்பில்லாமல் வேலை பார்ப்பீர்கள்.அம்பிகையை தியானித்து நாளைத் தொடங்குவதன் மூலம் சிரமங்கள் நீங்கும்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக இருப்பது அவசியம்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்
மகர ராசி அன்பர்களே!
நீண்ட காலமாக கட்டி வந்த எல்ஐசி தொகையை தொழிலுக்காக எடுப்பீர்கள். வியாபாரத்தில் கிடைத்த லாபத்தைக் கொண்டு வீடு வாங்க முயற்சி செய்வீர்கள். தள்ளாட்டமாக இருந்த வியாபாரத்தை நண்பர்களின் உதவியால் நிலை நிறுத்துவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்க வேண்டிய பலன்கள் தாமதமின்றி வருவதால் சந்தோஷப்படுவீர்கள். மகாவிஷ்ணுவை வழிபட, மகிழ்ச்சி கூடுதலாகும்.
உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
கும்பராசி அன்பர்களே!
உங்களுக்கு பாதகம் விளைவித்த நபருக்கு உதவி செய்வீர்கள். கட்டுமானத் துறையில் வெற்றி பெறுவீர்கள். அரசாங்கத்தின் மூலமாகக் கிடைக்கவேண்டிய காண்ட்ராக்ட்கள் தடையின்றி பெறுவீர்கள். வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அபிரிமிதமான பலனை அடைவீர்கள். வெளியூர்களில் கிளைகள் திறக்க முயற்சி மேற்கொள்வீர்கள்.ஆஞ்சநேயரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் சில சங்கடங்கள் ஏற்படும்.
மீனராசி அன்பர்களே!
இழந்த பொருள்களை திரும்பப் பெறுவீர்கள். தொழில் ரீதியான வருமானத்தை அதிகரிப்பீர்கள். அரசு வகையில் வரவேண்டிய தொகைகளை உரிய நேரத்தில் பெறுவீர்கள். . வரவுகள் அதிகரிப்பதால் சேமிப்பை உயர்த்துவீர்கள். தக்க சமயத்தில் வங்கியில் இருந்து கடன் பெறுவீர்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த வேலை மாறுதல் கிடைத்து செல்வீர்கள்.விநாயகரை வழிபட புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும்.
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் வாங்குவதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1