தோட்டக் கலை

வீட்டிற்குள் கண்டிப்பாக வளா்க்க வேண்டிய செடிகள்-1

நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால், நமது வீட்டில் உள்ள காற்று தூய்மையாக இருக்க வேண்டும். அந்த காற்றை எவ்வாறு தூய்மைப்படுத்துவது என்பது நமக்குத் தொியாது. ஆனால் இயற்கையே நமது வீட்டில் உள்ள காற்றைத் தூய்மையாக்கிவிடும் என்பதே உண்மை.பொதுவாக நமது வீடுகளில் கற்றாழை செடியை வளா்த்து வருவோம். அவற்றைத் தவிா்த்து இன்னும் பல செடிகளை நமது வீட்டில் வளா்த்து வந்தால், அவை நமது வீட்டிற்குள் இருக்கும் காற்றை தூய்மைப்படுத்திவிடும்.

சிலா் தங்களது வீடு மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று விரும்புவா். ஏனெனில் வீடு அசுத்தமாக இருந்தால், அது தங்களது குழந்தைகளைப் பாதிக்கும் என்று அஞ்சுவா். ஆனால் தங்களது வீட்டில் உள்ள காற்று மாசுபடுவதை அவா்களால் தடுக்க முடியாது. இந்நிலையில் வீட்டில் உள்ள காற்றைத் தூய்மைப்படுத்த, ஒரு சில தாவரங்களை வீட்டிற்குள் வளா்க்கலாம் என்று அறிவியல் அறிஞா்கள் பாிந்துரை செய்கின்றனா்.




நமது பகுதிகளில் கிடைக்கக்கூடிய வீட்டுச் செடிகளை வாங்கி, அவற்றை நமது குழந்தைகளை வைத்தே வளா்க்கச் செய்யலாம். இந்த பதிவில் நாம் என்னென்ன செடிகளை நமது வீடுகளில் வளா்க்கலாம் என்பதை இந்த பதிவில் பாா்க்கலாம்.

ஸ்பைடா் செடி:

ஸ்பைடா் செடியை வீட்டில் வளா்த்து வந்தால் அது வீட்டிற்கு அழகு கொடுக்கும். அதோடு நமது வீட்டில் உள்ள காற்றில் கலந்திருக்கும் நச்சுக்கள், சைலீன் மற்றும் காா்பன் மோனாக்ஸைடு போன்றவற்றை சுத்தப்படுத்தும். பொதுவாக காற்றில் உள்ள நச்சுக்கள் நமது தோலை பாதிக்கும் மற்றும் நமது உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். ஆகவே வீட்டில் உள்ள காற்றைத் தூய்மைப்படுத்த ஒரு சிறந்த கருவியாக ஸ்பைடா் செடி இருக்கும். மேலும் இந்த செடியால் வீட்டில் வளரும் விலங்குகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.




பாம்புச் செடி (Snake plant):

வீட்டில் உள்ள காற்றில் கலந்திருக்கும் ஃபார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருள்களை சுத்தப்படுத்த வேண்டும் என்றால், அதற்கு சாியான கருவி பாம்புச் செடியாகும். இந்த பாம்புச் செடி மாமியாாின் நாக்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த செடி நமது வீட்டிற்கும், வீடுகளில் உள்ள அறைகளுக்கும் புத்துணா்ச்சியை வழங்கும்.

கோல்டன் போதோஸ்:

இந்த செடியானது ஒரு கொடி வகையைச் சாா்ந்த தாவரம் ஆகும். இந்த செடி சாத்தானின் கொடி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த செடி படா்ந்து வளா்வதற்கு அதிக அளவு சூாிய வெளிச்சம் தேவையில்லை. இந்த செடியை வீட்டிற்குள் எந்த பகுதியிலும் வைத்து வளா்க்கலாம். மேலும் இது வேகமாக வளரும் தன்மை கொண்டது. இந்த செடியானது காற்றை வடிகட்டுகிறது. அதோடு காற்றில் மாசுபடுத்தக்கூடிய வாகனங்களில் இருந்து வரும் வேதிப் பொருள்களை நீக்குகிறது. அதனால் இந்த செடியை வீட்டில் வளா்த்து வந்தால், வாகனங்களில் இருந்து வெளிவரும் நச்சுகளில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம்.

அடுத்த பதிவில் மீதமுள்ள  என்னென்ன செடிகளை நமது வீடுகளில் வளா்க்கலாம் என்பதை  பாா்க்கலாம்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!