தோட்டக் கலை

சௌ சௌ வளர்ப்பு முறை

சௌ சௌ ஒரு கொடிவகை தாவரம் ஆகும். சீமை கத்தரிக்காய் என்று பரவலாக அழைக்கப்படும் இந்த செள செளவின் பூர்விகம் மத்திய அமெரிக்கா ஆகும், ஐரோப்பியர்கள் மூலமாக தான் இந்தியாவில் அறிமுகம் ஆனது. அதிக வெப்பநிலை உள்ள பகுதிகள் மற்றும் குளிர்ச்சியான மலைப்பகுதியிலும் சௌ சௌ வளர்ப்பு செய்யப்படுகிறது. இந்த சௌ சௌ கடல் மட்டத்திலிருந்து சுமார் 1200 மீட்டர் முதல் 1500 மீட்டர் வரை உயரத்தில் வளரக்கூடியது.




மண்கலவை

சௌ சௌ விதைப்பு செய்ய சிறந்த மண்கலவை தயார் செய்வது அவசியமாகும். மக்கிய தொழு உரம் நாற்பது சதவிகிதம், செம்மண் நாற்பது சதவிகிதம் மற்றும் மணல் இருபது சதவிகிதம் ஆகிய மூன்றையும் சேர்த்து நன்கு கலந்து மண்கலவை தயார் செய்து கொள்ளவும். மக்கிய தொழு உரத்திற்கு பதிலாக செறிவூட்டப்பட்ட மண்புழு உரத்தை கூட பயன்படுத்தலாம்.




சௌ சௌ விதைப்பு

சௌ சௌ விதைப்பு செய்ய அதற்கென விதைகள் சேகரிக்க தேவையில்லை, நன்கு முற்றி சௌ சௌ காய்களை கொண்டே சௌ சௌ செடி வளர்ப்பு செய்யலாம், முற்றிய சௌ சௌ காயிலிருந்து சிறிது முளைப்பு விட்டு சௌ சௌ வளர்ந்திருக்கும் அந்த நிலையில் அதை அப்படியே மண்கலவையில் விதைப்பு செய்யலாம். சௌ சௌ செடிகளுக்கென தனியே பந்தலை மாடி தோட்டத்தில் அமைத்திடவேண்டும்.

சௌ சௌ வளர்ச்சி

சீமை கத்திரிக்காயை விதைப்பு செய்தது முதல் அதன் மீது தனி கவனம் தேவை, பூச்சிகள் ஏதும் தாக்காமல், வேர் பகுதிகளில் நீர் ஏதும் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். நன்கு பராமரித்தால் சௌ சௌ விதைத்த ஐந்து மாதம் முதல் ஆறு மாதங்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். இதன் காய்களை சாதாரணமான வெப்பநிலையில் இரண்டு முதல் நான்கு வாரங்கள் வரையில் கெடாமல் சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.




What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!