gowri panchangam Sprituality Uncategorized

இன்றைய ராசி பலன் (19.5.23)

நாளின் தொடக்கத்தில் நாம் நாளுக்குரிய ராசிபலனை அறிந்து கொண்டு அதற்கேற்றாற்போல் முன்னெச்சரிக்கை போல் சில செயல்களை திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும். கிரக நிலைக்கு ஏற்ப ராசி பலன் கணிக்கப்படுவதால், நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், உங்களுக்கான பலன்கள் எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய நாள் எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

மேஷ ராசி அன்பர்களே!

ஆதாயம் அடைவதற்காக குறுக்கு வழியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் பெற மாட்டீர்கள். ஆன்லைன் வர்த்தகங்களில் அதிகம் ஈடுபடாதீர்கள். சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். நட்பு வட்டங்களால் நல்ல அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அரசு வேலையில் மேலதிகாரிகளின் இடையூறுகளை எதிர்கொள்வீர்கள். அம்பிகையை வழிபட்டு நாளைத் தொடங்க, நற்பலன் அதிகரிக்கும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல்நலனில் கவனமாக இருக்கவும்.

ரிஷப ராசி அன்பர்களே!

அவசியமான காரியங்களுக்கு அதிகமாகச் செலவு செய்வீர்கள். ஒரு முறைக்கு இரு முறை அலைந்து வேலையை முடிப்பீர்கள். குடும்பத்தில் மருத்துவச் செலவு செய்வீர்கள். பூர்வீகச் சொத்துக்குப் போராட்டம் நடத்துவீர்கள். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு உண்டாகி வீட்டை விட்டு வெளியேறுவீர்கள். போதைப் பழக்கத்தால் தேவை இல்லாத சிக்கலில் சிக்குவீர்கள்.மகாலட்சுமியை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கக்கூடும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

மிதுன ராசி அன்பர்களே!

நிலையான வருமானம் பெறுவதற்கு திட்டம் தீட்டுவீர்கள். பெரியோர்களின் உதவியால் பொருள் சேர்க்கையை அதிகரிப்பீர்கள். சகோதர உறவுகளில் இருந்த பிரச்சனையை நீக்குவீர்கள். குடும்பத்தில் நிம்மதியான போக்கை நிலைநாட்டுவீர்கள். அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். அதில் ஓரளவு வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டு.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

கடக ராசி அன்பர்களே!

பலவழிகளில் பண வரவுக்கு வழி செய்வீர்கள். செய்ய வேண்டிய வேலைகளைத் தடையில்லாமல் முடிப்பீர்கள். ஆண் பெண் பழக்கத்தில் சிக்கலில் மாட்டுவீர்கள். கல்விக்காக வெளிநாடு செல்வீர்கள். நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புக்கு மருத்துவ பரிசோதனை செய்வீர்கள். புதிய தொழில் தொடங்குவதற்கான வங்கி வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். முருகப்பெருமானை வழிபடுவது நலம் தரும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வகையில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

மனக்குழப்பத்தால் தூக்கத்தை தொலைப்பீர்கள். தேவையற்ற பிரச்சனைகளை மனதிலிருந்து தூக்கி எறிவீர்கள். முடங்கிப்போன உங்கள் தொழிலை முன்னேற்ற பாடுபடுவீர்கள். அரசுப்பணியில் இடமாற்றம் பெறுவீர்கள். காதலி வேலை மாறுவதற்கு முயற்சி செய்வீர்கள். உறவுகளின் நம்பகத்தன்மையை இழப்பீர்கள். தடைபட்ட கல்வியைத் தொடர்வீர்கள்.இன்று நீங்கள் துர்கையை வழிபடுவதன் மூலம் சிரமங்கள் பெரிதும் குறையும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் சில பிரச்னைகள் ஏற்படும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி ராசி அன்பர்களே!

வியாபாரக் கூட்டாளிகளிடம் விழிப்புணர்வோடு இருக்க மறக்காதீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் மல்லுக்கட்டி நிற்காதீர்கள். கொடுக்கல் வாங்கல் தொழிலில் இரு மடங்கு எச்சரிக்கையாக செயல்படுவீர்கள். வாகனங்களில் ஏற்பட்ட பழுதை சரி செய்வீர்கள். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள். சிவபெருமானை வழிபட காரியங்கள் அனைத்தும் ஸித்தியாகும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிரிகளால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குக் கடன்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.

துலா ராசி அன்பர்களே!

கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் தொழிலை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். நில விற்பனையில் எதிர்பாராத லாபம் அடைவீர்கள். திருமண விஷயங்களில் இருந்த சிக்கலை பேச்சுவார்த்தையில் தீர்ப்பீர்கள். உயர் அதிகாரிகள் அன்பால் உற்சாகமாக வேலை பார்ப்பீர்கள். வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள்.  லட்சுமி நரசிம்மர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வாக்குவாதம் தவிர்க்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உணவு வகைகளால் அலர்ஜி ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

விருச்சிக ராசி அன்பர்களே!

“நெஞ்சம் உண்டு… நேர்மை உண்டு… ஓடு ராஜா” என உங்கள் போக்கில் காரியம் செய்வீர்கள். தொழிலுக்கு இடையூறாக இருப்பதை வெட்டி எறிவீர்கள். எந்தக் காரியத்திலும் ஆலோசித்து இறங்குவீர்கள். வெளியூர்ப் பயணங்களில் சாமர்த்தியமாக ஆர்டர் பிடிப்பீர்கள். பங்குச்சந்தையில் வியூகம் அமைத்து வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களை சிரமப்பட்டு அடைப்பீர்கள்.இன்று நீங்கள் துர்கையை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் விவாதம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

தனுசு ராசி அன்பர்களே!

உங்களுடைய புத்திசாலித்தனத்தால் வருமானத்தைப் பெருக்குவீர்கள். என்ன தடை வந்தாலும் தாண்டிச் செல்வீர்கள். குடும்ப நன்மைக்காக கடுமையாக உழைப்பீர்கள். வசதியான வீட்டுக்கு இடம் மாறுதல் செய்வீர்கள். மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் தொழிலில் மேன்மை அடைவீர்கள். பணத்தின் மதிப்பை இந்த நேரத்தில் நன்கு உணர்வீர்கள்.ஆஞ்சநேயரை தியானித்து இன்றைய நாளைத் தொடங்குவது சிறப்பு.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நீண்டநாளாக தடைப்பட்டு வந்த காரியம் சாதகமாக முடியும்.

மகர ராசி அன்பர்களே!

தொழிலுக்கு வேண்டிய முதலீடுகளை வங்கி மூலம் பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பை பெறுவீர்கள். உறவினர்கள் செய்யும் உள்குத்து வேலையால் குடும்பத்தில் உண்டான பிரச்சனையை சரிபடுத்துவீர்கள். தொழிலை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசனை செய்வீர்கள். தனியார் நிறுவனத்தில் தகுதியான சம்பளம் பெறுவீர்கள். மகாவிஷ்ணுவை வழிபடுவதன் மூலம் வீண் பிரச்னைகளில் இருந்து விடுபட முடியும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீண் அலைச்சலும் உடல் அசதியும் உண்டாகும்.

கும்பராசி அன்பர்களே!

“போனால் போகட்டும் போடா” என்ற மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் உழைப்பை குடும்பத்தில் உள்ளவர்கள் புரிந்து கொள்ளாததால் வேதனைப்படுவீர்கள். சகோதர உறவுகளால் சங்கடங்களைச் சந்திப்பீர்கள். நம்பியவர்கள் சில நேரம் துரோகிகளாக மாறினாலும் அதையும் சமாளித்து நிமிர்ந்து நிற்பீர்கள். இரவு பகல் பாராமல் வேலை பார்ப்பீர்கள்.இன்று பைரவர் வழிபாடு நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுடன் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி உற்சாகம் தருவதாக இருக்கும்.

மீன ராசி அன்பர்களே!

“காசேதான் கடவுளப்பா” என்று பணத்தைத் தேடி ஓடுவீர்கள். கடந்த கால கஷ்டத்தை விலக்க பாடுபடுவீர்கள். வியாபாரத்தை சீராக நடத்தி வருமானத்தை பெருக்கி மகிழ்ச்சியடைவீர்கள். நண்பர்களின் உதவியால் தொழிலில் வெற்றி பெறுவீர்கள். வெளியூர் பயணங்களில் புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். சகோதரிக்கு பண உதவி செய்வீர்கள்.தட்சிணாமூர்த்தியை வழிபட காரியத்தடைகள் விலகும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!