Beauty Tips

பெண்கள் தோலின் நிறம் நன்கு பளபளப்பாக மின்ன.. இதை ட்ரை பண்ணுங்கள்!

கோடை காலத்தில் முகம் குளிர்ச்சியாகவும், கருமை இல்லாமல் புத்துணர்ச்சியாகவும் இருந்தால் பெண்கள் கூடுதல்  குஷியுடனும்  முக மலர்ச்சியுடனும் இருப்பார்கள். பெண்களின் உடல் மற்றும் முகம் தோற்றம் அழகாக இருந்தால் அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொதுவாக நம் வீடுகளில் சந்தன பவுடரை ஆன்மீக விடயங்களுக்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த சந்தன பவுடரை பயன்படுத்தி பெண்களின் அழகை மேம்படுத்த என்ன செய்யலாம் என்பன குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.




தேவையான பொருட்கள்

சந்தன பவுடர்-1 டேபிள்ஸ்பூன்

கடலை மாவு-1 டேபிள் ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள்-சிறிதளவு

ரோஸ் வாட்டர்-தேவையான அளவு




முகத்திற்கு சந்தன பௌடர் தயாரிக்கும் முறை

  • ஒரு  கிண்ணத்தில் சுத்தமான சந்தன பவுடரை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன்  கடலை மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

  • இதனுடன் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு ரோஸ் வாட்டர் சேர்த்து அனைத்தையும் ஒரு பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ள வேண்டும்.

  • பிறகு இந்த பேஸ் பேக்கை பெண்கள் தங்களின் முகம் முழுக்க நன்கு தடவிக் கொண்டு, ஒரு 15 நிமிடம் வரை அப்படியே விட வேண்டும். பிறகு இதமான நீரைக் கொண்டு முகத்தை கழுவிக்கொள்ள வேண்டும்.

  • வாரம் 3 நாட்கள் செய்து வந்ததால் முகம் பளபள வென்று மின்னும் என்பதில் சந்தேகம் இல்லை. நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!