gowri panchangam Sprituality ராசிபலன்

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 – 2024 (துலாம் மற்றும் விருச்சிகம்)

சுக்கிர பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!! 

வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானமான 7-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே லாபம் (11-மிடம் ) சகோதரன் ,தைரியம் (3-மிடம்) ஜென்ம ராசி(1மிடம்) ஸ்தானங்களில் பதியும்.




இந்த குரு பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகளில் துலாம் ராசியும் ஒன்று. கடந்த ஒரு வருடமாக ஆறாம் இடத்திலிருந்து பல இடையூறுகளை தந்த குரு பகவான். சம சப்தமான ஏழாம் இடத்திற்கு வருவதால் கடன் சுமைகள் குறையும். கொடுத்த பணம் வசூல் ஆகும். மன நிம்மதி கிடைக்கும்.

பொதுவாகவே துலாம் ராசிக்காரர்கள் அனுபவசாலிகள் ஆவார்கள். பக்குவங்கள், நிறைய ஏற்றத்தாழ்வுகளை கண்டவர்கள். சிறு வயது முதலே உழைக்கத் தொடங்கி இருப்பார்கள். எதிலும் போராடி ஜெயித்து விடுவார்கள்.

குடும்பம்

ராசிக்கு குரு ஏழில் சஞ்சரிக்கும் காலத்தில் சுப காரியங்கள் கைகூடும். தடைபட்ட திருமணங்கள் தடையின்றி நடக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை நிலவும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். அழகான புத்திர பாக்கியம் அமையும். எதிர்பாராத பண வரவுகளால் வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். மனைவி வழியில் மேன்மை, குடும்பத்தில் சுபிட்சம், தொழில் லாபம் உண்டாகும்.




தொழில்

புதிய தொழில்கள் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்கள் செய்யலாம். சாஸ்திர கலைகளை கற்றறியும் வாய்ப்புகளும் உருவாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். மதிப்பு, அந்தஸ்து, கௌரவம் கூடும்.

ஆரோக்கியம்

குரு தான் நின்ற வீட்டை விட பார்க்கும் இடங்களும் பலம்பெறும் அவ்வகையில் ராசிக்கு ஐந்தாம் பார்வையாக 11 இடத்தை பார்ப்பதால், உடலில் அபாரமான நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். ஏற்கனவே இருந்த தீராத நோய்கள் நிரந்தரமாக குணமாகும். சிக்கலான நோய்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாக நிரந்தர தீர்வு கிடைக்கும். மூத்த சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பண சேமிப்பில் நாட்டம் காணப்படும்.

ராசிக்கு ஏழாம் பார்வையாக ஒன்றாம் இடத்தை பார்ப்பதால் சிந்தனை திறன் மேம்படும். அறிவாற்றல் மூலமாக பல காரியங்களை எளிதில் முடித்து காட்டுவீர்கள். தன்னிச்சையாக எந்த முடிவும் எடுப்பீர்கள். உடல் எடை குறைப்பு ,உடல் நலன் அக்கறை, நேரத்துக்கான உணவு சரியான முறையில் அமைவதால் உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

ஒன்பதாம் பார்வையாக மூன்றாம் இடத்தை பார்ப்பதால், தகவல் தொழில்நுட்பங்கள் மூலமாக சிறப்பான பலன்களை அடையலாம். ஷேர் மார்க்கெட். ஆன்லைன் மூலமாக வருமானம் வரக்கூடும். கடன்கள் விரைவில் அடைபடும். விற்காத சொத்துக்கள் எளிதில் விற்பனையாகும். சிலருக்கு வெளிநாடுகளில் வேலை வாய்ப்புகளும் உருவாகும். வேலை இழந்தவர்களுக்கு புதிய வேலை கிடைத்து மனமகிழ்ச்சி உண்டாகும்.

பரிகாரம்

வாரம் தோறும் வெள்ளிக்கிழமையில் அருகில் இருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று அர்ச்சனை செய்து வாருங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் குடியிருக்கும் நேரம் கிடைத்தால் பௌர்ணமி திதியில் குலதெய்வ கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.




செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!! 

வரும் குரு பெயர்ச்சி உங்களுக்கு எப்படிப்பட்ட பலன்களை வழங்கப் போகிறது என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

குருபகவான் உங்கள் ராசிக்கு 2 மற்றும் 5-ம் இடத்துக்கு அதிபதி ஆவார். இப்போதைய பெயர்ச்சியில் உங்கள் ராசிக்கு நோய் -கடன் -எதிரி ஸ்தானமான 6-வது இடத்திற்கு செல்கிறார். அவருடைய சிறப்பு பார்வைகள் உங்கள் ராசிக்கு முறையே தொழில் (10-மிடம் ) குடும்பம் ,வாக்கு (2-மிடம்) விரயம் -தூக்கம் (12மிடம்) ஸ்தானங்களில் பதியும்.




தொழில்

ஐந்தாம் இடத்தில் இருந்து நற்பலன்களை வழங்கி வந்த குருபகவான் தற்பொழுது ஆறாம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். குரு ஆறில் சஞ்சரிக்கும் காலத்தில் தேவையற்ற விரோதங்கள், மனக்கசப்புகள், எதிர்ப்புகள் உருவாகும். உடல் நிலையில் சிறுசிறு பாதிப்புகள், பணக்கஷ்டம். இடம் விட்டு இடம் செல்லும் அமைப்பு, பகைவர் மற்றும் கடன்காரர்களால் அதிக தொல்லைகள், எதிர்பார்த்த பண வரவுகளில் தடை, வம்பு வழக்கில் ஈடுபட வேண்டிய நிலைகள் உருவாகும்.

ஆரோக்கியம்

ஜாதகத்தில் ஆறாம் இடம் என்பது நோய்களை குறிப்பிடும். ஒருவர் ஜாதகத்தில் ஆறாம் பாவகம் சுத்தமாக இருந்தால் அந்த நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். சின்ன சின்ன காய்ச்சல்கள், ஜலதோஷம், வாயு பிரச்சனை தவிர பெரிய அளவில் நோய்கள் வராது. கண்டறியப்படக்கூடிய வியாதிகள் மட்டுமே உருவாகும். மருந்துகளால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தாலும் குருவின் பலம் நன்றாக இருந்தாலும் இந்த குரு பெயர்ச்சியின் தாக்கம் பெரிய அளவில் இருக்காது.

விருச்சிக ராசிக்காரர்கள் இயல்பாகவே குறும்புத்தனம் மிக்கவர்களாக இருப்பார்கள். பிடிவாத குணம் அதிகமாக கொண்டவர்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் அலட்டிக் கொள்ள மாட்டார்கள். எதையும் விடாப்பிடியாக நின்று சாதிப்பார்கள். இவர்களுக்கு சேமிப்பில் அதிக அக்கறை இருக்கும். யாருடைய பணமாவது இவர் கையில் புழங்கிக் கொண்டே இருக்கும்.

குருவின் பார்வை பலன்கள்

குரு பகவான் ஐந்தாம் பார்வையாக பத்தாம் இடத்தை பார்ப்பதால் தொழில் வருமானம் நன்றாக இருக்கும். புதிய தொழில் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும். தொழில் விரிவாக்கம் செய்யலாம். புதிய வியாபாரத்தில் யுக்திகளை கையாளுவீர்கள்.




குடும்பம்

குரு பகவான் ஏழாம் பார்வையாக 12-ம் வீட்டை பார்ப்பதால் வீண் விரயங்கள் தவிர்க்கப்படும். வெளிநாடு யோகம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். மனைவி, பிள்ளைகளின் பெயரில் சொத்துக்கள் வாங்குவது சிறப்பு. சுப விரயங்களால் மன மகிழ்ச்சி உண்டாகும்.

குரு பகவான் 9 ஆம் பார்வையாக இரண்டாம் இடமான தனஸ்தானத்தை பார்ப்பதால் பண வருவாய் நன்றாக இருக்கும். முதலீடுகள் செய்யலாம். பணம் கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். தனது குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணம் சேமிப்பில் நாட்டம் உண்டாகும். ஆபரண சேர்க்கை உண்டாகும். சிலருக்கு வீடு கட்டும் நிலை வரும்.

பரிகாரம்

வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை முருகன் கோயில்களில் இருக்கும் நவகிரக சன்னதிக்கு சென்று செவ்வாய் பகவானுக்கு அர்ச்சனை செய்து, முருகப்பெருமானை வழிபாடு செய்து வாருங்கள். ஒரு முறை திருச்செந்தூர் சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.




What’s your Reaction?
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!