gowri panchangam Sprituality ராசிபலன்

இன்றைய ராசி பலன் (12.4.23)

சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார். இன்று அதிகாலை 04.15 மணி வரை சஷ்டி. பின்னர் சப்தமி. இன்று காலை 11.11 மணி வரை மூலம். பின்னர் பூராடம். ரோகிணி, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷ ராசி அன்பர்களே!

புதிய பொறுப்புகளை அடைவீர்கள். குழப்பமும் சந்தேகமும் இல்லாமல் திட்டமிட்டு செயல்படுவீர்கள். மறைமுகமாக மட்டம் தட்ட நினைப்பவர்களுக்கு நல்ல பாடம் கற்பிப்பீர்கள். பாராட்டும் பதவியும் உங்களைத் தேடி வந்து மகிழ்ச்சி அடைவீர்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். வியாபாரத்தில் லாபம் பெறுவீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபடுவது நன்று.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படக்கூடும்.

ரிஷப ராசி அன்பர்களே!

கவனமாக நடக்காவிட்டால் கையில் இருக்கும் பணத்தை இழப்பீர்கள். எதையும் குறுக்கு வழியில் அடைய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நியாயம் உங்கள் பக்கம் இருந்தாலும் ஆறப்போட்டு அவசியமான வார்த்தைகளைப் பேச மறக்காதீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் பாதகம் அடைவீர்கள். சந்திராஷ்டமம் நாள். நிதானமாக செயல்பட தவறாதீர்கள்.போதுமான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படும். சிவ வழிபாடு சிரமங்களைக் குறைக்கும்.

கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் பணவரவு உண்டு.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் சுமுகமாகப் பழகுவது அவசியம்.

மிதுன ராசி அன்பர்களே!

பழைய கடன்களைச் சுலபமாக பைசல் செய்வீர்கள். இளம் வயதினர் தன்னிச்சையாக முடிவு எடுக்காதீர்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவி சங்கடங்கள் மறைந்து தன்னம்பிக்கையுடன் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். தொழிலுக்கு வேண்டிய உதவிகளை பெறுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். அரசுப் பணியில் பதவி உயர்வு, சம்பள உயர்வு அடைவீர்கள். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்சனைகளும் ஏற்படக்கூடும். மாலையில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகத்தான் இருக்கும். மகாலட்சுமியை வழிபட சிறப்பான பலன்கள் ஏற்படும்.

மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கடக ராசி அன்பர்களே!

சுணங்கிக் கிடந்த வீட்டு வேலைகளை சுறுசுறுப்பாக நடத்துவீர்கள். சுபகாரியத் தடைகள் நீங்கி சொந்தங்களை வரவழைப்பீர்கள். ரத்த உறவுகள் இடையே உங்கள் செல்வாக்கை அதிகரிப்பீர்கள். வியாபாரத்தில் இனந்தெரியாத எதிர்ப்புகளை சந்திப்பீர்கள். தொழில் போட்டிகளை வெற்றிகரமாக முறியடிப்பீர்கள். முக்கிய கடன்களை சிரமப்பட்டு அடைப்பீர்கள்.தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள்.  நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக்கும். ஆஞ்சநேயர் வழிபடுவது நன்று.

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் சற்று கவனம் கொள்ளவும்.

சிம்ம ராசி அன்பர்களே!

வேலை இடங்களில் இருந்த சிக்கலை விலக்குவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் அக்கறை காட்டுவீர்கள். பிறரின் தனிப்பட்ட விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். ஆன்லைன் வர்த்தகத்தில் அளவோடு ஈடுபடுவீர்கள். போட்டி பந்தயங்களில் இருந்து விலகி விடுவீர்கள். ஐடி ஊழியர்கள் அதிக எச்சரிக்கையுடன் பணியாற்றுவீர்கள். பிறரை நம்பி காரியம் செய்யாதீர்கள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு ஒன்று எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். தட்சிணாமூர்த்தி வழிபாடு நலம் சேர்க்கும்.

மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் வதந்திகளைப் பொருட்படுத்தாமல் இருப்பது நல்லது.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் அவ்வப்போது சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முக்கிய முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்கவும்.

கன்னி ராசி அன்பர்களே!

இல்லத்தில் நல்ல காரியங்கள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். உண்மையான நண்பர்களால் உதவி பெறுவீர்கள். வெளியூர்ப் பயணங்களளில் தொழிலுக்குச் சாதகமான பலனை அடைவீர்கள். அரசுத்துறை சம்பந்தப்பட்டவர்கள் அற்புதமான வாய்ப்பை பெறுவீர்கள். பண வரவுகளை சீர்படுத்துவீர்கள். பங்குப் பரிவர்த்தனையில் லாபம் பெறுவீர்கள்.இன்று நீங்கள் தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை பக்கபலமாக இருப்பார். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அம்பிகை வழிபாடு நற்பலன்களை அதிகரிக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைப்பது தாமதமாகும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.

துலா ராசி அன்பர்களே!

பணியிடத்தில் உங்கள் பொறுமைக்குப் பரிசாக உயர்வு ஏற்பட்டு உற்சாகமடைவீர்கள். திட்டமிட்டு நேரம் தவறாமல் செயல்படுவீகள். பணத்தைக் கையாளும் போது கூடுதல் கவனத்தோடு செயல்படுவீர்கள். அலுவலக ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். காதலியின் அரவணைப்பால் களிப்படைவீர்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.  மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் சற்றுக் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். லட்சுமி நரசிம்மரை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

விருச்சிக ராசி அன்பர்களே!

தோல்வியில் துவண்டு இருந்த நீங்கள் தொட்ட காரியங்கள் எல்லாவற்றிலும் ஏற்றம் பெறுவீர்கள். வார்த்தை வசியத்தால் மரியாதையை கூட்டுவீர்கள். வெளிச் செல்வாக்கை அதிகரித்துக் கொள்வீர்கள். மனைவியின் குதிகால் வலிக்கு தீர்வு ஏற்பட்டதால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலுக்குத் தேவையான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். சகோதரர்களிடம் நீண்ட நாள்களாக எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் கூடுதலாக இருக்கும். விநாயகரை வழிபட காரியங்கள் அனுகூலமாகும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் அலைச்சலும் செலவும் ஏற்படக்கூடும்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.

தனுசு ராசி அன்பர்களே!

வங்கியில் எதிர்பார்த்த கடன் சம்பந்தப்பட்ட விவரங்களில் இழுபறி ஏற்பட்டு சிரமப்படுவீர்கள். தொழில் வரியை முறையாக செலுத்த மறக்காதீர்கள். வேலை இடங்களில் வீண் விவாதங்கள் செய்யாதீர்கள். வியாபாரம் மந்தமாக நடப்பதால் மனக்கவலை அடைவீர்கள். குடும்பத்தினர் உங்களை புரிந்து கொள்ளாமல் நடப்பதால் மனச்சஞ்சலம் கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண் டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற் படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சற்று தாமதமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். பைரவரை வழிபடுவது நன்று.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் அனுகூலம் உண்டாகும்.

மகர ராசி அன்பர்களே!

சட்டத்திற்குப் புறம்பான நிலங்களை வாங்காதீர்கள் . பங்குச்சந்தை வியாபாரத்தில் பாதகமாக நிலையை பார்ப்பீர்கள். கொடுத்த கடனை திருப்பிக் கேட்டால் பகைக்கு ஆளாவீர்கள். நண்பர்களிடம் வாங்கிய கடனை செலுத்தி நாணயமாக நடந்து கொள்ள மறக்காதீர்கள். வேலை செய்யும் இடத்தில் விழுந்து கை கால்களளில் சிறிய காயமடைவீர்கள்.தேவையான பணம் கையில் இருந்தாலும், தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியில் செல்ல நேரிட்டால் நன்றாக திட்டமிட்டுக்கொண்டு கவனமாக செல்லவும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருந்தாலும், பணியாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும். ஆஞ்சநேயர் வழிபாடு நன்று.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டு.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்.

கும்பராசி அன்பர்களே!

பேச்சுவார்த்தை மூலமாக பெரிய சாதனை புரிவீர்கள். ஆடை ஆபரணங்கள் வாங்கி பெண்களை மகிழ்ச்சிப்படுத்துவீர்கள். படிப்பிற்காக பிள்ளைகளை வெளிநாடு அனுப்ப ஏற்பாடு செய்வீர்கள். பங்குச் சந்தை முதலீடுகளில் லாபத்தை அடைவீர்கள். வியாபாரத்திற்காக கேட்ட பணத்தை பெறுவீர்கள். காதலியின் மனம் கோணாமல் அன்பாக நடப்பீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள். குடும்பம் தொடர்பான முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். சிவபெருமானை வழிபட நற்பலன்கள் அதிகரிக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண் விவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையுடன் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியம்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணத்தின்போது கவனமாக இருக்கவும்.

மீன ராசி அன்பர்களே!

இரக்க சிந்தனையோடு ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வீர்கள். உறவுகளைப் பலப்படுத்த உற்சாகமாகப் பேசுவீர்கள். சகோதர சகோதரிகளுக்கு பக்கபலமாக இருப்பீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களின் மூலம் தொழிலுக்குத் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். புதிய வீடு கட்ட திட்டமிடுவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். மகாவிஷ்ணு வழிபாடு மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தந்தையின் உடல்நலனில் கவனம் செலுத்தவும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!