ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில், நந்தியால் புகைவண்டி நிலையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீசைலம் (திருப்பதம்). இத் தலத்தில் அம்பிகையின் கழுத்துப் பகுதி விழுந்ததாகக் கூறப்படுகிறது. சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடல்பெற்ற இத்தலம் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.
பருப்பதநாதர் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். பருப்பத நாயகி, பிரமராம்பாள் என்று இத்தல அம்பிகை அழைக்கப்படுகிறார். ‘செல்லூர் வரிய சிவன் ஸ்ரீ பர்ப்பத மலையை’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் ஸ்ரீசைல மலையைப் போற்றிப் பாடியுள்ளார்.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
+1
+1